என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nasser"
- கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்கு பல நடிகர்கள் முன் வந்து நிதியுதவி செய்து வருகின்றனர்
- அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்கு பல நடிகர்கள் முன் வந்து நிதியுதவி செய்து வருகின்றனர், நடகர் சூர்யா, கார்த்தி, கமல், தனுஹ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் இதுவரை நிதியுதவி செய்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாசர்.
- இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நாசர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்."
"தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர்.
- இவர் நடிகர் சங்க தலைவருமாக உள்ளார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நாசர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசர் திரையுலகில் ஜொலிப்பதற்கு அவரது தந்தையும் ஒரு காரணமாவார். தன் தந்தையின் ஆசைக்காக நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த நாசர் அதன்பின், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தாஜ் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார். பின்னர் மீண்டும் அவரின் தந்தை கட்டாயத்தின் பேரில் வாய்ப்புகளை தேடி அலைந்து மிகப்பெரும் நடிகராக உள்ளார்.
- புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
- இதில் தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. பாரதிதாசனின் இரணியன் அல்லது இணைய வீரன் என்ற நாடகம் நடந்தது. தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களை பறையாட்டம், தேவராட்டத்துடன் கலைஞர்கள் வரவேற்றனர். நாடக கலைஞர்களை நடிகர் நாசர் பாராட்டி பரிசு அளித்து பேசியதாவது, சிறப்பு திரைப்படம், சிறப்பு சீரியல், ஓ.டி.டி. என அனைத்தையும் விட்டு விட்டு நாடகம் பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சென்ற நூற்றாண்டு வரை நேரடியாக கதை சொல்லும் வழக்கம் இருந்தது.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/06/25/1904539-nas.webp)
நேரடியாக கதையை சொல்லும் போது நமது மூளைக்கு சென்றடையும் கருத்து யார் நல்லவன்.? யார் கெட்டவன்.? என்று தெரிந்துவிடும். பெற்றோர்கள் இதுபோன்ற நவீன நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நவீன நாடகம் பற்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து நாகரீகங்களிலும் மனிதனின் வெளிப்பாடாக நாடகம் இருக்கிறது. நவீன நாடகங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். இங்கு ஒரு நாடகம் நடந்தாலும் 200 பேர் பார்க்கிறீர்கள்.
200 நாடகமாக மனதிற்குள் போகிறது. காரணம் இந்த நாடகத்தை அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். புதிய சிந்தனைகள் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கலைகள் உருவாகி அடுத்த சந்ததிக்கு செல்கிறது. இந்த நவீன உலகத்திற்கு அடுத்த சந்ததியினருக்கு விட்டு செல்லக் கூடியது நவீன நாடகம். இதனால் குழந்தைகளை நாடகத்தில் ஈடுபடுத்துங்கள். புதுவையில் சிறந்த நாடக பள்ளி இயங்குகிறது. இவ்வாறு நாசர் பேசினார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாசர்.
- இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார். அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/08/18/1747932-cover.jpg)
நாசர்
இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து படிகட்டுகளில் அவர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் நாசருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் நாசர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905281149393648_1_Kolaigaran-Preview2._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201905150902543733_1_Nadigar-Sangam-Election-Judge-Appointed1._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201905131017589690_1_Nadigar-Sangam-Election-New-Team2._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201905091250156878_1_Sangathalaivan-Dual-Role2._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201904281453002674_1_nasser-2._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201904061830270451_1_Challenge-Prashanth-Anu-Keerthyvas2._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201903270918593836_1_Sangathamizhan-Vijay-Sethupathi2._L_styvpf.jpg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)