என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு"
- பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயம் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாகவே ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
நேற்று மாலையும் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களையும் வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என தேடியது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி லாரியின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை லாவகரமாக கீழே எடுத்து போட்டு ருசித்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து ஆசனூர் வனப்பகுதியில் சுற்றிவரும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
- தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது.
- யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார்.
- காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகள் கரும்பை தின்பதற்காக வனச்சாலையில் வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சாலையில் சுற்றி திரிகின்றன.
அவ்வாறு கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்து வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்த ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது. யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார். உடனே யானை லாரியின் முன்பக்கம் நின்று தும்பிக்கையால் கரும்பை எடுத்த போது லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பின்னர் லாரியில் இருந்து கரும்பை எடுத்துக்கொண்டு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை லாரியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன் நகர் கிராமத்தில் ரவி என்கிற விவசாயி தனது வீட்டை ஒட்டி தோட்டம் அமைத்துள்ளார். தோட்டதுக்குள் வாழை, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் தோட்டத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி மற்ற விவசாயிகளுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காட்டு யானையால் சேதம் அடைந்தன.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
- விஜயாவின் கணவருடன் வேலை பார்த்து வந்த மோகன் கடைசியாக விஜயா வீட்டுக்கு சென்றதும் பின்னர் அவசரமாக வெளியேறியதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா (38). வீட்டிலேயே துணி தைத்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வெல்டிங் தொழிலாளியான நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்பு எதிரில் உள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதே பட்டறையில் பவானி பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் விஜயா வீட்டில் தனியாக இருந்தார். மதியம் அவரது கணவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பட்டறைக்கு சென்று விட்டார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் தனது துணியை தைக்க கொடுப்பதற்காக விஜயா வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் விஜயா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் இறந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் காதில் அணிந்திருந்த தங்க சங்கிலி துண்டு துண்டாக சிதறி கிடந்தது. அருகில் கிரைண்டர் குழவி மிளகாய் பொடி பொட்டலம் மற்றும் அரிவாள்மனை கிடந்தது. அதே நேரம் வீட்டில் உள்ள நகை பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் இந்த கொலை பணம் நகைக்காக நடைபெறவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர். மோப்பநாய் காவிரி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவி பிடிக்கவில்லை.
பவானி டி.எஸ்.பி ரத்தின குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விஜயா வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் விஜயாவின் கணவருடன் பட்டறையில் வேலை பார்த்து வந்த மோகன் (50) கடைசியாக விஜயா வீட்டுக்கு மாலை 3 மணிக்கு சென்றதும் பின்னர் 3.30 மணிக்கு அவர் அவசரமாக வெளியேறியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து போலீசார் உஷார் ஆகி பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன் விஜயாவை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறும் போது,
மோகன் விஜயாவின் கணவர் நாகராஜ் வேலை பார்க்கும் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். விஜயா வீட்டில் துணிகளை தைத்து வந்துள்ளார். அப்போது மோகன் தனது மனைவியின் துணிகளை தைப்பதற்காக விஜயா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதைப்போல் நேற்று மதியமும் சாப்பிட்டு வருவதாக நாகராஜிடம் கூறி விட்டு விஜயா வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஜயா ஆத்திரத்தில் மோகன் மீது மிளகாய் பொடியை வீசு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் விஜயாவை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அருவாள்மனையால் அவரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்ய போது மோகன் சட்டையில் இரத்த கறை படிந்தது. பின்னர் மோகன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கால்வாயில் சென்று சட்டையை அலசி விட்டு பின்னர் மீண்டும் பட்டறைக்கு வந்து ஒன்றும் தெரியாது போல் வேலை பார்த்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் என்ன காரணத்துக்காக மோகன் விஜயாவை கொலை செய்தார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் முழுவிவரம் தெரிய வரும் என்றனர்.
- கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் என தெரிய வந்தது.
- போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் அருகே கீழ் பவானி கிளை வாய்க்கால் மதகு பகுதியில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டை கட்டி வாய்க்காலில் வீசப்பட்டது தெரிய வந்தது. இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் (22) என தெரிய வந்தது. இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த முகமது நூர் (26) மற்றும் 18 சிறுவன் என மூன்று பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் நெச்சிப்பாளையம் புதூர் பகுதியில் வந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி துணியை அரைத்து நூலாக செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் முகமது பைசலுக்கு முகமது நூர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து முகமது நூர், முகமது பைசலை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முகமத் பைசல், முகமது நூர் மற்றும் 18 வயது சிறுவன் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக முகமது பைசலுக்கும், முகமது நூறுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரத்தில் முகமது நூர் மற்றும் சிறுவன் இருவரும் சேர்ந்து முகமது பைசலை தலையின் பின் பக்கம் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் முகமது பைசல் உடலை வெள்ளை நிற சாக்கு பையில் கட்டி வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது. இந்த கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர்.
- சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் வளையக்கார வீதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர். எந்த விழாவானாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். அவ்வப்போது இவர்களது மகன், மகள்கள் வந்து பார்த்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அன்னியப்பன் வீட்டில் இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதிலிருந்து அள்ளியப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அன்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதனால் வேதனை தாங்காமல் பாப்பம்மாள் கணவரின் பிரிவை நினைத்து அழுது கொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் மாலை அன்னியப்பன் உடல் இறுதி சடங்கு செய்ய கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்த பாப்பம்மாள் திடீரென உயிரிழந்தார். இதனை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்த தம்பதிகள் சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
- கைத்தறி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.
இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர்.
- போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தந்தை நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிப்பு, தாய் சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிப்பு, மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிப்பால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அருகே கவின் பிரசாத் என்பவரின் மனைவி அமராவதி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தாய் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு ,கரூர் ,சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் எனவும் கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும் எனவும் கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
- போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவ்வப்போது சிப்காட் பகுதி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்களாதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்களாதேச தம்பதியினரை போலீசார் கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு வீரப்பன்சத்திரம், காமராஜ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பப்லு சர்தார் (37), அவரது மனைவி ரிபியா காடுன்(37) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. உரிய பாஸ்போர்ட் விசா எதுவும் இன்றி வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பப்லு சர்தார், அவரது மனைவி ரிபியா காடுன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






