search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் மரியாதை
    X

    சாத்தூர் ராமச்சந்திரன்

    முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் மரியாதை

    • முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், அமைச்சருமான சாத் தூர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமி ழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையும், விருதுநகரின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான தங்க பாண்டியனின் 26-வது நினைவு தினம் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி மல்லாங் கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்றைய தினம் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டமன்ற உறுப் பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு செயற்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியே மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×