என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை நீதிமன்றம்"
- இலங்கையின் ஜனாதிபதியாக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே.
- அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
இலங்கை அதிபராக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே. ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர்.
இவர் அதிபராக இருந்த போது அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
- மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
- இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடித்து சென்றனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்கள் நீதிபதி உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 7 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் (இலங்கை மதிப்பு) அபராதத்துடன் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த ஆண்டு எல்லைதாண்டி வந்ததாக கூறி கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களின் கைரேகை ஒத்துப்போகவில்லை எனக்கூறி மீனவர்கள் காவலை நீட்டிப்பு செய்து வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- தமிழக விசை படகை, அரசுடமையாக்கி இலங்கை நீதிபதி உத்தரவு.
- விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்.
கொழும்பு:
நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த 17-ந் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களது படகை அரசுடமையாக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
- கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 9 பேரும் கடந்த மாதம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு அங்குள்ள இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நிபந்தனையுடன் அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது.
- 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ந்தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்லை தாண்டி வந்ததாக கூறி ராதா (44), முத்துராம லிங்கம் (51), யாக்கோபு (24), இவரது மகன்கள் பொன் ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் இதேபோல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து சகாய ராபர்ட்டுக்கு 1 வருட சிறை தண்டனையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா. இவர் அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் சர்வதேச எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்படையினர் கைது செய்ததுடன், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை, நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 10 மீனவர்களில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை. மீதமுள்ள 7 பேர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி தருவைகுளம் மீனவர்கள் 10 பேருக்கும் ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
- தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
- இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந்தேதி 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மீனவர்கள் மீன் பிடித்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் மீனவர்கள் அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர். இருந்தபோதிலும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று 16 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு வருகிற 20-ந்தேதி காவலை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 61 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏற்கனவே 2 முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
- நீதிபதி மீனவர்களின் சிறை காவலை 3-வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 2 படகுகளில் சென்ற 17 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே 2 முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 3-வது முறையாக மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி முகமது ரபீக் மீனவர்களின் சிறை காவலை 3-வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
விரைவில் விடுதலை ஆவார்கள் என்று அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
- இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர்.
- மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 26-ந்தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் 34 பேரை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 2 முறை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக 15-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 34 மீனவர்களில் 19 பேரை மட்டும் விடுதலை செய்தார். இதில் படகு உரிமையாளர்கள், 2 படகு ஓட்டுனர்கள் என 3 பேரும் இலங்கை பண மதிப்பில் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
விடுதலை செய்யப்படாத மீதமுள்ள 15 மீனவர்களின் படகு விபரங்களின் முரண்பாடு உள்ளதால் இந்த வழக்கை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
- கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார்.
- இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிச. 24-ந்தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் வழக்கு இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார். மேலும் இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் 2 மீனவர்களின் வழக்கு விசாரணையை பிப்.12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகிறது.






