என் மலர்
நீங்கள் தேடியது "CM Pinarayi Vijayan"
- பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
- எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.




கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அந்த கட்சியின் எம்.பி.க்கள், தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.
உங்களுடைய இந்த உதவிக்கு கேரள மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #DMKMLAs #DMKMPs #KeralaFlood #KeralaCM #PinarayiVijayan
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.
பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
கேரளாவை புரட்டிப் போட்ட பேய் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை முப்படை வீரர்களும், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர்.
தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கேரள மந்திரி சபை கூட்டம் நடந்தது.
இதில் கேரள வெள்ளப் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கவும் கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.
வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.
கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.
கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள். கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பேய் மழை பெய்தது. 11 நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இயற்கை சீற்றத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சமூக ஆர்வலர்களும் களம் இறங்கினர்.
இவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் சேர்த்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
கேரளாவில் பேய் மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டு ஏராளமான பயிர் நிலங்கள் சேதம் ஆனது. சாலைகள், பாலங்கள், ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநில அரசு எடுத்த முதற்கட்ட கணக்கீட்டில் மழை சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மழையால் இதுவரை 368 பேர் பலியாகி விட்டதாகவும் மாநில அரசு தெரிவித்தது. இன்னும் மண்ணுக்குள் புதைந்தவர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கண்டு பிடிக்கப்படாதவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே கேரளாவை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியது. இதை ஏற்ற மத்திய அரசு தற்போது கேரளாவை அதிதீவிர இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் கேரளாவுக்கு கூடுதல் நிவாரண உதவிகள் கிடைக்கும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய சாலைகள், ரெயில் பாதைகள், பாலங்கள் செப்பனிடும் பணியிலும் மத்திய அரசு உதவி செய்யும்.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இன்று முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் மந்திரி சபை அவசர கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், கேரளாவில் மழை பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த அமைச்சரவையில் முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும், சிறப்பு சட்டசபை கூட்டம் தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார்.
ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இன்று மாலை திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் நிறைவேற்றப்பட வேண்டிய உடனடி நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. #KeralaFloods #KeralaSpecialAssembly






