என் மலர்

    நீங்கள் தேடியது "patna"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காப்பக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். #BiharShelter
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அதிக காய்ச்சல் காரணமாக இரு பெண்களும் பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது தெரிய வந்தது.

    இரு பெண்கள் இறந்தது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பீகார் மாநிலத்தில் நாட்டையே உலுக்கிய காப்பகத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு காப்பகத்தில் 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். #AasraShelterHome #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முசாபர்ப்பூர் எனும் பகுதியில் இயங்கி வந்த சிறுமியர் காப்பகத்தில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டது சிறுமிகள் என்பதும் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நேபாளி நகர் எனும் பகுதியில் இயங்கிவரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக அந்த பெண்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போதே அவர்கள் உயிரிழந்ததாகவும் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால், அந்த 2 பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே மரணம் அடைந்து இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

    முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடியதாகவும், காப்பகத்தின் அருகில் இருப்பவரின் தொந்தரவு காரணமாக அவர்கள் தப்பியோடியதாகவும் காப்பகம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. #AasraShelterHome #Bihar
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு ஜாமீன் பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
    ×