என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா வெள்ளம்"
- 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது.
- FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக் கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்ததால் FCRA இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாநிலம் இந்த அனுமதியை பெறுவது இதுவே முதல் முறை.
முன்னதாக கடந்த 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.
கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்தது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தது.
இதைத் தொடர்ந்து கேரளாவில் மீட்பு பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. கேரள மீனவர்களும் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விமானப்படை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மறுநாளே சுக பிரசவம் மூலம் ஆண் குழந்தையும் பிறந்தது. இதைப்போல மேலும் 26 பேரை இவர்கள் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்கள்.
இந்த நிலையில் விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி உள்ளது. சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் சிங்கப்பூர் என்ற விருது வழங்கி அவர்கள் பாராட்டப்பட்டனர். #KeralaRain #KeralaFlood
அரபிக்கடலோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு புயல் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், வருகிற 9-ந்தேதி வரை சூறைக்காற்றுடன் மிகப்பலத்த மழை பெய்யுமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு அரபிக்கடலையொட்டி உள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதி வழியாக ஒமன் கடல் பகுதிக்கு செல்லும்.
இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது புயலாக மாறும்போது காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும். அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் மிகப் பலத்த மழை பெய்யும். 7, 8, 9-ந்தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை 7-ந்தேதி மிக கனத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கேரளம், மத்திய கேரள மாவட்டங்களில் 18 முதல் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநில அரசு பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், எர்ணா குளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
கேரளம் கடந்த ஆகஸ்டு மாதம்தான் மழையால் பேரிழப்பை சந்தித்தது. அடுத்தும் இது போன்ற இழப்பை தடுக்க இப்போதே தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவிற்கு வரவழைத்தது. 6 கம்பெனிகளில் இருந்து 400 வீரர்கள் கேரளா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டர்கள், நீச்சல் வீரர்களும் இம்மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாட்டில் உள்ள பாணசூர சாகர், கோழிக்கோட்டில் உள்ள காக்கயம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, பம்பா, மணிமாலா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மட்டுபேட்டி, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பீச்சி உள்பட 20 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பம்பை ஆறு, மூளியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர்.
ரன்னி, கோலஞ்சேரி, அடூர், மல்லப்பள்ளி, திருவல்லா பகுதி மக்கள் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தை கண்டு மிரண்டனர். அவர்கள் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, மழை பாதிப்பு அதிகம் ஏற்படும் என அஞ்சப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, கட்டிடங்கள் இடியும் அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்போர் நிவாரண முகாம்களில் தங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அணைகளில் தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இப்போது அபாய அளவிற்கு நீர்மட்டம் இல்லை. அனைத்து அணைகளிலும் அபாய மட்டத்திற்கு கீழ்தான் தண்ணீர் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கேரள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக விழிஞ்ஞம், கொல்லம் துறைமுகங்களில் கடலோர காவல் படை, கப்பல் படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடிக்கவும், விற்கவும் அடுத்த 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. #KeralaRain
கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது.
வரலாறு காணாத பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் அந்த பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. கேரளாவிற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவிகள் அளித்துள்ளன.
ஆனாலும் மழை பாதிப்பில் இருந்து அந்த மாநிலம் சகஜ நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 26, 27 ஆகிய தேதிகளில் இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டதால் இந்த 8 மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனாலும் இந்த மழை வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 30-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அவர்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மழை காரணமாக மலை கிராமப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.
பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்தது. இதில் மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 488 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர்.
தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மத்திய குழு 2 நாட்களுக்கு முன்பு தான் அங்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இதுபோல 26-ந் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #KeralaRain
கேரளாவில் கடந்த மாதம் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாநிலமே நீரில் மூழ்கி தத்தளித்தது.
அணைகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மாநிலத்தின் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
சுமார் 13 நாட்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி தவித்த கேரளம் இப்போது தான் அந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் அடிக்கிறது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக அடிக்கும் வெயில் மாநில மக்களை மிரள வைத்துள்ளது. பெரு மழைக்கு பின்னர் ஏன் இப்படி வெயில் அடிக்கிறது ? அடுத்து வரும் வெயில் காலத்தில் இதனால் பாதிப்பு ஏற்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதற்கேற்ப தற்போது கேரளாவின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிணறுகளில் பொங்கி பெருகிய வெள்ளம், இப்போது காணப்படவில்லை. வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து போனது.
இதுபோல குளங்கள், ஆறுகளில் வழக்கத்தைவிட வெள்ளத்தின் அளவு குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை ஆகிய நதிகள் ஆர்ப்பரித்து பெருகி ஓடியது. இன்று இந்த நதிகளில் வெள்ளம் மிகவும் குறைவாக ஓடுகிறது.

இது பற்றி விவசாயிகள் அரசின் வேளாண்மை துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிபுணர்கள் பலர் இது குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் கேரளாவின் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர்.
இது குறித்து அறிந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர்வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல்லுயிர் பெருக்கத்தை சீரமைக்க கேரள வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது தவிர வறட்சிக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாநில அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaStudy #KeralaFloods #RiversDryUp
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு வாரத்திற்கு 70 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 30 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமானோர் முகாம்களில் தங்கினர். இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இதனால் கேரளாவில் நுகர்வோர் பெருமளவில் கோழிக்கறிகளை உண்ண முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கறிக்கோழிகள் அதிகளவில் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த மாதம் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.77 வரை இருந்தது. அதனைத்தொடர்ந்து கிடுகிடுவென விலை வீழ்ச்சியடைந்தது. தற்போது பண்ணை கொள்முதல் விலை ரூ.57 ஆக குறைந்தது. சில்லரை விற்பனையை பொறுத்தவரை கிலோவுக்கு ரூ.160-ல் இருந்து ரூ.120 ஆக குறைந்தது.
இது குறித்து கறிக்கோழி பண்ணை ஒருங்கிணைப்பாளர் சுவாதி கண்ணன் கூறும்போது, கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளது. தேக்கத்தால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கேரளாவில் இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு திரும்பினால் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, தேக்கம் அடைந்த கோழிகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவனம், பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிகம் செலவு செய்துள்ளோம். ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் பண்ணை உரிமையாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.
ஓரளவு நிலைமையை சமாளிக்க உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளோம். இதனால் குஞ்சு பொரிப்பு, தீவனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் குறையும் என்றார்.
கேரள வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. சார்பில் ஏற்கனவே ரூ.1 கோடி வழங்கப்பட்டு இருந்தது. தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் 1 மாத ஊதியம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி டெல்லி மேல்சபை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளம் ரூ.96.40 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் கேரளாவுக்கு நேரில் சென்று வழங்கினார்.
கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் முதல்-மந்திரி பொறுப்பு வகிக்கும் தொழில் துறை மந்திரி ஜெயராசனிடம் மா.சுப்பிரமணியம் காசோலைகளை வழங்கினார்.
அதோடு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்கில் 50 டன் கேரள சிகப்பு அரிசியும், ஆழப்புழா மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளாவை புரட்டிப் போட்ட பேய் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை முப்படை வீரர்களும், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர்.
தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கேரள மந்திரி சபை கூட்டம் நடந்தது.
இதில் கேரள வெள்ளப் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கவும் கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.
வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.
கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.
கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள். கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan