என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Statement"

    • த.வெ.க. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் 18-ம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ளது.
    • இதில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை த.வெ.க. அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் 'ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கழகத் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    * கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    * தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும், அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

    * காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், மேலும் அங்கே செல்லும் வழிகளில் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

    * எளிதில் அடையாளம் காணும் வகையில், தன்னார்வலர்கள் சீருடை அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    * உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிற சாலைகளிலும் நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்கு கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    * தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும்.

    தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    • மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    அவனியாபுரம்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும், வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, மாமன்னர் மருது சகோதரர்களின் ஜெயந்தி விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    இந்த சிறப்பு மிக்க விழாக்களில் பங்கேற்க வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இருவண்ண கொடியினை கையில் ஏந்தி வரவேற்பு கொடுக்கும் வகையில் மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழகத்தி னர் என பெரும்பாலானோர் பங்கேற்று வரவேற்பு நிகழ்ச்சியினை சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
    • அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,

    பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,

    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

    விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.

    அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.

    வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
    • நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு ஜான் ஷாபிவி வீட்டுக்கு சென்று அவரிடம் நகைகளை இரவல் கேட்டேன்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வ மருதூரை சேர்ந்தவர் ஜான் ஷாபிவி (வயது 48). விவாகரத்து ஆனவர்.

    பிணமாக கிடந்தார்

    இவர் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று ஜான் ஷாபிவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தார்.

    அவர் அணிந்திருந்த நகைகள் காணவில்லை. காதில் ரத்தகாயம் இருந்தது இதுகுறித்து திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர்ஸ்டீபன் ஜோஸ் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜான் ஷாபிவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக ஜான் ஷாபி வி வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் அவரது உறவினரான அப்துல்காதர் (வயது 45) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் ஜான் ஷாபிவி அணிந்தி ருந்த நகையின் ஒரு பகுதி இருந்துள்ளது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் ஜான் ஷாபிவியை கொலை செய்ததை ஒப்புகொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர் போலீசாரி டம் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    கழுத்தை நெரித்து கொலை

    பக்கத்து ஊரான பெட்டைகுளத்தில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொள்ள பள்ளிவாசல் தெருவில் உள்ள பெரும்பா லானவர்கள் சென்று விட்டனர். நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு ஜான் ஷாபிவி வீட்டுக்கு சென்று அவரிடம் நகைகளை இரவல் கேட்டேன்.

    அவர் தரமறுத்தார் அதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த நகைகளையும், அவர் பயன்படுத்திய செல்போன் மெமரி கார்டையும் எடுத்து கொண்டு சென்றேன் மெமரி கார்டை தீயிட்டு கொழுத்திவிட்டு நகைகளை திசையன்விளை - நான்கு நேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் மண்ணில் புதைத்து வைத்தேன். அதில் சிறிதளவு நகை என் பேண்ட் பாக்கெட்டில் இருந்துள்ளது. அதை வைத்து என்னை கண்டு பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

    • நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாளை மதுரைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றுகிறார்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    1½ கோடி தொண்டர் களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில், கழக பொதுக்குழு உறுப்பினர் களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுத லோடு அ.தி.மு.க சிறப்பாக பணியாற்றி வருகிறது. அம்மா வழியில் சட்ட போராட்டம் நடத்தி, துரோகிகளின், விரோதி களின் சதி செயல்களை முறியடித்து, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி யின் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்து உள்ளார்.

    அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும் வகையிலும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையிலும் நாளை (10-ந்தேதி) மதியம் 1 மணிக்கு இடைக்கால பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, கூத்தியார் கூண்டு பகுதியில் 51 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (நான்) தலைமை தாங்குகிறேன். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ் சத்யன் ஆகியோர் வரவேற்புரையாற்று கிறார்கள். பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை எதிரொலிக்க, பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மட்டுமல்லாது, பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், அமைச்சருமான சாத் தூர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமி ழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையும், விருதுநகரின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான தங்க பாண்டியனின் 26-வது நினைவு தினம் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி மல்லாங் கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்றைய தினம் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டமன்ற உறுப் பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு செயற்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியே மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.
    • சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    கோவை,

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான செ.ம.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணா வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி நடத்திய அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.

    அவரை பொதுக்குழுவும், தொண்டர்களும் ஏகமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அ.தி.மு.க இயக்கத்தை வழிநடத்த அங்கீகாரம் வழங்கி உள்ளது.

    சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கு ஏற்ப நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களையும், நீதி தேவதையையும் வணங்குகிறோம்.

    2¼ கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒருசிலர் மேற்கொண்டு வரும் செயல்பாட்டுக்கு நீதிமன்றம், பொதுமக்கள் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை எடப்பாடி தலைமையில்தான் என்று முடிவு செய்த பிறகும் சிலர் கரைவேட்டி மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

    வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் நம்மில் ஒருவர், நம்மவர் எடப்பாடியார் தலைமையில் எம்.பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

    மதுரை மாநாடும், பொதுமக்களும், நீதிமன்றங்களும் நல்ல தீர்ப்பு வழங்கி நாளை நமதே என்று அச்சாரம் வழங்கிய நிலையில் கண் துஞ்சாமல் கழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கும் எடப்பாடியாருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியிருந்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களுடைய கோரிக்கை கள் எல்லாம் திட்டங்களால் செயல்படுத்துவதற்காக தான் தேர்தல் வாக்குறுதி களை கொடுக்கப்படு கிறது. அதை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.ஆனால் அந்த அடிப்படை தத்துவத்தை இலக்கணத்தை தி.மு.க. அரசு தகர்த்தெறிந்தி ருக்கிறது.

    சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். கணினி, தையல்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவு பகுதி நேர ஆசிரி யர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நிரந்தர ஆசிரி யராக ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

    இதை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆசிரி யர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். கல்விதான் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும். அப்படி கல்வியை போதிக் கும் ஆசிரியர்களே இன்றைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட்டம் நடத்து கிறார்கள்?

    இப்படி 520 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் போராட்டத்தை நடத்தி னால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விடும். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிரிவினர் போராடுகிறார் கள். தேர்தல் வாக்குறுதி களை கொடுத்து அதனை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

    ஆகவே தான் இந்த 520 தேர்தல் வாக்குறுதிகளும் காகித பூவாக காட்சிய ளிக்கிறது. உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வரும் இந்த ஆசிரியர்கள் போராட் டத்தை கண்டு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை களை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    மதுரை

    அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (17-ந் தேதி) காலை 9 மணிக்கு டி.குன்னத்தூர் உள்ள அம்மாகோவில் மணிமண்டபத்தில் உள்ள புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுரு சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கி ணங்க சோழவந்தான் குமாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும், திருமங்கலம் தொகுதியில் வருகிற 18-ந் தேதி கள்ளிக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டமும், அதனை தொடர்ந்து உசிலம்பட்டியில் 28-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் செயல்வீர்கள், செயல்வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.

    மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.

    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    ×