search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மின் வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தஞ்சாவூர் நீதிமன்றசாலை மின் பொறியாளர் அலுவல கத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 28-ந்தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர்,யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட்,

    காந்திஜி ரோடு, மருத்து வகல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைகழக வளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி தென்பாதி மாளிகை புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது பள்ளியின் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசி நோய் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் இவ்வழியே நடந்து செல்ல பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியு ள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
    • போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    மதகடிப்பட்டு:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 90 சதவீத பணி நிறைவு பெற்றுவிட்டது.

    இந்நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு 4 வழி சாலைக்கு அருகாமையில் தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே எல்.ஆர். பாளையம் வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது.

    இந்த சாலைக்கு எதிர் புறம் பிரபல மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளி என அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறுமுனைக்கு செல்ல வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும்.

    ஆனால் நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.

    இந்நிலையில் உறுதி அளித்தப்படி பாதை அமைத்து தராததால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்த போவதாக எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் அறிவித்தனர்.

    அதன் படி இன்று எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் 108 அவசர கால விபத்து முதலுதவி செயல் விளக்கம் அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் சாம் சுந்தர், சவுரிராஜன் தலைமையில் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை விபத்தில் முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செய்முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, அனைத்து ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் பொதுமக்களுக்கு கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    • சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரையில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலை, சிவகங்கை சாலை, காவல் நிலையம் எதிர்புறம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன. நகர் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மாடுகளின் உரிமை யாளர்கள் வீடுகளில் இந்த மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மானாமதுரை நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    மானாமதுரை நகரில் சுற்றித் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அறிவிப்பை மீறி மாடுகள் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்தால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களி ளும், கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது. மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் மாடுகளை வைத்து பராமரிக்க வேண்டும். தெரு மற்றும் சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஞ்சலகங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் கடந்து தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சுவாமிமலை:

    காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான அய்யப்பன் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் அனுப்ப, சிறுசேமிப்பு பதிவு அஞ்சல்கள், பார்சல் அனுப்ப முதலிய சேவை களுக்கு அஞ்சலகங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பகோணம் கடைவீதி, மேலக்காவேரி, காந்தி பூங்கா, கம்பட்ட விசுவநாதர் கீழவீதி, சவுராஷ்ட்ரா நடுத்தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கிளை அஞ்சலகங்கள் திடீரென மூடப்பட்டன.

    இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தபால் அனுப்ப வேண்டும் என்றால் நீண்ட தூரம் கடந்து மகாமகக்குளம் தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, ஏழை நடுத்தர மக்களுக்கு நலன் கருதி மூடப்பட்ட கிளைஅஞ்சல கங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் ெரயில் நிலையம் அருகே குப்பன் குளம் பகுதி உள்ளது.இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை ெரயில் நிலையம் ஓரமாக தடுப்பு கட்டை அமைக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதனை பார்த்த குப்பன் குளம் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ெரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, கவுன்சிலர் தஷ்ணா, அ.தி.மு.க.நிர்வாகி நாகராஜன் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் ெரயில் நிலைய அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம். மேலும் இவ்வழியாக தான் கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் போன்றவற்றை வந்து செல்கின்றன. தற்போது திடீரென்று ெரயில்வே நிர்வாகம் தடுப்பு கட்டை அமைத்தால் எந்த வாகனமும் குப்பன் குளத்திற்கு வர முடியாத அவல நிலை ஏற்படும். ஆகையால் அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் நடவடிக்கையாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ெரயில்வே துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து பதில் தெரிவிக்கின்றோம் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை கொத்ததெரு தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும்மான ராஜ்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ரெங்கநாதன் கொடியே ற்றினார்.இதில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் கனிவ ண்ணன், நகர தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன், மகளிர் அனியினர் சுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளீரனினர் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
    • குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் வயல் வெளியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது.

    இதனால் சேலம் மற்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு செல்கின்றனர். இந்த குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உழவர் சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
    • கேதார கவுரியம்மனுக்கு விரதம் இருந்தவர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்கவும், விரதம் கடைபிடிக்காதவர்கள் இறைச்சி கடைகளிலும் கறி வாங்குவதற்காகவும் குவிந்தனர்.

    தருமபுரி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகையான நேற்று அதிகாலையிலே பொதுமக்கள் எண்ணை தேய்து குளித்து புத்தாடைகள், நகைகள் அணிந்து பட்டாசு வெடித்தும், வீடுகளில் தீபம் ஏற்றியும் தீபாவளியை கொண்டாடினார்கள். நேற்று முன்தினம் மாலை, 3 மணி முதல் அமாவாசை தொடங்கியதை அடுத்து கேதாரகவுரி விரதம் இருப்பவர்களில் நேற்று மாலை, 3 மணிக்கு மேல் கேதாரகவுரி விரதம் மேற்கொண்டனர்.

    இதற்காக நேற்று காலை தர்மபுரி உழவர் சந்தை மற்றும் சந்தைபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள், இலை, விரத பொருட்கள் வாங்க அதிகளவில் குவிந்தனர். கேதார கவுரி விரதம் மேற்கொள்ளாதவர்கள், அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் ஆடு, கோழி கறிகள் மற்றும் மீன் உள்ளிட்டவை வாங்க அதிகளவில் குவிந்தனர். இதனால், காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதியம், 12 மணி முதல் மதுபானம் வாங்குபவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print