search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price increase"

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
    • பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவு வந்து செல்லும் நிலையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான ஸ்டால்களில் விற்பனையாகும் பஞ்சாமிர்தத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வார்கள்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் மட்டுமின்றி பழனி பஸ் நிலையம், அடிவாரம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் போன்ற பல்வேறு இடங்களிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு ½ கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.35க்கும், டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை ஒரு டப்பாவுக்கு ரூ.5 விலை உயர்த்தி கோவில் நிர்வாகம் விற்பனை செய்தது.

    டின் பஞ்சாமிர்தம் ரூ.40ல் இருந்து ரூ.45க்கும், டப்பா பஞ்சாமிர்தம் ரூ.35ல் இருந்து ரூ.40க்கும் விலை உயர்த்தி விற்கப்பட்டது. புதிய விலையை பேனாவால் மாற்றி விற்பனை நிலையங்களில் வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து வி.எச்.பி. மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், தமிழகத்திலேயே அதிக வருவாய் கொண்ட கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது. அதனால்தான் மத்திய அரசு பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

    கோவிலுக்கு வருவாய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையை எதற்காக உயர்த்த வேண்டும். நெய் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவிட்டதால் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    பழனிச்சாமி : பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி அதனை தங்கள் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அவ்வாறு ஒருவர் 50 முதல் 100 டப்பாக்கள் வரை கூட வாங்கிச் செல்வார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வரும் பக்தர்கள் இது போன்ற கூடுதல் பஞ்சாமிர்தங்களை வாங்கிச் செல்ல முடியாது. வணிக நிறுவனங்கள் போல லாப நோக்கில் தேவஸ்தான பிரசாதங்களை விற்கக்கூடாது. இதில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மூலம் தயார் செய்யப்படுவது. திருப்பதியில் இலவச லட்டு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்களுக்கு தேவைப்பட்டால் விலை கொடுத்து லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அங்கு கூட விலை ஏற்றப்படவில்லை. அதே போல பழனி கோவில் பஞ்சாமிர்தத்தையும் பழைய விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றார். 

    • கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
    • கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.

    கோவை மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வந்திறங்குவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகள் என்ற நிலையில் மட்டுமே காய்கறிகள் வரத்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. எனவே விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை.

    கோவை ஒட்டுமொத்த சந்தைகளுக்கு உணவு பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.110-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

    கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ஒருபுறம் உச்சாணிக் கொம்பில் நிற்க, சின்ன வெங்காயத்தின் விலை இன்னொரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    இங்கு சின்ன வெங்காயம் பல்வேறு தரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல 2 கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கோவை மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. வெளியூர்-வெளிமாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

    எனவே கோவை மார்க்கெட்டுகளுக்கான காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

    தமிழகத்தில் தற்போது பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே கோவை மார்க்கெட்டுக்கான காய்கறிகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை மீண்டும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது.
    • குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது.

    திருப்பூர்:

    கடந்த மாசி பட்டத்தில் பல விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது. வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகின. விளைச்சல் பாதிப்பால் தக்காளி விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. தட்டுப்பாடு காரணமாக கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. உச்ச விலைக்கு விற்பனையான போதிலும் போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    கடந்த வைகாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் தக்காளி செடிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர்.

    அடுத்த மாதத்தில் புதிய தக்காளி அறுவடை துவங்கிவிடும். எனவே சில வாரங்களில் விலை குறைய துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது.
    • மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மார்க்கெட்களுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளது.

    காய்கறி விலை

    இதனால் கடந்த சில நாட்களாக டவுன் நயினார் குளம் மார்க்கெட், பாளை மார்க்கெட்களில் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது. இதே போல சாம்பார் வெங்காயம் விலையும் ரூ.150 ஆக உயர்ந்தது. இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.

    குடை மிளகாய், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்திரிக்காய் ரூ.50 முதல் 60 வரையிலும் விற்கப்படும் நிலையில் கேரட் விலை ரூ.95 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டு பூண்டு ரூ.180, கொடைக்கானல் மலைப் பூண்டு ரூ.300, இமாச்சல் பூண்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

    சீரகம் கிலோ ரூ.800

    இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று பாளை மார்க்கெட்டில் சீரகம் விலை கிலோ ரூ.800- ஆக உயர்ந்தது. மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதே போல துவரம் பருப்பு ரூ.158-ம், உளுந்து ரூ.132-ம், மல்லி ரூ.110-ம், வெந்தயம் ரூ.130-ம், கடுகு ரூ.120 ஆகவும் உயர்ந்துள்ளது.

    காய்கறிகளின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
    • பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை )கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது.

    பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். 

    • இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தக்காளி பயிரிடுவது காலதாமதம் ஆனது.
    • தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாக காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், சுரண்டை, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக குவியும்.

    தற்போது தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையான நிலையில் சமீபத்தில் ரூ.100 வரை விற்கப்பட்டது.

    இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளிக்கு பதிலாக புளி கரைசல் அதிமாக சேர்த்து சமையல் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையிலும் விலை உயர்ந்தது. தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாக காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    இதுகுறித்து காசிதர்மம் விவசாயி முருகன் கூறுகையில், இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தக்காளி பயிரிடுவது காலதாமதம் ஆனது. தற்போது ஏராளமான விவசா யிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களுக்குள் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தொடங்கிவிடும். அதன் பின்னர் விலையும் குறைய தொடங்கும். தற்போது அரை ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளேன். தினமும் 100 கிலோவில் இருந்து 200 கிலோ வரை தக்காளி பறிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வருகிறேன். கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. இன்றைய நிலவரப்படி நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுவதாகவும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.110 வரையிலும் விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே சோழபுரம் கடைவீதியில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்ந்து தற்போது 1100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தத்தளித்து வருகின்றனர்.

    சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற கோரியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜீவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவி மாரியம்மாள், மாவட்ட துணைத்தலைவி லதா மகேஸ்வரி, நகரத் தலைவி செல்வி, திருவிடைமருதூர் வட்டாரத் தலைவி ஆர்கனைஸ் மேரி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    • 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் அவற்றை விற்பனை செய்து விடுகின்றனர்.

    களக்காடு:

    களக்காட்டில் ஸ்ரீகிருஷ்ணா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (பால் பண்ணை) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 538 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி

    கோவில்பத்து, படலை யார்குளம், கருவேலங்குளம், புதூர், ஊச்சிகுளம், கடம்போடுவாழ்வு, பத்மநேரி உள்ளிட்ட 32 இடங்களில் கறவை கூடங்கள் அமைத்து பால் உற்பத்தி செய்து, 18 பணியாளர்கள் மூலம் களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

    உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்து வருகின்றனர். தினசரி 6 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    பருவநிலை மாற்றம்

    இந்நிலையில் சமீபகாலமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மாடுகளுக்கு பெரியம்மை, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதுபோல மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் உரிமையாளர்கள் விற்பனை செய்து விடுகின்றனர்.

    இதன் காரணமாக பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது பால் உற்பத்தி 6 ஆயிரம் லிட்டரில் இருந்து 5 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பால் உற்பத்தியில் களக்காடு கிருஷ்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.

    கடந்த ஆண்டில் இருந்து இரண்டாமிடத்திற்கு சென்றது. தொடர்ந்து உற்பத்தி குறைந்ததால் பொதுமக்களுக்கு போதியளவு பால் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    தட்டுப்பாடு

    இதற்கிடையே களக்காட்டில் இருந்து தினசரி 2 ஆயிரம் லிட்டர் நெல்லை ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவதாக தெரிகிறது. மொத்தமுள்ள 5 ஆயிரம் லிட்டரில் 1,200 ஆயிரம் லிட்டர் நெல்லைக்கு அனுப்பி விட்டு எஞ்சிய 3,800 லிட்டர் பால் மட்டுமே களக்காடு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் களக்காடு பகுதியில் பண்ணை பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் பண்ணை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே களக்காடு பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பண்ணை பால் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சொத்துவரி, மின் கட்டணம், பால் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வுகளை கண்டித்து வல்லம் பேரூராட்சி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேருந்து நிலையம் எதிரே வல்லம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தஞ்சை திருவாரூர் மாவட்ட பால்வளத் தலைவர் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நிக்கல்சன் வங்கி கூட்டுறவு தலைவர் சரவணன், முன்னாள் வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் சிங் ஜெகதீசன், பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகரன் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சிங்.ஜெ. முருகானந்தம், கவிதாகலியமூர்த்தி, வட்ட செயலாளர் மனோகரன், வல்லம் அதிமுக வார்டு செயலாளர்கள், அறிவு, மில்டன், அறிவு, சுந்தரம், வாசு, நேரு, சேட்டு நிர்வாகிகள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்ப பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    • பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர்.
    • இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரி புலியூர் ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கடலூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் வந்து மீன்கள் வாங்கி செல்வார்கள். புரட்டாசி மாதம் பிறந்த தில் இருந்து கடலூரை சேர்ந்த ஏராளமான மக்கள் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர். நேற்றுடன் 3-வது புரட்டாசி சனிக்கி ழமை முடிந்தது. எனவே கடலூரை சேர்ந்த பொது மக்கள் பெருமாளுக்குரிய விரதத்தை முடித்துக் கொண்டனர். இன்று காலை மீன் வாங்குவதற்காக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், முதுகநர், திருப்பாதிரி புலியூர் மீன் மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

    இதேபோல இறைச்சி கடையிலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் அலை மோதியது. இதனால் ஓரளவு விற்ப னையும் அதிகரித்தது.கூட்டம் அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது. விலை உயர்வு விபரம் வருமாறு:- சங்கரா ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும், வஞ்சரம் ரூ.700-ல இருந்து ரூ.800 ஆகவும், சீலா ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆகவும், இரால் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆகவும், கணவாய் ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆகவும், பாறை ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும், கானாங்கத்தை ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும் உள்ளது.

    ×