search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்ப்பு"

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
    • நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.

    விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமானநிலையத்துக்கு முதல் கட்டமாக நிலம் எடுப்பதற்காக அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. பொடாவூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இடங்களில் 566 பனை மரங்கள் மற்றும் காட்டுவாமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், தைலமரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பரந்தூர் விமான நிலைய பணிக்கு முதல் கட்டமாக பொடாபூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் தரப்படும். அவர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதன்மீது ஏப்ரல் மாதம் 4-ந்தேதி விசாரணை மேற் கொள்ளப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்கு வோருக்கு சந்தை மதிப்பை விடம கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.
    • ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.4.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர். ஆர்.கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின் புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    • அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதற்காக மேட்டூரிலிருந்து நேற்று மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரும் வழியில் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு, வந்தார். தொடர்ந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

    அப்பொழுது கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

    அப்பொழுது மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில், என் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை, என கேள்வி கேட்டு நீங்கள் மாலை அணிவிக்க கூடாது என, உள்ளே வராதே, திரும்பி போ என கிறிஸ்தவ இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து முழக்கமிட்ட இளைஞர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பொழுது மணிப்பூரில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டனர். அதற்கு பாஜக தான் காரணம். இந்த இடம் புனிதமானது, இங்கே நீங்கள் வரக்கூடாது என ஆவேசமாக பேசினர்.

    இதனை அடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த இளைஞர்களை சமாதானப்படுத்தியும் இளைஞர்கள் எங்கள் அன்னைக்கு மாலை அணிவித்து இழிவு படுத்த வேண்டாம் என கூறி மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

    பின்னர் அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி சென்றார்.

    தொடர்ந்து லூர்து மாதா அன்னை சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, பாஜக தலைவர் அண்ணாமலையை, இளைஞர்கள் தடுத்து முழக்கமிட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தங்களுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.
    • தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலு வலக சாலை மற்றும் மஞ்சக்குப்பம் மைதா னத்தை சுற்றிலும் 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஆக்கிரமிப்பு கடைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநக ராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர்கள், தங்க ளுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றாமல் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சில நாட்களாக ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாக அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி ஊழி யர்கள் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடை களை போலீஸ் பாதுகாப்பு டன் பொக்லைன் எந்திரங் கள் மூலம் அகற்றினர். அப்போது அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    இதில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையே பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதா னப்படுத்தினார். தொடர்ந்து தரைக் கடை மற்றும் தள்ளு வண்டி கடைகளை தவிர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது.
    • அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    விராலிமலை

    விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் நீதிமன்றமாக இயங்கி வந்த அந்த கட்டடம் காலப்போக்கில் பத்திரப்பதிவு அலுவலகமாக மாற்றப்பட்டு இன்றளவும் உறுதி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    பழங்கால பர்மா தேக்கு உள்ளிட்ட உறுதியான அக்கால பொருட்கள் கொண்டு கட்டப்பட்ட அந்த அலுவலக கட்டடம் இன்றும் உறுதி தன்மையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    உதரணமாக கடந்த 1967- ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது புதுக்கோட்டை நியூ இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் முன் வடிவுக்கு மன்னர் காலத்தில் எழுதி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டய ஆவணம் தற்போதைய விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவுக்கு பின்னர் மீண்டும் கருவறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து விராலிமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார்.

    ஜெயராமன், அய்யாதுரை, மணி, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜன் பங்கேற்று ஆர்பாட்டத்தை தொடங்கிவைத்து கட்டடத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில், பழமை வாய்ந்த புராதன சின்னமாக போற்றி பாதுகாக்க வேண்டிய கட்டிடத்தை இடிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றும்.கட்டடம் அருகில் பயன்பாடற்று இருக்கும் இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும், பழைய கட்டிடத்தை ஆவண காப்பகமாக பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

    • பொதுமக்கள் நகராட்சி தலைவியிடம் மனு அளித்தனர்.
    • நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும் என கூறி உள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பஜார் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு 1.25 ஏக்கர் அளவில் உள்ள கல்லறை பகுதியில் சுமார் 50 சென்ட் அளவில் வால்பாறை நகராட்சி மூலம் நவீன மயானம் அமைக்க சுமார் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பணிகள் தொடங்க நகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் நவீன மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வால்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளியிடம் மனுவை வழங்கிச் சென்றனர். அந்த மனுவில் நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும். அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர், புகையால் மலை உச்சி பகுதியில் குடியிருப்புகளில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம் நவீன மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறி உள்ளனர்.

    • ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
    • இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அந்த கடையை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு மாற்றம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெருஞ்சிபட்டி, மாங்குப்பை ஆகிய கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள இடத்திலேயே டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    அதனை வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், துணைத் தலைவர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் பெற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.

    • அரியலூர் சிமெண்ட் ஆலைக்கான சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது
    • நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது என எதிர்ப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம், நெருஞ்சிக்கோரை, பெரியநாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜநகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம மக்கள் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நடத்தவுள்ளது.எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் கிராமத்திற்கு அருகே உள்ள மலை பகுதிகளில் அதிகமாக கல் குவாரிகள் உள்ளது. இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீகல் குவாரிகளில் இருந்து அதிக வேகத்தில் செல்லும் லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் கற்கள், மண் அள்ளி செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது சாலையின் இருபுறமும் கற்கள், மண் கீழே விழுவதால் சாலைகள் பழுதாகி உள்ளது. அதை முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்திருந்தனர்.

    பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ரகு கூறுகையில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது, கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும். வரும் 30ம் தேதி புதிய கல்குவாரி ஏலம் விடப்படுகிறது. அந்த ஏலத்தினை நடத்தக்கூடாது , நடத்தும் பட்சத்தில் பொதுமக்கள் சார்பில் எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு ஏலம் விடப்படும் கல் குவாரிகளிலே சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என தெரிவித்தார்.

    • பொதுமக்கள் போராட்டம்
    • பொது மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

    குழித்துறை :

    குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மதில்தாணி என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதால் தக்க நட வடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதுபோல செல்போன் டவர் அமைக்க முறையான அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள் கூறும் போது, சிட்டுக்குருவிகள் செத்து மடிவதாகவும், அயனி மரங்கள் பட்டு போவதாகவும், பொது மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் அப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் திடீர் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் பொதுமக்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையெழுத்துக்கள் போட்டு மீண்டும் புகார் அளிக்க உள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்களை ஒன்று கூட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

    • அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் சாலை நாகராஜபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் தற்போது கட்டிட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றும் உள்ளது.

    கடந்த 6-ந் தேதி இந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி நாகராஜபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியும் திறக்கப்பட்டது. மேலும் அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையமும் திறக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கு திறந்திருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்தவரிடம் பள்ளியில் வேலை நடந்து வரும் நிலையில், வேலையை முடிக்காமல் எப்படி பள்ளிைய திறக்கலாம் என கேட்டனர்.

    மேலும் பள்ளியை உடனே மூட வேண்டும். வேலை முடிந்த பின்னர் திறக்க வேண்டும் என்றனர். ெதாடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டிட வேலைகள் முடிக்கும் வரை பள்ளி திறக்கப்படாது என்றும், அதுவரை அருகில் உள்ள வேறு இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
    • இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறிஞ்சிக்குழாய் அமைக்காமல் கழிவுநீரை சாக்கடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த கழிவுநீரை விடும் பைப்பை அடைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் இடம் இல்லாதவர்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சிக் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் உறிஞ்சி குழாய்கள் அமைக்காத வீடுகளில் கழிவுநீர் குழாய்களை சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

    அதில் கட்டையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக உறிஞ்சி குழாய்கள் அமைப்பதால் ஏற்கனவே போர்வெல் அமைத்திருக்கும் இடங்களில் கழிவுகள் கலக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே மாநகராட்சி தனது முடிவை மறு பரிசீலனை செய்து தற்போது உள்ள நடைமுறைபடியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கட்டையன்விளை பகுதியில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் மாநகராட்சி சார்பில் சானல் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    ×