search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில்-போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை
    X

    எஸ்.பி. ஆய்வு செய்த போது எடுத்த படம்

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில்-போலீஸ் சூப்பிரண்டு 'திடீர்' சோதனை

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரி களுக்கும் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.ஜி.இ. காலனி, எம்.ஜி.ஆர் நகர் உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அப்போது தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

    Next Story
    ×