என் மலர்
நீங்கள் தேடியது "police action"
- கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
- மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தன நிலையில், 2 மூதாட்டிகளை கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
நகைக்காக மூதாட்டி பாவாயி, பெரியம்மாளை கொலை செய்து குவாரி குட்டையில் வீசிய அய்யானர் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த அய்யனாரின் காலில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.
- திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன.
- நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் வழியாக திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. இந்த லாரிகள் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வளையப்பட்டி, மைக்கல்நாயக்கன்பட்டி தாண்டி செல்லும்போது, மர்ம நபர்கள் நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.
அதன்படி கடந்த 20 நாட்களில் 12 லாரிகளில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான மசாலா பாக்கெட்டுகள் திருடப்பட்டு உள்ளன. இதுகுறித்து திருச்சி மற்றும் கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நேற்று நாமக்கல் மாநில லாரி உரிமையாளர் செயலாளர் வாங்கலியை சந்தித்தும் முறையிட்டனர். அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், மசாலா பாக்கெட்டுகள் மட்டுமின்றி சோப்பு, பொடி ஏற்றி வரும் லாரிகளையும் குறி வைத்து நாமக்கல் பகுதியில் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. லாரி லோடு ஏற்றிய பின் அதை உரியவரிடம் ஒப்படைப்பது லாரி உரிமையாளர்களின் பொறுப்பாகும். ஆனால் வழியில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடப்பதால் லோடு ஏற்றிய நாங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
போலீஸ் நிலையங்களில் எங்களின் புகாரை பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டுக் கொடுத்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து நாங்கள் இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. இது போன்ற வழிப்பறி கொள்ளைகள் இரவு நேரங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து தான் லாரி டிரைவர்கள் பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
தமிழக அரசு இதுபோன்று லாரியில் திருட்டு நடந்தால், எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறதோ அதன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் இரவு நேரங்களில் கடந்த ஒரு மாதமாக போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லை. இதனால் அந்த பகுதியில் திருட்டுகள் அதிக அளவில் நடக்கிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்கள் பிரச்சினையை அறிந்து ஓடும் லாரியில் நடைபெறும் திருட்டுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
- இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை,நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ரேசன் அரிசி கடத்தல், இளம்பெண்கள் மாயம் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ந் தேதி மட்டும் 12 இடங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் விருதுநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள விறகு கடையில் மர்ம நபர் புகுந்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
இதேபோல் பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சூறையாடிவிட்டு அருகில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் தொடர் கொள்ளைகளால் அந்தப்பகுதி மக்கள் பீதிய டைந்துள்ளனர்.
எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், திருட்டு பயம் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது அச்ச மாக உள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை விற்பனையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சூதாட்டக்காரர்கள் சூதாட்டம் நடத்தி வருவதாக அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவருடைய தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சக்திவேல் மற்றும் போலீசார்கள் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோட்டப்பட்டி பெரிய ஏரி மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரின் விவரம் வருமாறு:-
ராஜா முகமது (வயது 43), சக்கரை (51), கணேசன் (45), சிலம்பரசன் (28), கருணாகரன் (53), குமார் (57), மகராமூர்த்தி (51), அஜித் (26), பழனிசாமி (52), வினோத்குமார் (33), தனபால் (49), செல்வம் (52), ராஜா (65), கலையரசன் (32), பெரியசாமி (46).
இவர்கள் சேலம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தலைமறைவான கன்ஸ்வாட்டர், அஜித், குமார், சங்கர், தங்கப்பா, குப்பன், ராஜகோபால் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.5,77,345 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர்.
- இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பதிவு எண்ணை பொருத்தி உள்ளனர்.
