என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    • தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
    • பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    • நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் நிதிநிலை குறித்து பொருளாளர் கார்த்தி பேசினார்.
    • 5 உறுப்பினர்களுக்கு சங்கர தாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    தென்னிந்திய நடிகர் சங்க 69-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியதும் மறைந்த கலைஞர்கள் டெல்லி கணேஷ், சரோஜா தேவி, ராஜேஷ், மனோஜ் கே.பாரதி, ரோபோ சங்கர் உள்பட 70-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நடிகைகள் லதா, லட்சுமி, கோவை சரளா உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பொதுச் செயலாளர் விஷால் வரவேற்றார். 2024-25-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை துணைத்தலைவர் கருணாஸ் வாசித்தார்.

    மூத்த கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு 5 உறுப்பினர்களுக்கு சங்கர தாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    நடிகர் சங்க கட்டிட பணிகள்

    கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் நிதிநிலை குறித்து பொருளாளர் கார்த்தி பேசினார்.

    நிர்வாக செயல்பாடுகள், சங்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் விஷால் பேசினார்.

    இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் பழம்பெரும் நடிகை எம் .என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    பத்மபூஷன் விருதுபெறும் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்களின் நலனுக்காகவும் அனைத்து வகையிலும் ஆதரவளித்து உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்க உறுப்பினரும், துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    சிம்பொனி இசை அமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    பொதுக்குழு கூட்டத்தில் அம்பிகா, ரேகா, வடிவேல், ஸ்ரீமன், முத்துக்காளை, கானா பாலா, சாய் தன்சிகா, தங்கதுரை மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் பூச்சி முருகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்காதது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    சமூக வலைதளங்களில் செயல்படும் யூடியூப் சேனல்களில், நமது சங்கத்தை பற்றியும், நமது சங்க உறுப்பினர்கள் பற்றியும் அவதூறான செய்திகளை பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.

    மன உளைச்சலுக்கு உள்ளான நமது சங்க உறுப்பினருக்கு அந்த நபர் ரூ.3 லட்சம் மான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்.

    அவதூறு செய்தியை பதிவேற்றம் செய்யும் சமூக வலைத்தள சேனல் நிறுவனம் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
    • நாளை மாலை 04.00 மணி அளவில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் நாளை மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைப்பெற உள்ளதாக த.வெ.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக் கழகப் பயணத்தின் அடுத்த கட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர். வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், நம் கழகத்தின் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று, கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அத்தீர்மானத்தின்படி, மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், நாளை (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 04.00 மணி அளவில் சேலம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதைக் நமது வெற்றித் நலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கழகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாநாடு கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
    • புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

    மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொது மாநாடு தொடங்கியது.


    இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சி.பி.ஐ.எம்.எல். விடுதலை பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி.பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    மாநாட்டில் சாலமன் பாப்பையா, ராஜமுருகன், சசிகுமார், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றி மாறன், பிரகாஷ்ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை செந்தொண்டர் அணி வகுப்பு பேரணி நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.

    இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே சங்கரய்யா நினைவு திடலில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.

    வெங்கடேசன் எம்.பி. வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரளா முதல்-அமைச்சர் உறுப்பினர் ஆகி விஜயன் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத், உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    வரவேற்பு பொருளாளர் மதுக்கூர் ராமலிங்கம் நன்றி கூற மாநாடு நிறைவு பெறுகிறது. பொதுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும் சில பொலிட் பீரோ உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக் தவாலேவை தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பொலிட் பீரோவில் உள்ள மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, ஜி. ராம கிருஷ்ணன், பினராய் விஜயன், மாணிக் சர்க்கார் மற்றும் சுர்ஜ்ய காந்த மிஸ்ரா ஆகியோருக்கு 75 வயது நிரம்பி உள்ளதால், அவர்களுக்கு பதிலாக புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

    இவர்களில் பினராய் விஜயன் மீண்டும் தனக்கு கேரள முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12-ந்தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

    திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

    • அ.தி.மு.க. பொன்விழா பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.-நடிகர் வையாபுரி பேசுகிறார்கள்.
    • நிலையூரில் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை

    மதுரை அருகே நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

    பொதுக்கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட இளைஞரணி செயலாளர், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிைல வகிக்கிறார்.

    ராஜன்செல்லப்பா-வையாபுரி

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் வையாபுரி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றார்கள்.

    மேற்கண்ட தகவலை திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள காரத்தொழுவில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி சிறப்புரையாற்றினார்.மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
    • ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    • சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.

    அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் கரந்தை, கோட்டை, கீழவாசல் மற்றும் மருத்துவகல்லூரி பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் பொதுமக்களிடம் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
    • பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். இதில், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன் திருப்பூர் கோவிந்தசாமி மற்றும் ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

    இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ். சீனிவாசன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.

    ×