என் மலர்
நீங்கள் தேடியது "விளம்பரம்"
- ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது.
- ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நவி மும்பையில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன்பு 2 தடவை (2005, 2017) இறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. இதனால் நாடு முழுவதும் இந்திய மகளிர் அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
1983-ம் ஆண்டு கபில் தேவ் உலக கோப்பையை வென்றது போல தற்போது ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் உலக கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மகளிர் உலக கோப்பையை வென்ற 4-வது நாடு இந்தியாவாகும். ஆஸ்திரேலியா (4 தடவை), இங்கிலாந்து (4), நியூசிலாந்து (1) வரிசையில் இந்தியாவும் இணைந்தது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரூ.39.77 கோடி பரிசு தொகையை வழங்கியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.91 கோடி கிடைத்துள்ளது.
உலக கோப்பையை வென்றதால் இந்திய மகளிர் அணியினர் ஒரே இரவில் புகழின் உச்சத்துக்கு சென்றனர். வீராங்கனைக்கான விளம்பர மதிப்பு 35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது. தென் ஆப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதால் 35 சதவீதம் வரை விளம்பர மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும். ஒரு விளம்பரத்துக்கு மந்தனா ரூ.2 கோடியும், ஹர்மன்பிரீத் ரூ.1.2 கோடியும், ஜெமிமா ரோட்ரிகஸ் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், ஷபாலி வர்மா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் பெறுகிறார்கள்.
மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி முதல் ரூ.35 கோடியாகும். ஹர்மன் பிரீத் சொத்து மதிப்பு ரூ.25 கோடியாகும்.
இந்த உலக கோப்பையில் மந்தனா 434 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மாவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் (22 விக்கெட், 215 ரன்) தேர்வு பெற்றனர்.
வீரர்களை பொறுத்தவரை விராட் கோலி ஒரு விளம்பரத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி பெறுகிறார். தெண்டுல்கர் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரையும், டோனி ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரையும், ரோகித் சர்மா ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரையும் பெறுகிறார்கள்.
- 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகிறது. தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அதிலும் 90-களில் வெளிவந்த பல விளம்பரங்கள் மக்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின.
அந்த வகையில் ஃபெவிகால் (Fevicol) பசை விளம்பரம், காட்பரி (Cadbury) மிட்டாய் விளம்பரம், ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) விளம்பரம் ஆகியவற்றை நம்மால் மறந்திருக்க முடியாது.
இந்தத் தனித்துவமான விளம்பரங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே (Piyush Pandey) இன்று (வெள்ளிக்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.
தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஓகில்வி (Ogilvy) என்ற விளம்பர நிறுவனத்தில் 1982-இல் இணைந்த பியூஷ் பாண்டே, 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார். அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், சர்வதேச கிரியேட்டிவ் தலைமைப் பதவியிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
1982-இல் சன்லைட் டிடர்ஜென்ட் பவுடருக்காக அவர் முதன்முதலில் விளம்பரம் எழுதினார். தொடர்ந்து Fevicol, Cadbury, Asian Paints, லூனா மொபெட் (Luna Moped), ஃபார்ச்சூன் ஆயில் (Fortune Oil) உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு அவர் உருவாக்கிய விளம்பர கான்செப்ட் அனைவரையும் கவர்ந்தது.
அவரது தலைமையின் கீழ் Ogilvy இந்தியாவின் நம்பர் 1 விளம்பரக் கம்பெனியாகத் திகழ்ந்தது. 2013-இல் பியூஷ் பாண்டே சினிமாவிலும் நடிகராகக் களமிறங்கினார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே (Madras Cafe) படத்தில் அவர் நடித்தார். மேலும் போபால் எக்ஸ்பிரஸ் (Bhopal Express) என்ற படத்திற்குத் திரைக்கதையும் அவர் எழுதியுள்ளார்.
அவரது பணிகளுக்காக, கடந்த 2016-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தற்போது அவரின் மறைவுக்கு வணிகம், விளம்பரம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் தகனம் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் 'X' பதிவில், "பியூஷ் பாண்டேவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவானாக இருந்த அவர், பேச்சுவழக்குச் சொற்கள், மண் சார்ந்த நகைச்சுவை மற்றும் உண்மையான அரவணைப்பைக் கொண்டு வந்து தகவல்தொடர்பு முறையையே மாற்றினார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள். அவரது மரபு தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார்.
- இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.
இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான தொடரும் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
- அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா தான் இந்த விளம்பர வீடியோவை இயக்கியுள்ளார் .
மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான தொடரும் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா தான் இந்த விளம்பர வீடியோவை இயக்கியுள்ளார் .
விளம்பர வீடியோவில், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் மோகன்லாலை பிரகாஷ் வர்மா அழைத்துச் சென்று மாடல் அழகியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது மாடல் அழகி அணிந்திருக்கும் வைர நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லட் மீது மோகன்லாலுக்கு ஆசை ஏற்படுகிறது.
மாடல் அழகி நகைகளை கழற்றி வைத்த பிறகு மோகன்லால் அவற்றை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னை தானே மெய் மறந்து ரசிப்பது போன்றும் காட்சி அமைந்துள்ளது.
இந்த விளம்பர வீடியோவில் பெண்மை தன்மையுடன் கூடிய மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இதுவரை அமேசான் பிரைமில் சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம்.
- AD-FREE ஆக வீடியோக்களைக் காண கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 சந்தா செலுத்த வேண்டும்
அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் ஓடிடிதளத்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஜூன் 17ம் தேதி முதல், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் வரும் என புதிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுவரை மாத சந்தா அல்லது வருட சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம். ஆனால் தற்போது AD-FREE ஆக வீடியோக்களைக் காண தற்போதைய சந்தாவுடன் சேர்த்து கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 அல்லது மாதம் ரூ. 129 செலுத்த வேண்டும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் அமேசான் பிரைம் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.
நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.
2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.
அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
- கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.
இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஏ.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நடைபெற்றது.

விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி
இதில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், மயில்சாமியின் மகன் அன்பு, படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.

விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி
மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம்.

விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி
விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்" என்று கூறினார்.
- குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பேட்டி
- பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்ட மைப்பு நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. பின்னர் குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பாஸ்கரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் இல்லை என்ற கவர்ச்சிகரமான போலி யான விளம்பரத்தை அறிவித்து மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட நிறுவனத்தை கூட்டமைப்பின் சார்பாக பலமுறை கண்டித்தும் மிகபெரிய அளவில் பொது மக்களை ஏமாற்றி உள்ளனர்.
மேலும், செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் எந்த ஒரு நகையும் செய்ய இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இது போன்ற போலி விளம்பரங்களால் பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களின் தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
எனவே நியாயமற்ற போலி விளம்பரங்களை உடனடியாக தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி போலியான விளம் பரங்களை தடுத்திட வழிவகை செய்து பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு பாதுகாத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். மேலும் பொதுமக்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்குமாறும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் மாணிக்கம், செய லாளர் முத்துகுமார், பொருளா ளர் நாகேஷ், வழக்கறிஞர் பால முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
- எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், மக்களை ஏமாற்றி, திசைதிருப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் கோடி கணக்கில் செலவு செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி முன்னதாக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் (2014- 2024) மோடி அரசு தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.2,974 கோடி செலவிட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சியை தவிர, எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.
இதற்கிடையே, பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர் விளம்பரம், ரெயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு பாஜக அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை.
- விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
- இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நேற்று (மே 13) வீசிய பலத்த காற்றால் ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 74 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெட்ரோல் நிலையம் அருகே சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒதுங்கியிருந்தன. அந்த சமயத்தில் அருகில் நிறுவப்பட்டிருந்த ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் 250 டன் எடை கொண்ட விளம்பரப் பலகை விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஈகோ நிறுவனத்தின் இயக்குனர் பாவேஷ் தலைமறைவாகி உள்ளார். இந்தநிலையில், அந்த விளம்பரப் பலகையை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்றே குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக ஒரு வருட காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அரசின் அலட்சியத்தாலேயே 14 உயிர்கள் பலியாகி உள்ளதாக பலரும் கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






