search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cars"

    • பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன
    • கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்கள் 3,35,324 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    தொழில்துறை மதிப்பீட்டின்படி இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனையான 3,35,324 யூனிட்களை விட 11.3 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன விற்பனையில் 3-வது சிறந்த மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.

    உள்ளூர் சந்தையில் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. மஹிந்திரா வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்கள் மாதாந்திர விற்பனை 23,300 ஆக உள்ளது

    • சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முன்னே சென்று கொண்டிருந்த கார் ஓன்று திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னே வந்த மற்றொரு கார், மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
    • வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.

    பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.

    • 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
    • மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பும் ஒன்று. இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் கார் எப்படி ஏற்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட பணிகள் முடிவடைந்துள்ளது. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.

    விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கை திறந்து வைப்பார்.

    இதில் 56 கார்கள் நிறுத்தி வைக்கலாம்.

    இது தவிர வளாகத்தில் 10 கார்களை நிறுத்தி வைக்கலாம். கார்களை நிறுத்தி வைப்பதற்கு மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

    மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி , செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

    மோட்டாா் வாகனச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மா னத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

     மஹிந்திரா கார்

    கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.



    கார் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக வென்யூ என்ற மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் அதிகபட்ச தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    ஹூண்டாய் வெர்னா, ஐ20, சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸென்ட் என அனைத்து மாடல் கார்களுக்கும் தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடல் 2017-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்தது. 



    இந்த ஆண்டு அக்டோபரில் புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 வர இருக்கிறது. இந்நிலையில் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.95,000 வரை தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு ரூ. 85,000 வரை தள்ளுபடி கிடைக்க உள்ளது. வெர்னா மாடலுக்கு ரூ.30,000 சான்ட்ரோ மாடலுக்கு ரூ.31,000 தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் ஐ 20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய மாடல் கார்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
    குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். #Diamondtradergifts #Cars #DiwaliBonus
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

    தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் வீடுகள், தங்க நகைகள், கார்கள், பைக்குகள் போன்றவற்றை தீபாவளி போனசாக வழங்கி ஊக்குவிப்பது வழக்கம்.
     
    இந்நிலையில், குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனசாக கார்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்து கொள்கிறார்.

    இந்த ஆண்டு மொத்தம் 600 ஊழியர்களுக்கு கார்கள் பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதி மாருதி சுசூகி கார்களும், மற்றவை சாலினோ வகை கார்களாகும்.



    இதில் குறிப்பிட்ட சிலருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கார்களுக்கான சாவிகளை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதுதொடர்பாக டோலாகியா கூறுகையில், வைர கற்களை பிரிப்பது, செதுக்குவது போன்ற அடிப்படை வேலைகளை கற்று, படிப்படியாக முன்னேறி முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்களது பணி மற்றும் நேர்மையைப் பாராட்டும் வகையில் கார்களை பரிசளித்து வருகிறேன். இது பிற ஊழியர்களையும் ஊக்குவிக்கும் என அவர் கூறினார். #DiwaliBonus #DiamondTrader

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்துக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியா உருவெடுக்கலாம் என்பதால் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கம்பஷன் இன்ஜின்களுக்கான தயாரிப்பு பணிகளை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தை நிறைவேற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

    மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்தலாம். இத்துடன் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவாக இருக்கும்.


    கோப்பு படம்: மெர்சிடிஸ் பென்ஸ் EQ கான்செப்ட்

    அடுத்த ஆண்டு வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய பிரான்டு EQ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பிரான்டு ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை வெளியிட தயார் நிலையில் இருக்கிறது. EQ பிரான்டு மாடல்கள் முழுவதும் எதிர்கால பேட்டரி-எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

