search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் மீண்டும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

    கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின் மீண்டும் கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்தது. இதில் மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 488 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர்.

    தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மத்திய குழு 2 நாட்களுக்கு முன்பு தான் அங்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை (25-ந் தேதி) மாநிலத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மழை அளவு 66.4 மில்லி மீட்டர் முதல் 124.4 மில்லி மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.


    இந்த தகவல் முதல்-மந்திரி அலுவலகத்துக்கும், மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த 3 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவித்துள்ளது. அதோடு இந்த 3 மாவட்டங்களுக்கும் மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல 26-ந் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #KeralaRain
    Next Story
    ×