பார்ப்பதற்கு எளிதில் தெரியாத அளவிற்கு மாடலாகவும், கலர்கலராகவும் வைத்து இருக்கிறார்கள். விதிமுறைப்படி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்தும் பலர் கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தில்லை கங்கா நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம் ஏரி பாலம் அருகே இன்று காலை மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர். வாகனங்களில் இருந்த விதவிதமான நம்பர் பிளேட்டுகளை அதிரடியாக அகற்றினர். மேலும் அங்கேயே அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு விதிமுறைபடி உள்ள புதிய நம்பர் பிளேட் மாற்றப்பட்டது.
சுமார் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதில் சிக்கியது. கார்களும் தப்பவில்லை. விதிமுறை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை.
வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சிக்கிய வாகனங்கள் சாலை யோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
புளியந்தோப்பு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கினர். மேலும் வாகன ஓட்டிகள் விரும்பினால் உடனடியாக நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைத்தனர்.
இந்த வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முனிவேல், ரேகா, சையத் அமின், தலைமை காவலர்கள் பாஸ்கர், சுரேஷ்பாபு, பிரேம்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.
- நெல்லை மாநகர பகுதி களில் போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாக கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
- இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி களில் விபத்துகளை குறைக்க வும், போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாகவும் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அபராதம்
அதன்பேரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்கும் பொருட்டு மாநகரின் பல்வேறு இடங்களிலும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி விதிமு றைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். இதனைப்பார்த்த போலீசார் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
20 இடங்களில் வாகன சோதனை
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பழையபேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளம் குளக்கரை சாலை, டவுன் ஆர்ச் பகுதி, ஈரடுக்கு மேம்பால கீழ்பகுதி, சந்திப்பு, வண்ணார்பேட்டை, புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப் பட்டது.
அப்போது ஏராளமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாமலும் சென்றதை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை பிடித்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.
வண்ணார்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
- சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- வீண் அபராதத்தையும் தவிர்க்க, அனைவரும் தங்களின் முறையற்ற வாகன எண் தகடுகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னையில் முறையான பதிவு எண்கள் பொறிக்காத வாகன பதிவு எண் பெயர் பகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினர் வாரந்தோறும் முறையற்ற வாகன பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த 3 வாரங்களில் சுமார் 43 ஆயிரம் வாகனங்களை சரிசெய்து முறையான எண் பொறுத்தப்பட்டுள்ளது.
சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3 நாட்களுக்குள் அபராதம் செலுத்துமாறு வழக்குப் பதிவு செய்த அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கும், காவல் நிலைய மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு அறிவுறுத்தி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் துண்டு அறிக்கை ஒட்டப்பட்டன.
இந்த துண்டு அறிக்கையை வாகன ஓட்டிகள் படித்து அறிந்து எண்ணை சரி செய்து அனுப்பி வைக்கவும், அதற்குண்டான அபராத தொகையை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் அவருக்கு ரூ.1500 என விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தங்களது சவுகரியத்தையும் வீண் அபராதத்தையும் தவிர்க்க, அனைவரும் தங்களின் முறையற்ற வாகன எண் தகடுகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.
- புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் வடமாநில வாலிபர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது குறைந்தது. இந்தநிலையில் கோவையில் நேற்று வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வட மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா (வயது 33). இவர் இடையர் வீதியில் தங்கி இருந்து தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் தன்மைய் ஜனா, ஜகாத் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு இவர்கள் 3 பேரும் மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் குடிபோதையில் வந்தனர்.
அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கவுதம் சியாமல் கட்டுவா, தன்மைய் ஜனா ஆகியோரை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் காந்திபார்க் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வட மாநில வாலிபர்களை தாக்கியது. செட்டிவீதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (19), பிரகாஷ் (20) கல்லூரி மாணவர் பிரகதீஸ் (21) வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தெரியாமல் தாக்கி விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர்.
- இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல் மற்றும் வாகன விதிமீறல்களை தடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 18-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை தீவிர வாகன சோதனை, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் போலீசார் தீவிர ஈடுபட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 89 லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள், வேறு மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிரமாக 2100 வாகனகளில் சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக பாரங்கள் ஏற்றி செல்லுதல், செல்போனில் பேசி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1777 வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்தனர்.
இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் 260 பழைய குற்றவாளிகள், 196 ரவுடிகளை அதிரடியாக நேரில் சென்று அவர்கள் சொந்த ஊரில் உள்ளனரா? வீட்டில் உள்ளார்களா? தற்போது வெளியூரில் இருந்தால் என்ன வேலை செய்கிறார்கள்? தற்போது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? என்பதனை அதிரடியாக சோதனை செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகளையும், 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 32 நபர்கள் மீது சந்தேக வழக்கு பதிவு செய்து அவர்களின் கைரேகை, முழு விலாசம், தற்போது காரணம் இன்றி வெளியில் சுற்றுதல்? உள்ளிட்டவைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இருந்து சாராயம் மற்றும் மது கடத்தல் தொடர்பாக 26 வழக்கில் செய்து 27 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் குற்ற சம்பவங்கள், வாகன விதிமீறல்களை தடுப்பது, அடிக்கடி வாகன விபத்தால் ஏற்படும் இறப்பு சதவீதத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்யவும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர். 377 லாட்ஜுகள் மற்றும் 100 மேன்சன்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் எதற்காக அறை எடுத்து உள்ளனர்? அவர்களது முகவரி சரியானதுதானா? என்பதை எல்லாம் போலீசார் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் பயன்படுத்தினர்.
இதில் 4123 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 4 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பிடிபட்ட இந்த குற்றவாளிகள் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
லாட்ஜுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்றது. சென்னை மாநகரம் முழுவதும் 7195 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டியதாக மொத்தம் 60 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் சிக்கின. மொத்தம் 142 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 517 வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்கப்பட்டதில் முறைகேடாக இயங்கிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்த வேட்டை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.
- சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.
திருவாரூர்:
திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே தங்கி உள்ளார்.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். அதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள முத்து மீனாட்சி வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வெளிளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.
இதேப்போல் வீட்டு மனை பட்டா முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ.வும், தற்போதைய விளமல் வி.ஏ.ஓ.வுமான துர்காராணி என்பவரின் விளமல் சிவன் கோவில் நகரில் உள்ள வீடு மற்றும் அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ. உதவியாளர் கார்த்தி என்பவரது அடியக்கமங்கலத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேப்போல் தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
மேலும் சோதனை நடைபெறும் திருவாரூர் மாவட்டம் 3 அரசு அலுவலர்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஒரு அரசு அலுவலர் ஆகிய 4 பேரின் வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4அரசு அலுவலர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 55 விபசாரதரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னையில் மசாஜ் செண்டர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து அவர்களின் மனதை மாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை பிடிக்க சென்னை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் கீழ் இயங்கி வரும் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்புடன் விபசார வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் லாட்ஜுகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தரகர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 55 விபசாரதரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் புரோக்கர்கள் செல்போன்கள் மூலமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அழைத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
தற்போது இணைய தளங்கள் மூலமாகவே புரோக்கர்கள் பாலியல் தொழிலுக்கு வலை விரித்து கொண்டிருக்கிறார்கள். லொகாண்டோ, ஜஸ்ட் டயல், விவா போன்ற பாலியல் இணையதளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை வளைத்து போடும் தரகர்களின் எண்ணிக்கை நாளுக்கும் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனை கருத்தில் கொண்டு இந்த இணைய தளங்களை முடக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.
இது போன்ற பாலியல் இணைய தளங்களை முற்றிலுமாக முடக்கும் வகையில் சைபர்கிரைம் போலீசார் மூலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன் படி இந்த இணைய தளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து முடக்குவதற்காக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறையின் செயலாளருக்கும் போலீசார் பரிந்துரை செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் மூலம் பாலியல் இணைய தளங்களுக்கு விரைவில் முட்டுக்கட்டை வருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






