search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual violence"

    • இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன.
    • தொடுகை கல்வியை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயது குழந்தைகளையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதில் இருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போது இருந்தே பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கலாம்.

    பாலியல் கல்வி என்பது அறுவறுக்க தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன.

    நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை குழந்தைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன.

    தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்த குழந்தையால் உணர முடியாது. எனவே குழந்தைகளுக்கு புரியும் அளவுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும்.

    சில குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். அந்த குழந்தைகள் நாம் சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாகவே கருதுவார்கள். அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

    ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, புரிந்துகொள்ளும் இயல்புநிலைக்கு குழந்தைகள் வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் குழந்தைகளால் சிந்தித்து செயல்பட முடியும்.

    மேலும், இன்றைய புள்ளிவிவரப்படி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. புத்தி சுவாதீனம் உள்ள குழந்தைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.

    ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி முக்கியம்

    பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சிறுவர் உலகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முறையான தொடுதல் எது?, முறையற்ற தொடுதல் எது...? என்பது பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வளாக குறைதீர் அமைப்பு மாணவர் ஆலோசனை அமைப்பு பெண்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அருபாதேவி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். விருதுநகர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசுகையில், போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் நேர் வழியில் செயல்படுவது குறித்தும் எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவமணி, ராஜேஸ்வரி, குடும்ப ஆலோசர் ஜோஸ்மின், குழந்தைகள் நல ஆர்வலர் முனியம்மாள், சமூக ஆர்வலர் ஜானகி, மருத்துவ ஆலோசகர் திருசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மாரி மகேஸ்வரி நன்றி கூறினார். இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.

    • சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.
    • மதுரையில் 34 மாதங்களில் 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகரில் மதுரை டவுன், மதுரை தெற்கு, தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேற்கண்ட 4 காவல் நிலையங்களிலும் சிறுமிகளுக்கு எதிராக பதி வான போக்சோ வழக்குகள் தொடர்பாக புள்ளி விவர பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 132 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்குகளும், 2022-ம் ஆண்டு அக்டோபர் வரை 150 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    அதாவது கடந்த 34 மாதங்களில் மட்டும் மொத்த மாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த 5-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது.

    எனவே அவர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் சில்மிஷம் தொடர்பாக குழந்தைகள் ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×