search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy rain warns"

    கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின் மீண்டும் கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்தது. இதில் மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 488 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர்.

    தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மத்திய குழு 2 நாட்களுக்கு முன்பு தான் அங்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை (25-ந் தேதி) மாநிலத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மழை அளவு 66.4 மில்லி மீட்டர் முதல் 124.4 மில்லி மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.


    இந்த தகவல் முதல்-மந்திரி அலுவலகத்துக்கும், மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த 3 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவித்துள்ளது. அதோடு இந்த 3 மாவட்டங்களுக்கும் மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல 26-ந் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #KeralaRain
    வருகிற 26-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையால் ரூ.1,257 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக கொட்டி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் அதிக மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று மழைக்கு ஆலப்புழாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 118 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த மழை காரணமாக கேரளாவில் பல மாவட்டங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் ஆறுகள் போல் மாறிவிட்டன. இதனால் ஏராளமான பொது மக்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். மாவட்டத்திற்கு 6 முகாம்கள் வீதம் மழை வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம்புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநில அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை ரூ.1,257 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.293 கோடிக்கு பயிர் சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான சாலைகள் இருந்த தடமே தெரியாத அளவுக்கு மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டுவிட்டது.


    சபரிமலையிலும் மழை நீடிக்கிறது. கொட்டும் மழையிலும் சிரமத்தை பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜ்ஜு தலைமையிலான குழு வந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து வெள்ள சேதங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகு கேரளாவுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும். #KeralaRain
    கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையம் மேலும் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருவனந்தபுரம், பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பொழிவு காணப்படுகிறது. பலத்த மழை காரணமாக எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து மழை நீடிப்பதால் இன்றும் அந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மழை காரணமாக பல இடங்களில் பெரிய மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. இதனால் மின் கம்பங்கள் உடைந்ததால் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. மின் ஊழியர்களும், தீயணைப்பு படையினரும் மீட்புபணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கேரளாவின் மலையோர பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக பாபநாசம் பகுதியில் தேவசம் போர்டு அலுவலகம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. மலை கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மலை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கோவளம், விழிஞ்ஞம், சிறையின்கீழ், பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்து உள்ளனர். #KeralaRain
    ×