என் மலர்
நீங்கள் தேடியது "Pamban fishermen"
- இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி டேவிட் என்பவரின் படகில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21-ந் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பனில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாம்பன் துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் 100-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பாம்பனில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
- அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
- தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக மீனவர் சங்க செயலாளர் சேசுராஜா தலைமையில் கடந்த 30-ந் தேதி நடந்த கூட்டத்தில் 3-ந் தேதி போராட்டத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை.

இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படா விட்டால் 8-ந் தேதி உண்ணாவிரதம் இருப்பது என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Fishermenstrike #Fishermen






