என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raid"

    • ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை
    • மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராவும், அவரது  துவாரகநாதனும் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே உள்ள செவாலியே சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திராவின் வீட்டில் திடீரென கோவை ஜிஎஸ்டி  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், திமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வீடு மட்டுமின்றி துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகன் செந்தில் குமார் வீடு, இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • இந்த சோதனையில் தங்கக்காசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் ஜஜ்புர் மாவட்டத்தில் துணை வனக் காப்பாளராக இருக்கும் ராமச்சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.

    மேலும் 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும்.

    • கர்நாடகாவில் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வீடு, அலுவலகத்தில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தி வருகிறது.
    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா சோதனை நடத்துகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு ஹனுந்தராய தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி நகைகள், மற்றும் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்தி பிரபல நடிகரான அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் அஜய் 74 ரெய்டு மற்றும்  அவரது நேர்மையினால் 74 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக நடித்து இருக்கும் ரிதீஷ் தேஷ்முக்கிடம் 75 வது ரெய்டை  நடத்தவுள்ளார் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. 

    மேலும் இப்படத்தில் ரிதீஷ் தேஷ்முக், வானி கபூர், ராஜத் கபூர், சௌரப் ஷுக்லா, சுப்ரியா பதக் , அமித் சியால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    2018 ஆம் ஆண்டு வெளியான ரெய்ட் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் கதையாக அமைந்துள்ளது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பாகமும் வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.

    சிவா டெக்ஸ்டைல்ஸ்

    இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.
    • ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    சேலம்:

    சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

    இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    இதையடுத்து அந்த போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே ஊரக வேளாண் விவசாயிகள் கூட்டுறவு சங்க லிமிடெட்டின் என்ற பெயரில் கிளை வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இங்கு கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர்.

    அப்போது வங்கி மேலாளர் விமல்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    • பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    ரெயில் நிலையம்

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருப்புப் பாதை இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஜான், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரெயில்வே தண்டவாளம்,ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் ஆகியவையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் இருசக்கர வாகனங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் முழுவதும் அதிநவீன கருவிகள் கொண்டு தணிக்கை செய்யப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாநகர் பகுதிகளில் இருக்கும் முக்கிய அலுவலகங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கேட்பாரற்ற நிலையில் இருக்கும் அனைத்து விதமான வாகனங்களும் தீவிர தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரி களுக்கும் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.ஜி.இ. காலனி, எம்.ஜி.ஆர் நகர் உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அப்போது தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

    • வீடுகளில் ஆயுத சோதனை
    • 18 ரவுடிகள் தலைமறைவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் முன்னிலையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் வினோத் கண்ணன், ராம்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், குமார் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் பெரம்பலூர் சங்குப் பேட்டை, திருநகர், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் திடிர் சோதனை செய்தனர்.அப்போது ரவுடிகள் வீட்டில் உள்ளனரா ? எங்கு உள்ளனர் ? குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என ரவுடிகளிடமும், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடப்பட்ட 48 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 ரவுடிகளில் இதுவரை குண்டாஸ் சட்டத்தில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ரவுடிகள் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். 3 ரவுடிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். . 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேர் ஆர்டிஓ உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 ரவுடிகள் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வைத்து நகை பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவ தாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவுக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகார்களின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகரில் அனைத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திடீர் வாகன சோதனை நடைபெற்றது. முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    திருப்பூர் மாநகர் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.




    ×