என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Railway Station"
- பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும்.
- பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
சென்னை தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் பல்லாவரம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பல்லாவரம் பயணிகள் மட்டுமின்றி, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, குன்றத்தூர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.
இப்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால் மாணவ மாணவிகள் பல்லாவரம் ரெயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற திருநீர்மலை ரங்கநாதர் கோவிலும் இங்கு உள்ளது.
பெண்கள் அதிக அளவில் வேலை செய்யும் தொழில் கூடங்கள், புதிய குடியிருப்பு அதிக அளவில் இருப்பதால், பல்லாவரம் ரெயில் நிலையத்தில், அதிகாலையில் இருந்து, நள்ளிரவை தாண்டியும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன.
கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, இரவு 9:30 மணிக்கு மேல் தான் மீண்டும், மின்சாரம் வந்தது. அதற்கு முந்தைய வாரத்திலும் இதேப்போல் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பல்லாவரம் ரெயில் நிலையம் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.
இதனால் ரெயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனால் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணிகள் பலர், ரெயிலை விட்டு இறங்கியதும் தங்கள் செல்போன்களில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து, அந்த வெளிச்சத்தில் நடந்து செல்கின்றனர். அதேப்போல் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கடைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பிளாட்பாரத்தில் வருகின்ற ரெயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்கு செல்கிறது என்பதை காட்டும் டிஸ்ப்ளே போர்டில், விளக்குகள் எரியாமல், இருள் அடைந்து விடுவதால், வருகின்ற ரெயில் எங்கு செல்வது செல்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
படிக்கட்டுகள் இருளடைந்து கிடப்பதால், வயதானவர்கள் படிகளில் ஏறி வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கடந்த 2016 -ம் ஆண்டு சுவாதி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்களில், இதுவரையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படவில்லை.
பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை, சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாததை மர்ம கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் பெண் பயணிகள், பீதியில், தினமும் பயணித்து வருகின்றனர்.
எனவே ரெயில்வே நிர்வாகம், உடனடியாக பல்லாவரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பதோடு, இரவு நேரங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் உபயோகிப்பதற்கான இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரை அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, பாதுகாப்புக்காக பெண் போலீசார் உள்ளிட்ட காவலர்களை, பணியில் அமர்த்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாநகரில் நேற்று முதல் பெய்த மழை காரணமாக உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரெயில்வே நிலையம் செல்லும் சாலை, ரெயில்வே தண்டவாளம், ரெயில்வே பணிமனை, வ.உ.சி.சாலை, ஜார்ஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, தமிழ்நாடு சுற்றுலா மாளிகை, சிவந்தாகுளம், லெவிஞ்சிபுரம், முத்தையாபுரம், ஸ்பிக்நகர், முள்ளக்காடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
- அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த இன்டர்சிட்டி ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது சரவணன் என்ற வாலிபர் 1-வது நடை மேடையில் சாக்கு பையில் பட்டாசுகள் கொண்டு வந்தார். அவற்றை போலீ சார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போல் அந்த ரெயிலில் ஏறி திருவனந்த புரம் செல்வதற்காக மோனு சுமன்(வயது 41) என்ற நபர் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் 10 பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தன.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
- தினமும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பயணிகள் டிக்கெட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
- இந்த முன்பதிவு மையம் ஞாயிற்றுகிழமைகளில் செயல்படாமல் உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகல ரெயில் பாதை ஏற்படுத்தப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில்களில் அப்பகுதி மக்கள்பயணம் செய்ய ஏதுவாகரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் பயணிகள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், இங்கு தட்கல் ரெயில் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் ஞாயிற்று கிழமைகளில் செயல்படாமல் உள்ளது.
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.
