search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife"

    • 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார ஆகியவற்றை கூறி சம்மதிக்க வைத்தார்.
    • பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து கணவன் அங்கு சென்றுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் கணவன் சிறுநீரகத்தை விற்று பணத்துடன் காதலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் பகுதியில் வசித்துவரும் பெண், வீட்டின் நிதிசூழலை காரணம் காட்டி தந்து கணவனை சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    மகளுக்கு 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்வது என பல்வேறு விஷயங்களை கூறி கணவனுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

    சுமார் ஒரு வருடமாக சிறுநீரகத்தை வாங்குபவரை தேடிய கணவன், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றார். அதன்பின் அந்த பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று வந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனுடன் ஓடிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கணவன்பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.

    பலமுறை முயற்சித்தபின் கடைசியாக மனைவி கதவை திறந்து அங்கிருந்து போகுமாறும் விரைவில் விவாகரத்து நோட்டிஸ் வழங்குகிறேன் எனவும் கூறி கணவனை துரத்தியுள்ளார். மனமுடைந்த கணவன் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • தான் பேசும் நிலையில் இல்லாததால், எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார்.
    • தனது மைத்துனர் மற்றும் மாமியார் மீதும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா கிராமத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட பயங்கர திருப்பம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மதுராவில் உள்ள கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக, கணவன், மனைவியின் உதடுகளை பற்களால் கொடூரமாக கடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் உதட்டில் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டனர்.

    பாதிக்கப்பட்ட பெண், தான் பேசும் நிலையில் இல்லாததால்,எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். கணவருடன் சேர்ந்து, தனது மைத்துனர் மற்றும் மாமியார் மீதும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது,  கணவர் விஷ்ணு வீட்டிற்கு வந்து எந்த காரணமும் இல்லாமல் சண்டையிட்ட்டார். தான் சமாதானம் செய்ய முயன்றும் கணவன் தன்னை அடிக்கத் தொடங்கினான்.

    அவரது சகோதரி காப்பாற்ற முயன்றபோது, கணவன் சகோதரியையும் அடித்தான். இதற்கிடையில் கணவன் திடீரென தன்னை தாக்கி உதட்டைக் கடித்ததால் ரத்தம் கொட்டியது என்று அப்பெண் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவனின் தாக்குதலை மாமியாரும் மைத்துனரும் தடுக்கவில்லை என்று அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

    • சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
    • குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர்.

    பணத்துக்காக தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய கணவன் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குலாதியைச் சேர்ந்த நபரை அந்த பெண் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.

    பெண்ணின் கணவர் வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவார்.

    இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் நண்பர்கள் இருவருடன் வீட்டுக்கு வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக அவரது புகாரில் கூறியுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் தன்னை வன்கொடுமை செய்யும்போது அதை வீடியோ பதிவாக தனது கணவர் சவூதி அரேபியாவில் தனது மொபைல் போனில் பார்ப்பார் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    அவர் என்னை விவாகரத்து செய்வதாக மிரட்டியதால், எனது குழந்தைகளுக்காக நான் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவர் சவூதியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கொடுமை பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

    எனவே அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் புலந்த்ஷாஹர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஷ்லோக் குமாரைச் சந்தித்து தங்களின் துயரத்தை விவரித்தனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

    • ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?.
    • வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும்.

    L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் "உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வர்த்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.

    ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.

    சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கருத்து தெரிவித்துள்ளார் #MentalHealthMatters என்பதை பதிவிட்டு "இவ்வளவு மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?.
    • வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்.

    இந்தியாவில் அரசு நிறுவனங்களில் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களிலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. தனியார் நிறுவனங்களில் ஞாயிறு மட்டும் விடுமுறையாகும்.

    உலகளாவிய போட்டியால் ஐ.டி. உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களை குறைத்து அதிக நேரம் வேலை பார்க்க வைக்கலாமா என ஐ.டி. நிறுவனங்கள் எண்ணுகின்றன.

     இன்போசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் வந்தன. சாதகமான கருத்துகளும் வந்தனர்.

    கடந்த வாரம் அதானி வாரத்திற்கு 70 மணி நேர வேலை குறித்து பேசும்போது "உங்கள் வேலை வாழ்க்கை- சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை- வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன். ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை.

    உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை. மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும். உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் 90 மணி நேரம் வேலைப் பார்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை கூட போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    L&T நிறுவனம் ஏன் சனிக்கிழமை தனது பணியாளர்களை வேலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது குறித்து கேட்ட கேள்விக்கு எஸ்.என். சுப்ரமணியன் கூறியதாவது:-

    உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வர்த்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.

    ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.

    சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்தார்.

    இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறா்கள்.

    • பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
    • சோயப் அகமது மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேசத்தில் ரூ.5000 வரதட்சணை தரமுடியாததால் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உசைன்பூர் கிராமத்தில் கடந்த மாதம் சோயப் அகமது என்ற 25 இளைஞருக்கும் தரன்னும் என்ற 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி மாமியாரின் வீட்டிற்கு சென்ற சோயப் அகமது தனக்கு 5000 ரூபாய் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினரால் அப்பணத்தை கொடுக்க முடியவில்லை.

    பின்னர் கோபத்துடன் வீட்டிற்கு சென்ற சோயப் அகமது தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சோயப் அகமது மற்றும் அவரது தந்தை அனீஸ் அகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகள் குஷ்புவிடம் துணி மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறியதாகவும் கூறியுள்ளார்
    • வழக்கு பற்றி அறிந்ததும் ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்குச் வந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவி பிச்சைக்காரர் ஒருவருடன் ஓடிவிட்டதாக கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்த்தவர் ஆறு பிள்ளைகளின் தாயான 36 வயது ராஜேஸ்வரி. இவரை ஜனவரி 3 முதல் காணவில்லை.

    அவரது கணவர் ராஜு, ஜனவரி 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார், மனைவி, 45 வயது பிச்சைக்காரரான நான்ஹே பண்டிட்- உடன் அடிக்கடி தொடர்பு கொண்டார் என்று குற்றம் சாட்டினார். எருமை மாட்டை விற்று தான் சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு மனைவி அந்த பிச்சைக்காரருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கணவர் தெரிவித்துள்ளார்.

    ராஜேஸ்வரி, மகள் குஷ்புவிடம் துணி மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறியதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து பாரதீய நியாய சந்ஹிதாவின் பிரிவு 87 இன் கீழ் கடத்தல் FIR பதிவு செய்யப்பட்டது.

    வழக்கு பற்றி அறிந்ததும் ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்குச் வந்து வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

    தனது கணவர் தன்மீது தினந்தோறும் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டார் என்றும் சித்ரவதையில் இருந்து தப்பிக்க பரூக்காபாத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். யாருடனும் தான் வெளியேறவில்லை என்றும் நான்ஹே பண்டிட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

    ராஜேஸ்வரியின் கணவர் குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை. இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். 

    • இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வீட்டின் மொட்டை மாடியில் வேறு ஒருவருடன் மனைவி இருந்ததை பார்த்த கணவன் ஆத்திரத்தில் வன்முறையை கையில் எடுத்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள அவர்களின் வீட்டின் மொட்டை மாடியில் தனது மனைவியுடன் இருந்த அந்த இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.

    இதையடுத்து அந்த இளைஞரை அடித்தும் உதைத்தும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை மன்னித்து விடுமாறும் இனி அங்கு திருப்பி வரவே மாட்டேன் என்றும் அவர்களிடம் இளைஞன் கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 மணி நேரம் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார்
    • இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.

    ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரபல முன்னணி சர்ச்சை தொழிலதிபர் கௌதம் அதானி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உங்கள் வேலை வாழ்க்கை சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன்.

    ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை. உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை.

     

     மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும்.

     

    உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.

    • இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
    • உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார்.

    மகாராஷ்டிராவில் பிரசவத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே[32 வயது]. இவரது மனைவி மைனா [Maina] குண்ட்லிக். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் இல்லாததால் மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மைனாவுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. 3 வது முறையாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் குண்ட்லிக் உத்தம் காலே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடந்த வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் மைனா மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.

    உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார். அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் [வெள்ளிக்கிழமை] அவர் உயிரிழந்தார். மைனாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவன் குண்ட்லிக் உத்தம் காலேவை கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103 (கொலை வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்

    கணவனின் வீட்டில் அவரது விருப்பத்திற்கு மாறாக மனைவி தனது தோழி மற்றும் குடும்பத்தினரை தங்க வைப்பது மன ரீதியான கொடுமை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த தீரஜ் குயின்ம் தனுஸ்ரீ மஜூம்தார் ஆகிய இருவருக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது.

