என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காவல்துறைக்கு நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
    X

    காவல்துறைக்கு நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்

    • நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
    • கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.

    இந்நிலையில், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கரூரில் தனது பிரசார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை தொடங்கினார்.

    விஜய் வருகைக்காக மதியம் முதல் காத்திருந்த பெருங்கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அதே உற்சாகத்துடன் காத்திருந்தது.

    இந்த நிலையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.

    அப்போது, காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள், அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு வந்து இருக்க முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×