என் மலர்
நீங்கள் தேடியது "காவல்துறை"
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
- ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
- அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல் தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஏ.டி.எம்.களுக்குப் பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்த கும்பல், துப்பாக்கி முனையில் 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கை துப்பு துலக்கிய பெங்களூரு காவல்துறை ஐதராபாத்தில் வைத்து, கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் அன்னப்பா நாயக், பெங்களூரு கிழக்கு கோவிந்தபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். சேவியர் CMS Info Systems நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.
மூன்றாவது நபர் கோபி பிரசாத், கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தின் வழித்தடத்தை டிராக் செய்வதில் பங்காற்றியவர் ஆவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தான் ஒரு போலீஸ் என்பதால் போலீசிடம் சிக்காமல் கொள்ளையடிப்பதற்கான நுணுக்கங்களை அவரே தனது கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.
சிக்கியது எப்படி?
கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
அன்னப்பா நாயக் அங்கு பணியில் இல்லாதபோதும், அவர் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்துள்ளார்.
அங்குப் பணியில் இருந்த தலைமை காவலரை அணுகிய அவர், கொள்ளை குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா என்று குறிப்பாகக் கேட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் காட்டி அது உண்மையானதா என்றும் கேட்டுள்ளார்.
அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல்தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேறு ஒரு காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி இங்கு வந்து ஏன் இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும் என்று தலைமை காவலர் சந்தேகம் அடைந்தார். இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பின்னர் அவர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார்.
தீவிர விசாரணையில், கொள்ளையில் தனக்கு இருந்த பங்கை அன்னப்பா ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேவியருடன் அவருக்கு இருந்த தொடர்புகளை அவரது செல்போன் அழைப்புகள் உறுதிப்படுத்தின.
தற்போது, அன்னப்பா நாயக் மற்றும் இரு குற்றவாளிகள் பத்து நாட்கள் காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
- மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தன நிலையில், 2 மூதாட்டிகளை கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
நகைக்காக மூதாட்டி பாவாயி, பெரியம்மாளை கொலை செய்து குவாரி குட்டையில் வீசிய அய்யானர் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த அய்யனாரின் காலில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.
- அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
- எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் நேற்று முன் தினம் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பதிலும் உடற்தகுதி சான்று கொடுப்பதிலும் பெண் மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்ததை காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், உதவி ஆய்வாளர் கோபால், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் உறுதி செய்துள்ளனர். பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்தின் பின் தலைமறைவாகியுள்ள கோபால் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
- தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே DSP-க்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்
மகாராஷ்டிராவில் காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாகாராஷ்டிர காலவத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், "காவல்துறையின் கடமை பாதுகாப்பது, ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரைச் சுரண்டினால், எப்படி நீதி கிடைக்கும்? பாதுகாக்க வேண்டியவர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால் எப்படி?..
இந்தப் பெண் ஏற்கனவே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஆளும் மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையைப் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்.
- வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
- பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். பூரன் குமார் ஐபிஎஸ். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கடந்த வாரம் செவாய்க்கிழமை, புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். தலித் சமூகத்தை சேர்ந்த பூரன் குமார் காவல்துறையில் நிலவிய சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பூரன் குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மேலும் ஒரு திடீர் திருப்பமாக, அந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) சந்தீப் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
ரோஹ்தக் சைபர் செல்லில் ஏ.எஸ்.ஐ-ஆக பணிபுரிந்த சந்தீப் குமார், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன், அவர் மூன்று பக்க கடிதம் மற்றும் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "உண்மைக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறேன். நேர்மையின் பக்கம் நின்றதில் நான் பெருமை கொள்கிறேன். தேசத்தை விழிப்படையச் செய்ய இது தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி பூரன் குமார் ஒரு ஊழல்வாதி என்றும், தனது ஊழல் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சந்தீப் குமார் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு மதுபான ஒப்பந்ததாரரிடம் இருந்து பூரன் குமாரின் காவலர் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தான் பிடித்ததாகவும், இந்த விவகாரம் வெளியானபோது, பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தீப் குமார் தனது வீடியோ செய்தியில், பூரன் குமார் ரோஹ்தக் ரேஞ்சில் பொறுப்பேற்ற பிறகு நேர்மையான அதிகாரிகளைப் புறக்கணித்து, ஊழல்வாதிகளை நியமித்ததாகக் குற்றம் சாட்டினார். அவர்கள் வழக்குப் பதிவேடுகளை முடக்குவது, பாதிக்கப்பட்டவர்களை அழைத்துப் பணத்திற்காக மனதளவில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இடமாற்றங்களுக்காக சில பெண் காவலர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்த விவகாரம் சாதி தொடர்பானதல்ல, முழுக்க முழுக்க ஊழல் தொடர்பானது என்றும் சந்தீப் குமார் பேசியுள்ளார்.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
இந்நிலையில், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கரூரில் தனது பிரசார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை தொடங்கினார்.
விஜய் வருகைக்காக மதியம் முதல் காத்திருந்த பெருங்கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அதே உற்சாகத்துடன் காத்திருந்தது.
இந்த நிலையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
அப்போது, காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள், அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு வந்து இருக்க முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
- சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பூவை ஜெகன் மூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், திருவாலங்காடு காவல்நிலையத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரிக்க முயன்றார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அதிமுக கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்தாரா இல்லையா? என்றே விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி 'ஆள் கடத்தலில்' ஈடுபட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி விவாத பொருளாகவே மாறவில்லை.
பொதுமக்களை காக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையை தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் இல்லையா?
தமிழகத்தில் தினம் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொங்கு மாவட்டங்களில் வயதானவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர் ஜபகர் அலி, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், காவல்துறையே அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை தன் கையில் எடுத்து கொண்டு ஆள் கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை பயன்படுத்தும் தைரியம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிற்கு எப்படி வந்தது. ஒருவேளை காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் யாருக்கும் தெரிவதில்லையா? இல்லை காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லையா?
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நீதிமன்றத்திற்கு தெரிகிறது, ஆனால் முதலமைச்சருக்கு தெரியவில்லையா? இல்லை அவருக்கு யாரும் தெரியப்படுத்துவது இல்லையா? உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளதா? என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.
பொதுமக்களின் மனதில் எழும் இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் போல கடந்து செல்லாமல் முதலமைச்சர் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
- போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.
- குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் மந்திரம் ஆகியோர், நயினார்நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதேப்போல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் நல்லசாமி என்பவர், குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார். பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக போலீஸ்காரர்கள் 2பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி:
பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
- சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
- குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.
கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
"போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.
மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.
முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