    தீரஜ் குயின் வேலை செய்து வந்த பணியிடத்தில் அவருக்கு கோலாகாட் பகுதியில் கோட்டரஸ் வீடு வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியுடன் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

    ஆனால் மனைவி தனது தோழி மௌசுமி பால் என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் வீட்டிலேயே வீட்டில் தங்க வைத்துள்ளார். கணவனுக்கு இது பிடிக்காத போதிலும் மனைவிக்காக சகித்துக்கொண்டு அவர்களுடன் தனது வீட்டில் வாழ்ந்துள்ளார். இது இப்படியிருக்க தாம்பத்தியத்திற்கோ, கணவனுடன் நேரம் செலவிடவோ மனைவி விரும்பவில்லை. பல நாள் தொடர்ச்சியாக அவர் வீடு தங்குவதில்லை.

    அந்த சமயங்களிலும் மனைவியின் தோழி மற்றும் அவரது குடும்பத்துடன் சகித்துக்கொண்டே கணவர் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்த அவர் கடைசியாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இதை எதிர்பாராத மனைவி, கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    எனவே கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனு விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வரதட்சணை கொடுமை வழக்கில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

     

    அந்த மனு இன்று நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தனது மனைவி, அவரது தோழி, அவரது குடும்பத்தினர் என தனக்கு நேர்ந்த கொடுமைகளை அடுக்கியுள்ளார்.

    கணவரின் சம்மதம் இல்லாமல் அவரது வீட்டில் மூன்றாவது நபரை மனைவி தங்க வைத்தது மன ரீதியான கொடுமை. மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலோ தாம்பத்தியத்திலோ குறைந்தது கணவனுடன் நேரம் செலவிடவோ மனைவிக்கு ஈடுபாடு இல்லை என தெரிகிறது.

    இதுவும் கொடுமையாகவே பாவிக்கட்டும் என கூறி கணவனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டனர். மேலும் கணவன் விவாகரத்து கோரிய பிறகே மனைவி வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளதால் அது போலியானது என யூகிக்க முடிவதாக கூறி விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தனர். 

    • நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்
    • ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.

    சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர்.

    அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டாம்ஸகஸையும் கைப்பற்றினர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

    அன்றைய தினமே அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தனக்கு முற்காலங்களில் உதவி வந்த ரஷியாவில் ஆசாத் குடும்பதோடு தஞ்சம் அடைந்துள்ளார்.

    ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். கிளர்ச்சிக் குழுவினர் புதிய தலைமையை உருவாக்கி வருகின்றனர்.

    ஆட்சி அதிகாரத்தை இழந்து, பிறந்த நாட்டையும் இழந்து நாடு கடத்தப்பட்டு ரஷிய தலைநகர் மாஸ்க்கோவில் ஆசாத்[59 வயது] தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரிடமிருந்து அவரது மனைவி அஸ்மா அல்-அசாத்[49 வயது] விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரஷியாவில் தனது கணவன் ஆசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது பிறந்த மண்ணுக்கு [லண்டனுக்கு] திரும்ப விருப்புவதாக துருக்கி, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     

     

     

    அஸ்மா, ரஷிய நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது, தற்போது அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் உள்ளது.

    சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் பிரிட்டிஷ்-சிரிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.

    லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்து முதலீட்டு வங்கியில் வேலை செய்துவந்த அஸ்மா, டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். அந்த வருடமே ஆசாத் சிரியாவின் அதிபர் ஆனார்.

    அசாத்கள்- ஒரு அலாவைட் குடும்பம் - வரலாற்று ரீதியாக சன்னி மக்கள் அதிகம் உள்ள சிரியாவில் ஆதிக்கம் செலுத்தியது. ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.

    இப்போது மாஸ்கோவில் புகலிடத்தின் கீழ் வசிக்கும் பஷர் அல்-அசாத், ரஷ்ய அதிகாரிகளால் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்.

    அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் 270 கிலோகிராம் தங்கம், $2 பில்லியன் ரொக்கம் மற்றும் மாஸ்கோவில் உள்ள 18 சொத்துக்கள் உள்ளிட்ட அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர். 

    ×