search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raid"

    • அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
    • 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மங்களூரு நகர சிறை வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் சிறைச்சாலையின் அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

    இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 25 செல்போன்கள், 1 புளூடூத் கருவி, 5 இயர்போன்கள், 1 பென் டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்தரிக்கோல், 3 கேபிள்கள் மற்றும் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் பிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கியது.

    இந்த பொருட்கள் எப்படி சிறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனை கடைசிவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    • சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றச்சாட்டு.
    • பெண் தொண்டர்களை கைது செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதில் சில வழக்குகளில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையே அவரது கட்சி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றம் சாட்டியது. இதனால் இம்ரான்கான் கட்சியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் இம்ரான்கான் கட்சியின் தலைமையகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைநகர் இஸ்லாமா பாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள் போலீஸ் படை நுழைந்தது.

    அங்கு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். பின்னர் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹசன் உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பெண் தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

    போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு முயற்சி செய்து வரும் சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும்.
    • மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    தெக்ரான்:

    ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணி யாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது. துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. அந்த அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறும் போது, துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் அதிகாரிகள் சென்று ஊழியர்கள் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதல் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் ஊழியர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணிய வில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனால் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸ்காரர் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி சென்றனர்.

    திட்டுமலை காளி கோவில் சென்றபோது அங்கு நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை அய்யனார் கோவில் செல்லும் பாதையில் ஓட்டி சென்றனர்.

    தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றபோது வாகனம் செல்ல பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் பாதரக்குடி அய்ய னார் கோவில் செல்லும் மண் ரோட்டில் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ எடையுள்ள, 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    பின்னர் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்த வாகனம் குறித்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாநகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் சோதனை நடந்தது.

    இதில ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த ஆந்திரா மாநிலம் மக்காவரப்பள்ளம் ஜி நகரம் துர்கா ராவ், அல்லூர் அண்ணாவாடு காலனி சித்தம்பள்ளி சண்டிபாபு, கிழக்கு கோதாவரி வெக்கவ ரம் அபிலேஷ் வர்மா, கிருஷ்ணலங்கா விஜயவாடா சுபாஷ், விசாகப்பட்டினம் பக்கனபாலம் வித்யாசாகர் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமி ருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் உள்பட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி குன்றக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பிடிபட்டவர்களில் வித்யாசாகர் என்பவரின் தந்தை ஆந்திர மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை.
    • ஆவணங்கள் சிலவற்றை எடுத்துக் சென்றுள்ளதாக தகவல்.

    கரூரில் முன்னாள் :அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டனர்.

    எம்.ஆர்.வி ட்ரஸ்ட் அலுவலகம், நூல் குடோன் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்துக் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.ஆர்.வி. ட்ரஸ்ட், சாயப்பட்டறை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவுபெற்றுள்ளது.

    • ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) காலை எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட சி.பி .சி .ஐ .டி போலீசார் சோதனை நடத்தினர்.

    வழக்கில் தொடர்புடைய யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

    இதனிடையே இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனுவை நேற்று இரவு மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இதை தொடர்ந்து இன்று கரூரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    சென்னை, கரூர் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அருகில் உள்ள நூல் குடோன், ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட் மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு ஆகிய இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.

    இதேபோல் கரூர், கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம், திரு.வி.க சாலையில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் அலுவலகம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சோதனையில் நில மோசடி தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? வேறு ஆவணங்கள் இருக்கிறதா? என்று ஆய்வில் ஈடுபட்டார்கள்.

    7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனை நடத்த திட்டமிட்டிருந்த சில இடங்களில் பூட்டு போடப்பட்டு ஆட்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

    இந்த திடீர் சோதனை காரணமாக கரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதை தொடர்ந்து கரூர் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

    அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.

    இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.

    எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி களிடம் தகவல்களை பெற்று தமிழக போலீசாரும் தனியாக விசாரித்து வருகி றார்கள். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அதிகாரி கூறும்போது, `சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. அதில் உள்ளவர்கள் சிக்கிய நாள் அன்றே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அந்த 2 கடைகளிலும் சோதனை நடந்தது. தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது.
    • ராகி மாவு மற்றும் துவரம் பருப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சொமோட்டோவிற்கு சொந்தமான பிளிங்கிட் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தெலுங்கானா மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் கூறுகையில்,

    குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனில் விதிமீறல் நடந்து இருப்பது அதிகாரிகளின் சோதனையில் கண்டறியப்பட்டது.

    ராகி மாவு மற்றும் துவரம் பருப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    உணவு கையாளுபவர்கள் தலைக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கவச உடை அணியாமல் இருந்தனர். உணவு கையாளுவோரின் மருத்துவ தகுதிச் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை.

    உணவு பொருட்களுடன் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹோல் ஃபார்ம் பிராண்டின் உற்பத்தியாளர்களில் ஒன்றான கன்குரூன்ஸ் டிரேட் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் உரிமம் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின்படி இல்லை.

    நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

    • மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
    • அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    மும்பை:

    சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 174 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பதட்டமின்றி பத்திரமாக மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதன்படி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் இண்டிகோ விமானம் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது விமானத்தின் கழிவறையில் 30 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கிலத்தில் டஸ்யூ பேப்பர் ஒன்றில் எழுதப்பட்ட எச்சரிக்கை குறிப்பு ஒன்று கிடந்தது. அதையும் பறி முதல் செய்துள்ள போலீசார் இதனை எழுதிப் போட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத் துக்குள் கிடைத்த 2-வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் சுயேட்சை தலைவர்கள் தங்களது பினாமிகள் மூலம் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராஞ்சியில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் அலம்கீர் ஆலனின் நெருக்கமான உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அமைச்சரின் தனிச்செயலாளர் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் முற்று கையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அமைச்சரின் செயலாளர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த பணக்கட்டுகள் அனைத்தும் 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன.

    இதையடுத்து அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்களை வரவழைத்தனர். வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த பணக்கட்டுகளை எந்திரம் உதவியுடன் எண்ணினார்கள்.

    அதில் 20 கோடி ரூபாய் அளவுக்கு கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அமைச்சரின் மற்றொரு வீட்டிலும் பணக்குவியல் இருந்தது. அங்கு பணத்தை எண்ணி வருகிறார்கள். அங்கு ரூ.10 கோடி அளவிற்கு பணம் சிக்கியதாக தெரியவந்தது.

    அமைச்சரின் செயலாளர் வீட்டில் ரூ.30 கோடி வரை கட்டு கட்டாக பணம் சிக்கியது ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ×