என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET UG"

    • வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்து.
    • இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    தமிழக பா.ஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

    அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்!

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    • உத்தர பிரதேசத்தில் தேர்வு எழுதியதில் 1.70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • முழு மதிப்பெண் எந்த மாணவனும் பெறவில்லை.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720-க்கு 686 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வருடம் யாரும் 700 மதிப்பெண்ணை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்நத் உத்கார்ஷ் அவாதியா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

    இந்த வருடம் 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 12.36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். என்றாலும் கடந்த வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது குறைவாகும். ஆனால் கடந்த வருடம் 23.33 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். 13.15 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷாங்க் ஜோஷி, டெல்லியை சேர்ந்த மிரினால் கிஷோர் ஜா முறையே 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

    தேசிய அளவில் 5ஆவது இடத்தை பிடித்த டெல்லியை சேர்ந்த அவிகா அகர்வால், மாணவிகளில் வரிசையில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 1.70 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 1.25 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 1.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை சூர்ய நாராயணன், தேசிய அளவில் 27 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் 1.35 லட்சம் போர் தேர்வு எழுதிய நிலையில், 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏறக்குறைய 1.08 லட்சம் இடங்கள் உள்ளது. இதில் 56 ஆயிரம் இடங்களில் அரசு கல்லூரிகளிலும், 52 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன.

    பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது.
    • தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மலிந்தது கோட்டா நகரம்.

    நாடு முழுவதிலும் இருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினீயரிங் என்ற கனவுகளுடன் பிள்ளைகளும் வீட்டையும், பெற்றோராயும் பிரிந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

    ஆனால் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதற்கு தீர்வாக விடுதி அறைகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தி தற்கொலைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. ஆனால் மாணவர்கள் தற்கொலை நின்றபாடில்லை.

    இந்நிலையில் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், மாணவர் தனது குடும்பத்தினரோ அல்லது நீட் தேர்வுக்காக படித்து வந்ததோ தனது முடிவுக்கு காரணம் அல்ல என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பீகாரில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த அந்த மாணவர், சுமார் ஒரு வருடமாக இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி-க்குத் தயாராகி வருவதாகவும், லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வருவதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.

    மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மாணவனின் சகோதரி விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து அவர், அறையில் சென்று பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் சீலிங் காற்றாடியின் மேல் உள்ள கம்பியில் தூக்கிட்டுள்ளார்.

    தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

    மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கோட்டாவில் பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்ட 11வது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது. 

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • நாடு முழுக்க 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
    • கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுக்க நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுக்க 24 லட்சம் பேர் எழுதினர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின.

    இதனிடையே நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதோடு ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

    இந்த வரிசையில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான பிரச்சினை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டு இருப்பதோடு, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என இது தொடர்பான அனைத்து பிர்ச்சினைகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ. துவங்கியுள்ளது.

    முன்னதாக போட்டி தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மேலும், மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 8-ந்தேதி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில்தான் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் மத்திய தேர்வு முகை மற்றம் மத்திய அரசு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்த மறுப்பு தெரிவித்து விட்டது.

    உச்சநீதிமன்றம் தீர்வை ரத்து செய வேண்டும். மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்மட்ட தேர்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மனுக்களை ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

    மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "நீதிமன்றம், NEET-UG-ஐ மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய அரகு மற்றும் NTA) உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயமற்றதாகவும் கடுமையானதாகவும் மட்டுமல்ல, மீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மீறப்பட்டதாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
    • பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வின்போது வினாக்கள் வெளியானதாக குற்றச்சாட்டு.
    • கருணை மதிப்பெண் வழங்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் புகார் கூறினார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டின. மேலும் சுமார் 24 லட்சம் பேர் எதிர்காலம் கேள்விக்குறியதாகிய குற்றம்சாட்டினர்.

    இதற்கிடையே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகமையின் (NTA) முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குள் அனைத்தும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு நீதிமன்றம் மனுக்களை ஏற்ற நிலையில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்குதல் செய்திருந்தது. இந்த பிரமாண பத்திரங்கள் மனுதாக்கல் செய்த அனைவருக்கும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம் வழக்கை 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்ர் ஜெனரல் துஷார் மேக்தா, மனுதாக்கல் செய்தவர்களின் வழக்கறிஞர்களுக்கு பிரமாண பத்திரத்தை வழங்கியுள்ளோம் எனக் கூறினார்.

    இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அறிக்கை தொடர்பான நிலை குறித்து தாங்கள் தகவல் பெற்றோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    • மாணவர்கள் அடையாளத்தை மறைத்து முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
    • 20-ந்தேதி மதியம் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

    எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.

    இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.

    நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபகள் தெரிவித்தனர்.

    அப்போது உத்தரவை மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
    • நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.

    இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.

    நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.

    ஆனால், தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியது.
    • தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நவ்தீப் சிங் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25 வயதான நவ்தீப் சிங் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்டி படிப்பில் பயின்று வந்தார்.

    இந்த நிலையில், பார்சி அஞ்சுமன் கெஸ்ட் ஹவுஸ்-இல் தங்கி படித்து வந்த நவ்தீப் சிங் விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார் நவ்தீப் சிங். எனினும், மருத்துவ படிப்பை முடிக்கும் முன் அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

     


    சம்பவத்தன்று நவ்தீப் சிங்கின் தந்தையும், பள்ளி முதல்வருமான கோபால் சிங் தன் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வந்துள்ளார். எனினும், மகன் அழைப்பை ஏற்காததை அடுத்து நவ்தீப் நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து நவ்தீப் அறைக்கு சென்ற அவரது நண்பர்கள், அவரின் அறை கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததை கண்டனர்.

    எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்காததை அடுத்து, நண்பர்கள் சேர்ந்து நவ்தீப் சிங்கின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற நண்பர்களுக்கு அறையில் நவ்தீப் சிங் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நவ்தீப் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
    • நீட் தேர்வு Pen-Paper முறையிலேயே நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

    கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

    இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு வழக்கம்போல் OMR முறையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் முறையில் நடத்தப்பட வாய்ப்பு என கூறப்பட்ட நிலையில் Pen -Paper முறையிலேயே நடக்கும் என்றும் குறிப்பாக ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட்-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

    • நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

    இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

    www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் நுழைவுத் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகிறது.

    ×