search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வருமாறு அறிக்கை-செல்லூர் ராஜூ
    X

    அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வருமாறு அறிக்கை-செல்லூர் ராஜூ

    • நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×