search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea furious"

    • தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
    • அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதுபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கன்னியாகுமரி:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலும் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது.

    இன்று காலை கடல் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. அவை பாறைகளில் முட்டி மோதி சிதறியதை பார்க்க பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக இன்று காலை விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல இன்று இந்த பகுதியில் உள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் வள்ளங்கள், கட்டுமரங்கள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.



    கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை நேற்றும்3-வதுநாளாக தொடர்ந்து பெய்தது. மழையின் காரணமாக கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சிஅளித்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் மழைமேகத்தை பொருட்படுத்தாமல் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் இருந்தே கடற்கரைக்கு திரண்டு வந்தனர். ஆனால் மழை காரணமாக இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. இதனால் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு சூரியன் உதயமாகும் காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த மழையினால் கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நடுக்கடலில் இருந்தது பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோ‌ஷமாக வந்து கடற்கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.

    சில நேரங்களில் கிளம்பி வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு விட்டுச் சென்றன. இந்த ராட்சத அலையை கண்டு கடலில் கால் நனைக்க சென்ற சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தக் கடல் சீற்றத்தினால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அச்சம் அடைந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு ஏற்கனவே வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வெளியே வர முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி குற்றாலம் சீசன் போல் “குளுகுளு” என்று மாறிவிட்டது.
    கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம். வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகு பராமரிப்பு, வலைகள் சரிசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மீனவர்கள் பைபர் படகுகளில் சென்றும் மீன் பிடித்து வருகின்றனர். இதில் குறைந்த அளவில் மீன்கள் கிடைப்பதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கடல் சீற்றமாக உள்ளது. புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இன்றும் கடல் தொடர்ந்து சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    கடல் சீற்றம் தணிந்த பிறகு தான் கடலில் பைபர் படகுகளில் சென்று மீன் பிடிக்க செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்டு சேதமான படகுகளை மீனவர்கள் இன்று வரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் நீடித்ததால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையை பார்க்க அழைத்து செல்லப்பட்ட பயணிகளும் அவசர, அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதுபோல நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது.

    இன்றும் அங்கு கடல் சீற்றம் நீடித்தது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.

    கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கட்டுமரம், வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. அலைகளின் சீற்றத்தை கண்டு அவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விசைபடகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதுபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் பயணிகள் முகத்தை மூடியபடி சென்றனர்.

    இன்று அதிகாலையில் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள் அதன்பின்பு கடலில் குளிக்க சென்றனர். அவர்களை பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    கன்னியாகுமரியில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் படகு போக்குவரத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதனால் படகில் செல்ல காத்திருந்த ஏராளமான சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சென்னை அருகே நடுக்கடலில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கன்னியாகுமரி வரை நீடித்து கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.


    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் குவிந்து வருகிறார்கள்.

    அவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி கடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக படகு போக்குவரத்தை சீராக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றும், அதற்கு முந்திய நாளும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று காலை கடல் சீற்றம் சற்று தணிந்ததை தொடர்ந்து 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 10 மணி அளவில் கடல் அலையில் மாற்றம் ஏற்பட்டு சீற்றமாக இருந்தது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


    நாகை மாவட்டத்தில் சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    நாகப்பட்டினம்:

    தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தென்கிழக்கே பெயிட்டி புயல் நிலைக்கொண்டு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா இடையே இன்று (17-ந் தேதி) பிற்பகலில் கரையை கடக்கிறது.

    இதன் காரணமாக கடலோர மாவட்டங்களான நாகை, தஞ்சையில் சில இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. நாகையில் கடல் அலைகளின் சீற்றம் ஆக்ரோ‌ஷத்துடன் உள்ளது. கடல் அலை சுமார் 3 மீட்டர் வரை உயரே எழும்புகிறது. கடலோர பகுதிகளில் காற்றும் வீசி வருவதால் நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 4-வது நாளாக நாகை, நாகூர், நம்பியார் நகர், அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி, செருதூர், விழுந்தமாவடி, வேதாரண்யம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பழையாறு துறைமுகம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 4-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமான படகுகளால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வது இல்லை. சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    அதிரை மற்றும் மல்லிப்பட்டினத்தில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகையில் இன்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், சேது பாவா சத்திரம், மல்லிப் பட்டினம் ஆகிய கடலோர மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமானது. கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீனவர்கள் மீள முடியாமல் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடலோர மாவட்டங்களில் 15-ந் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே நேற்று பிற்பகலில் அதிராம்பட்டினம், சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளில் கடல்நீர் திடீரென உள்வாங்கியது.

    அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை சுமார் 150 மீட்டர் வரை கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கத்துக்கு மாறாக கடல், குளம்போல் அமைதியாக இருந்தது.

    அதேநேரத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் 100 மீட்டர் வரை கடல்நீர் உள் வாங்கி இருந்தது.

    இதகுறித்து அதிராம்பட்டினம் மீனவர் சங்கர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம் பட்டினத்துக்கு இப்போது தான் மின்சாரம் வந்துள்ளது. தற்போது மேலும் ஒரு புயல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். மேலும் கடல் காற்று மாலை நேரத்தில் வேகமாக வீசும். ஆனால் கடல் காற்று இல்லாமல் அமைதியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே நாகையில் இன்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    இதனால் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கோடியக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-வது நாளாக கடல்நீர் சீற்றம் அதிகாமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையோரம் உள்ள வீடுகளை சூழ்ந்ததால் அச்சத்தில் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது கடல் சீற்றம் இருந்து வந்தது. சூறைக்காற்றும் அதிகமாக வீசியதால் ராட்சத அலைகள் எழும்பி வந்தன. கடல் சீற்றத்தின் காரணமாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு அவ்வப்போது முன் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து விடாமல் இருக்க ஒருசில வீடுகளின் முன்பு மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்திருந்தனர்.


    கடல் சீற்றம் பற்றி தகவல் அறிந்ததும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அழிக்கால் கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்£ர். அப்போது மீனவர்கள் அவரிடம் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் அழிக்கால் தூய அன்னை ஆலயம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுடன் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அழிக்கால் பங்கு தந்தை சோரிஸ், ஊர் தலைவர் ஜாண்சன் உள்பட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    போராட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1½ மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்களிடம் போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உங்களது கோரிக்கைகள் குறித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (26-ந்தேதி) மாலை கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தப்படுமென்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நேற்றிரவும் கடல் சீற்றமாக காணப்பட்டதால் இரவு முழுவதும் மீனவர்கள் அச்சத்திலேயே தவித்தனர். இன்று காலையிலும் தொடர்ந்து கடல் சீற்றம் நீடித்தது. அழிக்கால் பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இந்த அலைகள் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்கும் புகுந்தது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    குளச்சல், முட்டம், கொட்டில்பாடு பகுதியிலும் அலையின் சீற்றம் வேகமாக இருந்தது. குளச்சலில் ராட்சத அலைகள் கடலுக்குள் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மீது 10 அடி உயரத்திற்கு மேலாக எழும்பியது.

    மார்த்தாண்டம் துறை, நீரோடி, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ள விளை, பூத்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
    நாகர்கோவில்:

    வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசக்கூடும் எனவும், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பான எச்சரிக்கை குமரி மாவட்ட மீனவர்களுக்கு விடுக்கப்பட்டது. மீனவளத்துறை அதிகாரிகள், கடற்கரை கிராம பங்குத்தந்தைகளுக்கு கடல் சீற்றம் காரணமாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த தங்கள் கட்டுமரங்கள், வள்ளங்கள், படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர். கடல் சீற்றம் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கட்டுமரம், வள்ளம், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் பகுதியில் பயங்கர சூறைக்காற்று வீசுவதால் சீற்றம் அதிகமாகி அலைகள் கரையைவந்து முட்டி மோதுகிறது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையுள்ள 42 மீனவ கிராமங்களிலும் இந்த சீற்றத்தை காணமுடிந்தது.

    நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை, தூத்தூர் பகுதியில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    இதேபோல மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை, இறையுமன்துறை, தூத்தூர், ராஜாக்கமங்கலம் துறை, கோவளம், அழிக்கால் போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படுகிறது.

    குளச்சல், முட்டம் பகுதிகளில் ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்கின்றன. பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசிக்கும் மணல் திட்டுகள் வரை இந்த அலைகள் வந்து செல்வதால் அதை பார்ப்பதற்கு அச்சம் ஏற்படும் வகையில் உள்ளது.

    சுற்றுலா பயணிகள் இங்குள்ள கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா போலீசாரும் கடற்கரைகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று 3-வது நாளாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #tamilnews
    பட்டினப்பாக்கத்தில் கடல்சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் சுமார் 25 வீடுகள் இடிந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    மீனவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2 வாரங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வீடுகள் இடிந்து வருகிறது.

    கடல் சீற்றம் தொடர்வதால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை காவு வாங்கியுள்ளது.

    காலை மற்றும் இரவு நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் வசிப்பவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக மீனவர் ஒருவர் கூறும்போது, கடல் சீற்றத்தால் ஆண்டுதோறும் வீடுகளை இழந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என்றும் கூறினார்.

    எனவே பட்டினப்பாக்கம் பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×