search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple administration"

    • ராமநாதசுவாமி கோவில் நிர்வாகத்தை கண்டித்து ராமேசுவரத்தில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்ேவறு கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும், தீர்த்தங்களில் நீராடவும், சிறப்பு சாமி தரிசனம் செய்யவும் அதிக கட்டணம் வசூலிப்படுகிறது.

    இைத கண்டித்தும், கோவில் இைண ஆணையர் மாரியப்பனை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. மாநில துணை செயலாளர் கராத்தே பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்ேவறு கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். எனவே அது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசியை சேர்ந்த மண்டபம் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அன்னதான கமிட்டியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அன–மதிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
    • இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் அடுத்த மாதம் 23-ந்தேதி நடக்கும் இலவச திருமணத்திற்கு வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இலவச திருமணம்

    இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இலவச திருமணத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதையடுத்து ஒரு திருமண ஜோடிக்கு ரூ. 20 ஆயிரம் செலவிடப்படுகிறது. அதாவது திருமாங்கல்ய வகைக்கு 2 கிராம் தங்கம் ரூ. 10 ஆயிரம், மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை ரூ. 2 ஆயிரம், மணமக்கள் வீட்டார்களுக்கு 20 நபர்களுக்கு உணவு வகைக்கு ரூ. 2 ஆயிரம், திருமண மாலை மற்றும் புஷ்பம் ரூ. 1000, பாத்திரங்கள் வகைக்கு ரூ. 3 ஆயிரம், எதிர்பாராத செலவு ரூ. 1000 என மொத்தம் ரூ. 20 ஆயிரம் செலவிடப்பட உள்ளது.

    3-ந்தேதிக்குள்....

    இத்திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8வது வார்டு உறுப்பினராக உள்ள சுகன்யா ஜெகதீஸ்.(31) இவர் பல்லடம், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு ஏற்கனவே கோயில் கமிட்டியாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று இருந்ததாகவும், தற்போது, அவரையும் அவரது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும், அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கோவில் நிர்வாகத்தினர் கூறுவதாகவும். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில்,நேற்று, பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; பச்சாபாளையம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்றாக போராடி வருகிறோம். இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக கோவிலிக்குள் வரவேண்டாம் என்று சொன்னதாக கோவில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக இங்கே வந்தோம் என்றனர். பின்னர் இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலில் வழிபட யாரையும் தடை செய்யக்கூடாது.

    ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார். இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று முதல்வர் பினராயி விஜயனுடன் கோவில் நிர்வாகம் ஆலோசிக்க உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

    இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
    ×