என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"
- காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
- வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே மாதம் 7-ந்தேதியும் நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 18-ந்தேதி சிவமொக்காவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.
பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
இந்த கூட்டத்தில் மைசூரு-குடகு தொகுதி வேட்பாளர் மைசூரு மன்னர் யதுவீர், மண்டியா தொகுதி வேட்பாளர் குமாரசாமி, ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் பால்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மைசூரு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் மாலை 6 மணி அளவில் மங்களூருவுக்கு செல்ல உள்ளார். முதலில் மங்களூரு கோல்டு பிஞ்ச் சிட்டி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்கிறது. மைசூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.
லேடிஹில் நாராயணகுரு சர்க்கிளில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி லால்பாக், மங்களூரு மாநகராட்சி அலுவலகம், பல்லால்பாக், எம்.ஜி.ரோடு, பி.வி.எஸ். சர்க்கிள், கே.எஸ்.ராவ் ரோடு வழியாக ஹம்பன்கட்டா சிக்னல் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நடக்க உள்ளது. இந்த வாகன பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகன பேரணியின் போது பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.
இந்த வாகன பேரணியையொட்டி மங்களூரு நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாகன பேரணி நடக்கும் லேடிஹில் பகுதியில் இருந்து ஹம்பன்கட்டா சிக்னல் வரை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு பதற்றமான பகுதி என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கர்நாடக வருகையையொட்டி பா.ஜனதாவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.
- எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன் என்றார்.
நெல்லை:
நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.
எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.
பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.
தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை.
தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்கிறேன்.
மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்.
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.
அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.
பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.
உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது.
- தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
- முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.
ரிஷிவந்தியம்:
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.
- கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார்.
- சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
அதன்படி, இன்று மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.
சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.
இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
- கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.
சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மோடி.. மோடி.. என உற்சாக குரல் எழுப்பி, பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களவை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.
பிரதமர் மோடியுடன், வாகனத்தில் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உடன் உள்ளனர்.
வாகனத்தில் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
- கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்.
- தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகத்துக்கு வந்தார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக பகல் 11.40 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்றபடி பா.ஜனதா கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-
எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்.
இப்போது நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. அந்த அலை நீண்ட தூரம் பயணிக்கப் போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டது போல 1991-ம் ஆண்டு இதே கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை புறப்பட்டு காஷ்மீர் வரை சென்றிருந்தேன். ஆனால் இந்த முறை நான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்திருக்கிறேன்.
நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். நமது தமிழக மக்களும் இப்போது அதைத்தான் செய்ய போகிறார்கள். தி.மு.க.-காங்கிரசின் இந்தியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்.
அவர்களின் தலைக்கணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால் வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களின் கொள்கை, அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்குதான் அவர்களின் முதல் இலக்கு.
ஒரு பக்கம் பார்த்தால் பா.ஜ.க.வின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள். அந்த பக்கம் பார்த்தால் காங்கிரஸ்-தி.மு.க. இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள். ஆப்டிக்கல் பைபர் மற்றும் 5ஜி ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு கொடுத்தது. நமது பெயரில் டிஜிட்டல் இந்தியா என்கிற திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல் இருக்கிறது.
2ஜி கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க.தான். பா.ஜனதா ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பா.ஜனதா பெயரில் உதான் திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல்தான் இருக்கிறது.
நாம் கேலோ இந்தியா மூலம் விளையாட்டு துறையை உயர்ந்த உன்னதமான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் பெயரில் காமன்வெல்த் ஊழல்தான் முதன்மையாக இருக்கிறது. இந்த பட்டியல் மிக நீளமாக இருக்கும்.
தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.
தமிழ்நாட்டுக்கு தி.மு.க. ஒரு அரக்கனாக இருக்கிறது. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு தி.மு.க. அரசு எதிரியாக உள்ளது. தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி தி.மு.க.தான். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க விடாமல் செய்ததற்கு சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்தது.
ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க.-காங்கிரஸ் தடை விதித்தது. அந்த தடையை பா.ஜ.க. அரசு நீக்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது தி.மு.க.வும், காங்கிரசும் வாய் மூடிக் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணி அரசுதான் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது. தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.
இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க.-காங்கிரஸ் விளையாடுகிறது.
இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ்-தி.மு.க. செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா?
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ் அரசுகள் பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரிந்தவர்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம். மனதின் குரல் நிகழ்ச்சி போன்று நமோ செயலி மூலம் என் பேச்சை, உரைகளை தமிழில் கேட்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா சரத்குமார், சசிகலா புஷ்பா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
- உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,
* தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
* திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரியும்.
* பெண்களின் பெயரில் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
* நம்முடைய பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. தலைவர்கள் கேள்விஎழுப்பினர்.
* தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
* தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பெருமையையும் பாதுகாக்க பா.ஜ.க என்றும் முன்னிலையில் இருக்கிறது.
* உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.
* நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
#WATCH | During a public rally in Kanniyakumari, PM Modi says, "...The workers of DMK and Congress only know how to cheat and insult women. The people of Tamil Nadu know how the workers of DMK behaved with former state CM J Jayalalithaa...They do politics in the name of women.… pic.twitter.com/LdtJgN5PVc
— ANI (@ANI) March 15, 2024
- பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. தி.மு.க.வும், காங்கிரசும்.
- பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..?
கன்னியாகுமரி:
பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
* இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
* மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
* மீனவர்கள் ஏன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள்? அதற்கு காரணம் யார்?
* இந்தப் பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. தி.மு.க.வும், காங்கிரசும்.
* இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..?
* காங்கிரஸ், திமுக செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
நாகர்கோவில்:
பா.ஜ.க. அரசின் திட்டங்களை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி,
* கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தார்கள்.
* தி.மு.க. தமிழ்நாட்டின் வருங்கால, கடந்த கால வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எதிரி.
* ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களுக்கு வந்தேன்.
* அயோத்தி விழாவை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்க கூட தி.மு.க. அரசு தடை விதித்தது.
* புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நாங்கள் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவினோம்.
* ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
* தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
* திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரி.
* மாற்று கட்சி தலைவர்களுக்கு குமரியில் இருந்து வரும் முழக்கம் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.#WATCH | PM Modi in Tamil Nadu's Kanniyakumari, says, "DMK is the enemy of the future and the culture of Tamil Nadu. Before the Ayodhya Ram temple 'Pran Pratishtha' ceremony, I came to Tamil Nadu and visited the prominent temples in the state. But the DMK govt tried to stop the… pic.twitter.com/Q5tEQpa9Pf
— ANI (@ANI) March 15, 2024
- பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
* தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன்.
* தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும்.
* தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.
* மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள்.
* நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது.
* பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.
* கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது.
* வாஜ்பாய் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.
* கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை கொண்டு வர மாநில அரசு உதவவில்லை.
* இரட்டை ரெயில் பாதை வேண்டும் என்ற மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை இவர்கள் நிறைவேற்றவில்லை.
* பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாம் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறோம்.
* உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
* மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன்.
* தமிழ்நாட்டின் ரெயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார்.
#WATCH | "DMK-Congress' INDI alliance can never make Tamil Nadu a developed state as its history is of scams and corruption...," says PM Modi during a public rally in Kanniyakumari, Tamil Nadu. pic.twitter.com/mcKvjA8QkO
— ANI (@ANI) March 15, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்