என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் பினராயி விஜயன்"

    • இந்தத் தாக்குதலை இடதுசாரி ஜனநாயக முன்னணி கண்டித்துள்ளன.
    • பினராயி விஜயன், அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நடத்தியப் போராட்டத்தில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மருத்துவ அலட்சிய சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என கடந்த ஒருவாரமாக காங்கிரஸ் போரட்டம் நடத்திவருகிறது.

    இந்நிலையில் கண்ணூரில் ரயில் ஏற சென்ற அவரை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது ரயில் நிலையத்தில் இருந்த மாநில சட்டமன்ற சபாநாயகர் ஷம்சீர், அமைச்சரின் கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    உடனே அமைச்சர் வீணா சார்ஜ் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.ஜெயராமன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் வீணா சார்ஜை நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



     

    • பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
    • எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக  300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார். 

    இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். 

    ×