நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு: ஏன் தெரியுமா?

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வருகிற 8-ந்தேதி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது.
நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு: ஏன் தெரியுமா?
Published on

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் மத்திய தேர்வு முகை மற்றம் மத்திய அரசு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்த மறுப்பு தெரிவித்து விட்டது.

உச்சநீதிமன்றம் தீர்வை ரத்து செய வேண்டும். மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்மட்ட தேர்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மனுக்களை ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "நீதிமன்றம், NEET-UG-ஐ மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய அரகு மற்றும் NTA) உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயமற்றதாகவும் கடுமையானதாகவும் மட்டுமல்ல, மீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மீறப்பட்டதாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com