எனவே, பயணிகளின் நலன் கருதி ஞாயிற்றுகி ழமைகளிலும் முன்பதிவு மையத்தை திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை ரெயில் நிலையத்தில் புதிய கட்டமைப்பு பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
- அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் கடந்த செப்.23-ந் தேதி 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தரக் கோரி நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி நகர்மன்ற தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று மத்திய இணை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சிவகங்கை ரெயில் நிலை யத்தில் நடைபாதை லிப்ட் வசதி, டிஜிட்டல் போர்டு, கழிப்பறை வேலைகள் நடை பெற்று வருகின்றன. இதனை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், அயூப்கான், ராமதாஸ், சரவணன், விஜயகுமார், சண்முக ராஜன், மகேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
- கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப க்கழகம் மூலமாக 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு க்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளரிடம் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொது ச்செயலாளர் இளவரி தெரிவித்ததாவது:-
சரக்கு கொட்டகை பயன்பாட்டிற்கு வருவதற்கு பெரிதும் துணை நின்ற ரெயில்வே அதிகாரி ஹரிக்குமார், அவர்களுக்கும் திருச்சி கோட்ட மேலாளருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் திருத்துறைப்பூண்டியில் ரயில் தலைப்பு (வேகன்) கொண்டு வர பெரு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வேகன் இயக்கம் மூலம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும், கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் சார்பில் சில நியாயமான கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கை அரசின் கவனத்திற்கு சார்பில் கொண்டு செல்லப்படும் என்றார்.
- ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
- முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே தஞ்சாவூர், திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இன்று, நாளை என 2 நாட்கள் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06039) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக நாளை (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்று அடையும்.
இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண்.06040) நாளை (திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் சென்று 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இந்த ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதியுடன் 2 அடுக்கு ஏசி 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏசி 10 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டி, முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது.
- ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.
நெல்லை:
தென்மாவட்ட ரெயில் நிலையங்களில் முக்கியமானது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம். நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில்களை கையாளுவதில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
நெல்லை ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து வரும் ரெயில்கள் மற்றும் வடபகுதியில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தெற்கு நோக்கி வரும் ரெயில்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் அணிவகுத்து வருவதால் 5 நடைமேடைகள் போதுமானதாக இல்லை.
தற்போது சென்னை நோக்கி செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் முதலாவது நடை மேடையிலும், அனந்தபுரி- கன்னியாகுமரி ரெயில்கள் 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் - நெல்லை ரெயில் 3-வது நடைமேடையிலும், நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் 4-வது நடைமேடையிலும், திருச்செந்தூர் - நெல்லை ரயில் 5-வது நடைமேடையையும் வந்து செல்கின்றன.
பின்னர் செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரெயில் திருச்செந்தூர் ரெயிலுக்கு பின்பாக 5-வது நடைமேடையில் மெதுவாக கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. இதே நேரத்தில் தான் தூத்துக்குடி - நெல்லை ரெயில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஈரோடு - நெல்லை ரெயில் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.
தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.
எனவே நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள இட நெருக்கடியை குறைப்பதற்கு கூடுதல் நடைமேடைகளை அமைத்து நெல்லையோடு நிற்கும் பாலருவி ரெயிலை தூத்துக்குடிக்கும், ஈரோடு நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து செங்கோட்டை பண்பொழியை சேர்ந்த ரெயில் பயணி சுரேஷ் கூறுகையில், பாலக்காடு - நெல்லை பாலருவி விரைவு ரெயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உடனடியாக இந்த நீட்டிப்பை செய்ய வேண்டும்.
மதுரைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீடிக்க வேண்டும். அப்போதுதான் செங்கோட்டை நாகர்கோவில், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயில்களையும் வடக்கில் இருந்து நெல்லை நோக்கி வரும் ரெயில்களையும் தாமதம் இல்லாமல் ரெயில் நிலையத்தின் உள்ளே வர முடியும். இவ்வாறு செய்வதால் திருச்செந்தூர், நெல்லை மற்றும் செங்கோட்டை நெல்லை ரெயில் வழித்தடத்தில் உள்ள பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களை பிடிப்பதற்கு வசதியாக அமையும். மேலும் கூடுதல் நடைமேடைகள் அமைத்தால் தான் வருங்காலங்களில் நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.