என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pamban"
- பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.
இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம்:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கஜா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.
கஜா புயல் கரையை கடந்த பிறகு கடல் கொந்தளிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் உள்மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றதுடன் காணப்படுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கடலுக்கு செல்ல இருந்த பாம்பன் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திடீரென தடை விதிக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச் சோடி காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெரும்பாலான இடங்களில் தொடர் மழை பெய்தது.காற்றுடன் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலையில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார். #Rameswaramfishermen #Fishermen
ராமேசுவரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களை மீன்பிடித்தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைகிறது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் நாளை காலையில் 90 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.
அது போல சுழற்சி முறையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லும் நிலை இருப்பதால் இந்தப்பகுதி மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலையில் 720-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்ல தயாராக உள்ளனர்.
மேலும் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக அனுமதி சீட்டு வழங்கியவுடன், அதை பெற்றுக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து சுழற்சி முறை மீன்பிடிப்பால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முதல் நாள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாள்கள் மீன்பிடிக்க சென்று வருவார்கள்.அதன் பேரில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மீன் பிடிக்க செல்வார்கள். வெள்ளிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள்.
அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய்,வெள்ளி ஆகிய நாட்களில் மீன்பிடிக்க செல்வார்கள். இவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள். இந்நிலையில் 61 நாள்கள் மீன்பிடித்தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைவதால் பாம்பன் பகுதி மீனவர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர். ராமேசுவரம் மீனவர்கள் 62 நாள்கள் கழித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்