search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Pinarayi Vijayan"

    பெண்களின் மாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பார் என்று வெளியான தகவலுக்கு அம்மாநில அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #AarpoAarthavam #Hurraymenses #KeralaCM #celebratingmenstruation #Sabarimala #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பையடுத்து, ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற பல பெண்களை சில அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றுவது எங்கள் அரசின் கடமை. தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்கமாக அறிவித்தார்.

    தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக மாநில அரசின் ஆதரவுடன் கேரளாவின் பல மாவட்டங்களை உள்ளடக்கி தென்முனை எல்லைப்பகுதியில் இருந்து வடமுனை எல்லைப்பகுதி வரை சுமார் 620 கிலோமீட்டர் தூரத்துக்கு மனித மதில் சுவர் நிகழ்ச்சியும் ஜனவரி முதல் தேதியன்று நடைபெற்றது. இதில் சுமார் 35 லட்சம் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.



    மாதவிலக்கு காலத்தில் அசுத்தமானவர்கள் என்று கருதப்படுவதால்தான் பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க ஒருதரப்பினர் மறுத்து வருகின்றனர். இந்த மனப்போக்கை தகர்த்தெறிய வேண்டும் என கருதிய ஒரு பிரிவினர் மாதவிலக்கை மகிமைப்படுத்தும் 'ஆர்ப்போ ஆர்த்தவம்’ என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    கொச்சி மாவட்டத்தில் இன்றும் நாளையும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 'ஆர்ப்போ ஆர்த்தவம்’ நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்பார் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். இன்றைய நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.

    இந்நிலையில், நாளைய நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு இன்று பதிலளித்த அம்மாநில அரசின் உயரதிகாரிகள், ‘முதல் மந்திரி பினராயி விஜயன் நாளை 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவரது நிகழ்ச்சி நிரல் பட்டியலில் 'ஆர்ப்போ ஆர்த்தவம்’ இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் இடதுசாரி கொள்கையில் மிகதீவிரமான பற்றுள்ள பலவேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கவுள்ளதால் இதில் கலந்து கொள்ளாமல் பினராயி விஜயன் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. #AarpoAarthavam #Hurraymenses #KeralaCM #celebratingmenstruation #Sabarimala #AyyappaTempl
    கேரளாவில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் சதாசிவம், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. 
     
    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. 

    இதற்கிடையே, நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதுதொடர்பாக, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தால் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.



    கேரளாவில் வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 300க்கு மேற்பட்டவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது.

    இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்கக் கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறி வருகின்றனர். கேரளா முழுவதிலும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாஜகவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



    இந்நிலையில், கேரளா பாஜகவினர் இன்று முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பாஜகவினர் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

    இதையடுத்து, அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாஜகவினரை விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
    சபரிமலை பக்தர்கள் மீது போலீசாரை வைத்து அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலத்தின் கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று கேரளாவில் மத நம்பிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கொடுமை ஆகியவற்றிற்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்.



    இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை.  எனவே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது என தெரிவித்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #MKStalin
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அந்த கட்சியின் எம்.பி.க்கள், தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

    உங்களுடைய இந்த உதவிக்கு கேரள மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #DMKMLAs #DMKMPs #KeralaFlood #KeralaCM #PinarayiVijayan
    கேரளாவில் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    இலங்கை கடற்குதி அருகேயுள்ள அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதன் எதிரொலியாக கேரளாவின் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தகுந்த காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை தள்ளி வைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று முதல்வர் பினராயி விஜயனுடன் கோவில் நிர்வாகம் ஆலோசிக்க உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

    இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பினராயி விஜயன் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

    கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    கோப்புப்படம்

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ரூ.738 கோடி நிதி வந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப் போட்ட பேய் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை முப்படை வீரர்களும், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர்.

    தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கேரள மந்திரி சபை கூட்டம் நடந்தது.

    இதில் கேரள வெள்ளப் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கவும் கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள சேத நிலவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு இப்போது ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

    வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.

    கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.

    கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள். கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan

    கேரளாவில் மழை பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 30-ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaSpecialAssembly
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பேய் மழை பெய்தது. 11 நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இயற்கை சீற்றத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சமூக ஆர்வலர்களும் களம் இறங்கினர்.

    இவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் சேர்த்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    கேரளாவில் பேய் மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டு ஏராளமான பயிர் நிலங்கள் சேதம் ஆனது. சாலைகள், பாலங்கள், ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநில அரசு எடுத்த முதற்கட்ட கணக்கீட்டில் மழை சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மழையால் இதுவரை 368 பேர் பலியாகி விட்டதாகவும் மாநில அரசு தெரிவித்தது. இன்னும் மண்ணுக்குள் புதைந்தவர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கண்டு பிடிக்கப்படாதவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    எனவே கேரளாவை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியது. இதை ஏற்ற மத்திய அரசு தற்போது கேரளாவை அதிதீவிர இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளது.

    இதன் மூலம் கேரளாவுக்கு கூடுதல் நிவாரண உதவிகள் கிடைக்கும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய சாலைகள், ரெயில் பாதைகள், பாலங்கள் செப்பனிடும் பணியிலும் மத்திய அரசு உதவி செய்யும்.

    மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இன்று முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் மந்திரி சபை அவசர கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மழை நிவாரணப் பணிகள் மற்றும் மத்திய அரசிடம் கூடுதலாக நிவாரண நிதி கேட்பது, சுகாதார திட்டங்களை நிறைவேற்ற உதவி கோருவது, சாலைகளை செப்பனிடுவது குறித்த திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.



    இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், கேரளாவில் மழை பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த அமைச்சரவையில் முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும், சிறப்பு சட்டசபை கூட்டம் தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார்.

    ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, இன்று மாலை திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் நிறைவேற்றப்பட வேண்டிய உடனடி நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. #KeralaFloods #KeralaSpecialAssembly
    கேரளா மாநிலம் வெள்ள பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு விடும் என நம்புவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மாநிலம் விரைவில் மீண்டு வரும் என நம்புவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன்.

    கேரளாவில் பெய்துள்ள கனமழை மற்றும் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22,034 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளம் வடிந்தால் தான் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில அரசு இன்று 10 கோடி ரூபாய் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    சண்டிகர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்படட் வெள்ளத்தில் சிக்கி 164 பேர் பலியாகி உள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக, கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பொருள்கள் உள்ளிட்ட பிற பொருள்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியுடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    ×