என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
- தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
- இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,
பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்