என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவைத்து எரிப்பு"

    • இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
    • பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

    பிரதமர் சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேபாள முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனல் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிரிழந்தார்.

    • அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
    • தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்டனாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ஷோபா தேவி.

    ஜானிபூரில் தனது கணவன் லாலன் குமார் குப்தா, அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மாலை ஷோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அந்நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அஞ்சலி, அன்ஷ் ஆகிய இருவரையும் தீவைத்து எரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் சுபேர் அகமது (வயது45). இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது வீட்டுக்கு எதிரே நேற்று இரவு 3 கார்களை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக 3 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபேர் அகமது, உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    ஆனாலும் 3 கார்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அதிர்ஷ்டவசமாக தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் எரிந்து நாசமான 3 கார்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சுபேர் அகமது மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் மேலப்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஜமாத் நிர்வாகிகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று மேலப்பாளையத்தில் இறந்தவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த பிரச்சினையின் எதிரொலியாக தவ்ஹீத் ஜமாத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் சுபேர் அகமதுவின் 3 கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.



    ×