search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opposition"

    • எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கதுறை சோதனை செய்து கைது செய்கிறது- சவுகதா ராய்
    • சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது- பிரியங்கா சதுர்வேதி

    பாராளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கதுறை சோதனை செய்து கைது செய்கிறது. இதுவரை அமலாக்கத்துறையால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

    தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள தலைவர்களை வேட்டையாட முயற்சிக்கிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:-

    சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது. கவர்னர் அலுவலகத்தை மத்திய அரசு எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதை இது காட்டுகிறது.

    போராடுபவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் ரிங்கு கூறியதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்று அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் இதுவரை அமலாக்கதுறை எதையும் தெளிவுப்படுத்தவில்லை. எனவே இதை கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இன்று பா.ஜ.க.-வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது.
    • அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    விராலிமலை

    விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் நீதிமன்றமாக இயங்கி வந்த அந்த கட்டடம் காலப்போக்கில் பத்திரப்பதிவு அலுவலகமாக மாற்றப்பட்டு இன்றளவும் உறுதி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    பழங்கால பர்மா தேக்கு உள்ளிட்ட உறுதியான அக்கால பொருட்கள் கொண்டு கட்டப்பட்ட அந்த அலுவலக கட்டடம் இன்றும் உறுதி தன்மையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    உதரணமாக கடந்த 1967- ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது புதுக்கோட்டை நியூ இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் முன் வடிவுக்கு மன்னர் காலத்தில் எழுதி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டய ஆவணம் தற்போதைய விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவுக்கு பின்னர் மீண்டும் கருவறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து விராலிமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார்.

    ஜெயராமன், அய்யாதுரை, மணி, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜன் பங்கேற்று ஆர்பாட்டத்தை தொடங்கிவைத்து கட்டடத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில், பழமை வாய்ந்த புராதன சின்னமாக போற்றி பாதுகாக்க வேண்டிய கட்டிடத்தை இடிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றும்.கட்டடம் அருகில் பயன்பாடற்று இருக்கும் இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும், பழைய கட்டிடத்தை ஆவண காப்பகமாக பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

    • அரியலூர் சிமெண்ட் ஆலைக்கான சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது
    • நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது என எதிர்ப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம், நெருஞ்சிக்கோரை, பெரியநாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜநகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம மக்கள் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நடத்தவுள்ளது.எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் சாலை நாகராஜபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் தற்போது கட்டிட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றும் உள்ளது.

    கடந்த 6-ந் தேதி இந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி நாகராஜபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியும் திறக்கப்பட்டது. மேலும் அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையமும் திறக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கு திறந்திருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்தவரிடம் பள்ளியில் வேலை நடந்து வரும் நிலையில், வேலையை முடிக்காமல் எப்படி பள்ளிைய திறக்கலாம் என கேட்டனர்.

    மேலும் பள்ளியை உடனே மூட வேண்டும். வேலை முடிந்த பின்னர் திறக்க வேண்டும் என்றனர். ெதாடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டிட வேலைகள் முடிக்கும் வரை பள்ளி திறக்கப்படாது என்றும், அதுவரை அருகில் உள்ள வேறு இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • இன்னாத்துக்க ன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
    • அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் விமானப்ப டைத்தளம் அமைந்துள்ளது.

    இந்த விமானப்படை தளத்திற்கு கூடுதலாக சுற்றுச்சுவர் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்னாத்துக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மீதமுள்ள சாலையும் கையகப்ப டுத்தப்பட்டு சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.

    இன்று காலை இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இனாத்துக்கான்பட்டி பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர் .

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், சாலையை கையகப்படுத்தி சுற்று சுவர் கட்டுவதால் நாங்கள் நகருக்குள் செல்ல வேண்டு மென்றால் வேறு வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது .

    இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

    1எனவே எங்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இதனை ஏற்று க்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவ த்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீரங்கம் உத்தர வீதிகளில் புதிதாக கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது
    • மாநகராட்சி ஆணையரிடம் ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தினர் மனு அளித்தனர்

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் திருச்சி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தி நாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது;-ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் ஏற்கனவே கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 3 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இந்த நிலையில் கீழ் உத்தர வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் வேதாந்த தேசிகர் சன்னதி அருகில் புதிதாக ஒரு கழிப்பறையும், வடக்கு உத்தர வீதியில் ஸ்ரீ ராமானுஜ ஐயர் மடத்திற்கு எதிரில் மற்றொரு பொது கழிப்பறையும் மாநகராட்சி நிர்வாகத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது.இதனால் 4 உத்தர வீதிகளில் வசிக்கும் மக்களும் மிகுந்த அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்.இந்த வீதிகளில் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.பழமையான மடங்கள் ஆச்சாரியார்களின் சன்னதிகள், பாடசாலைகள் உள்ளன.உத்தரவீதிகளில் கழிவுநீர் வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை.இதனால் மழைக்காலங்களில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் புதிதாக 2 கழிப்பறைகளை உத்தர வீதிகளில் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கும் தை தேரோட்டத்திற்கும் திருவிழாக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும். ஏற்கனவே உத்தர வீதிகளில் கழிப்பறைகள் அமைக்க நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளோம்ஆகவே கோவிலுக்கு சொந்தமான மாற்று இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டினால் நல்லது.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற வாய்ப்பு
    • மாநிலத்தில் நேருக்குநேர் மோதும் சூழல் குறித்து ஆராய்தல்

    டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மும்பையில் வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ''நான் மும்பைக்குச் செல்வேன். அங்கு நடப்பதை தங்களிடம் தெரிவிப்பேன்'' என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

    மும்பையில் நடைபெற இருக்கும் இருநாள் கூட்டம், கர்நாடகாவில் நடைபெற்றதுபோல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்நாள் அனைத்து தலைவர்களும் மும்பை செல்வார்கள். இரண்டாவது நாள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து முடிவு எடுப்பார்கள்.

    இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நேருக்குநேர் மோதும் சூழ்நிலை குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தை உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நடத்துகின்றன. இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

    • ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.

    இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாளில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை
    • எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது பிரதமர் மோடி ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை கையில் எடுப்பார்

    மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படும் நாளில், அர்ப்பணித்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், காலனித்துவம் முடிவுக்கு வர இது முக்கிய பங்காற்றியது.

    இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது ஊழலே வெளியேறு. வாரிசு அரசியலே வெளியேறு. தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகள் என்றாலே ஊழல், வாரிசு அரசியல், சமாதானம் என்பதுதான் என பிரதமர் மோடி அடிக்கடி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளையனே வெளியேறு தினத்தில் எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்துள்ளார்.

    • மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைத்துள்ளது
    • நாட்டின் பெயரை வைத்துள்ளதால் பொதுநல மனு

    பாராளுமன்ற தேர்தல்  அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு முறை பிரதமராகிய மோடி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்து வருகிறார். இந்தமுறை எப்படியாவது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இதனால் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கர்நாடகாவில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. எனப் பெயர் வைக்கப்பட்டது.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் கிளம்பியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொது நல மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
    • கர்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை,

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-கர்நாடகாவில் தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் காவிரிஆற்றில் மேகதாது இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்துள்ளனர் . அதற்கு தமிழக முதல்வர் கண்டனம்தெரிவிக்காமல் அங்கு சென்று வந்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார். காவிரி விசயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழக அமைச்சர் கள் முதல்வருக்கு அழுத்தம் தரவேண்டும். இல்லையெனில் புதுக்கோட் டையில் அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கர்நாடகாவில் 2012 பாஜக அரசு அணை கட்டும் பணிகளை ஆரம்பித்த போது அதற்கு தமிழக பாஜக சார்பாக எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் குருஸ்ரீராம், மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், மாநில பொதுக்குழு மயில் சுதாகர், தரவு மேலாண்மை மாநில செயலாளர் கார்த்திகேயன், நகரத்தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு தலைவர் கோவேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.

    • எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.

    அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.

    ×