என் மலர்
நீங்கள் தேடியது "Coaching Center"
- 140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
பிரபல தனியார் மையம் ஒன்று நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையம் சார்பில் பெற்றோர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண வசூலும் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு மோசடி அரங்கேறி இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மையங்கள் மூடப்பட்டது தெரிய வந்து உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 6 மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது.
- தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மலிந்தது கோட்டா நகரம்.
நாடு முழுவதிலும் இருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினீயரிங் என்ற கனவுகளுடன் பிள்ளைகளும் வீட்டையும், பெற்றோராயும் பிரிந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
ஆனால் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு தீர்வாக விடுதி அறைகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தி தற்கொலைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. ஆனால் மாணவர்கள் தற்கொலை நின்றபாடில்லை.
இந்நிலையில் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், மாணவர் தனது குடும்பத்தினரோ அல்லது நீட் தேர்வுக்காக படித்து வந்ததோ தனது முடிவுக்கு காரணம் அல்ல என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த அந்த மாணவர், சுமார் ஒரு வருடமாக இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி-க்குத் தயாராகி வருவதாகவும், லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வருவதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.
மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மாணவனின் சகோதரி விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து அவர், அறையில் சென்று பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் சீலிங் காற்றாடியின் மேல் உள்ள கம்பியில் தூக்கிட்டுள்ளார்.
தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கோட்டாவில் பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்ட 11வது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
- ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இந்த தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது
மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.
- தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கோட்டாவில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்த 2 மாணவர்கள் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக கோட்டா பயிற்சி மையத்தில் பயின்று வந்த 20 வயது மாணவன் கடந்த புதன்கிழமை தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா என அடையாளம் காணப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் "என்னால் படிக்க முடியவில்லை.நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துள்ளார்
24 மணி நேரத்திற்குள் கோச்சிங் சென்டர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த அரியானவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.
கோச்சிங் சென்டர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் மாணவ மாணவிகளை மன ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- கடந்த ஆண்டில் கோட்டா பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் காதல் விவகாரங்களால் தற்கொலை செய்துகொள்வதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு பற்றி அழுத்தம் கொடுக்கக்கூடாது. எனது வார்த்தைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் தற்கொலைக்கு பயிற்சி மையங்களின் பங்கு கொஞ்சம் இருக்கலாம். சில சமயங்களில் காதல் விவகாரங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த தவறினால் மாணவர்கள் தவறான திசையில் செல்வார்கள் என்று தெரிவித்தார்.
- மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
- நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தார்.
கோச்சிங் சென்டர்கள் மண்டியிருக்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் படித்து வந்த 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் ஒரே மாதத்தில் 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டுமே 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கோட்டாவின் ராஜீவ் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஃப்ஷா ஷேக்[23 வயது], இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர். அஃப்ஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்து ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ பரீட்சைக்கு கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்து வந்த அசாமின் நாகோன் பகுதியைச் சேர்ந்த பராக் என்ற மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மஹாவீர் நகர் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இன்று மதியம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கோட்டாவிற்கு வருகிறார்கள். இங்கு காளான்கள் போல் பெருகி வரும் பயிற்சி மையங்கள் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளது - கடந்த ஆண்டு மட்டும் ரூ.3,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.