    இதன் பிளாட்ஃபார்ம் புதிய ஒற்றை வடிவமைப்பை சார்ந்து இருக்கும் என்றும், இதே போன்ற வடிவமைப்பு அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய மாடல்களில் சில வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் சுபேர் அகமது (வயது45). இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது வீட்டுக்கு எதிரே நேற்று இரவு 3 கார்களை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக 3 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபேர் அகமது, உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    ஆனாலும் 3 கார்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அதிர்ஷ்டவசமாக தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் எரிந்து நாசமான 3 கார்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சுபேர் அகமது மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் மேலப்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஜமாத் நிர்வாகிகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று மேலப்பாளையத்தில் இறந்தவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த பிரச்சினையின் எதிரொலியாக தவ்ஹீத் ஜமாத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் சுபேர் அகமதுவின் 3 கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.



    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்படும் டோனியின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் தொகுப்புகள் அனைவரையும் வியப்படையச் செய்கின்றன. #MahendraSinghDhoni ‏
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் முழுப்பெயர், மகேந்திர சிங் டோனி. ஆனால் இவரது சிறப்பான மற்றும் நிதானமாக கேப்டன் பண்பு காரணமாக கேப்டன் கூல் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனித்திறமை கொண்டவர். கிரிக்கெட் மீது மிகுந்த அன்பு கொண்ட டோனி, அதே காதலை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் வைத்திருக்கிறார்.

    டோனி பொதுவாக சொகுசு கார்கள் மீது ஆர்வம் கொண்டவர். அவரிடம் பல கார்கள் உள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்ப்போம்.

    ஹம்மர் H2:


    டோனியிடம் உள்ள கார்களில் மிகவும் கவர்ச்சியான கார் இதுவாகும். தனது சொந்த ஊரில் டோனி இதனை அதிகம் பயன்படுத்துவார். இது சாலையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

    மகேந்திரா ஸ்கார்பியோ:


    இது டோனியிடன் உள்ள மிக எளிமையான கார். இது சாதாரணமாக ஸ்கார்பியோ போன்று இல்லாமல் டோனிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரக்கூடிய இந்த காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    ஆடி Q7:


    ஆடி கார் ஜெர்மன் நாட்டில் உற்பத்தியாகும் சொகுசு கார். இது அவர் அதிகமாக பயன்படுத்தும் கார்களில் ஒன்று. இது பழைய மாடல் கார்.

    லண்ட் ரோவர் பிரீலண்டர் 2:


    இதுவும் மிகச்சிறந்த சொகுசு கார். இதன் சிறப்பு அம்சங்கள் மிகவும் பிரபலமானது.

    டோனியிடம் உலகின் மிகச்சிறந்த பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

    யமகா RD350:



    டோனிக்கு மிகவும் பிடித்த பைக் இது. அவரிடம் இரண்டு யமகா உள்ளது. அவர் பல முறை இதனை சுத்தம் மற்றும் சரி செய்வார். இவர் வாங்கிய முதல் பைக் இது. அதனை 4,500 ரூபாய்க்கு வாங்கினார்.

    கான்பிடரேட் ஹெல்காட் X32:


    இது மிகவும் அரிய பைக்காகும். இது மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டோனி பல முறை ரேஸ் செய்துள்ளார். இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும்.

    ஹார்லி-டேவிட்சன் பட்பாய்:


    இந்த பைக்கில் டோனி தனது சொந்த ஊரை சுற்றி வருவார். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

    பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார்:


    இது அவருடைய மோட்டார் சைக்கிள் தொகுப்புகளில் தலைச்சிறந்தது.

    கவாசாகி நின்ஜா ZX14R


    இது மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள்.

    யமகா FZ-1:


    டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் அதிக நாட்கள் சென்னையில் தங்குகிறார். ஸ்டேடியத்திற்கு இந்த பைக்கில் தான் வருகிறார்.

    கவாசாகி நின்ஜா H2:


    இது டோனி சமீபத்தில் வாங்கிய பைக். பைக்கின் புகைப்படங்களை டோனி தனதுசமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாயாகும். #MahendraSinghDhoni
    ×