என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered"

    • நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.
    • திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது.

    புதுச்சேரியில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.

    அப்போது, எஸ்ஐஆர் குறித்து பேசிய சீமான்," மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் கொண்டு வரும் போது மம்தா பானர்ஜி அதை எதிர்த்து மக்களை திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு எஸ்ஐஆர் செயல்படுத்த போகிறோம் என்று தெரிவித்த உடன் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது" என்றார்.

    இதற்கு பத்திரிகையாளர் ஒருவர் எஸ்ஐஆரை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளதே என்று கூறினார்.

    இதற்கு உனடியாக ஆதங்கப்பட்ட சீமான் உனக்கு என்ன பிரச்சனை? உன்னை ரொம்ப நாளா பார்த்துக் கொண்டிருக்கிறேன், உனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துள்ளது. என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினார்.

    இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாத இறுதி வரை மாநிலத்தில் 979 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது.
    • அதே நேரத்தில் 390 போக்சோ மற்றும் பிற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாத இறுதி வரையிலான முக்கிய குற்ற வழக்குகளின் புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளது. இதில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாத இறுதி வரை மாநிலத்தில் 979 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளளது.

    அதே நேரத்தில் 390 போக்சோ மற்றும் பிற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூரு நகரில் 114 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். போக்சோ வழக்குகளில் பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் விஜயநகர் மாவட்டத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

    அதே போல் கடந்த 4 மாதங்களில் 1126 கலவரங்கள் நடந்துள்ளன. இதில் 426 கொலை வழக்குகள், 1165 கொலை முயற்சி, 317 பாலியல் வன்கொடுமைகள் (போக்சோவை தவிர) 47 திருட்டுகள், 192 கொள்ளைகள்,339 பகல்நேர திருட்டுகள், 1233 இரவு திருட்டுகள், 207 ஏமாற்றுதல், 5612 தாக்குதல்கள், 1940 துன்புறுத்தல்கள், 5236 சூதாட்டம் மற்றும் 4846 சைபர் மோசடிகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    • சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

    நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

    நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

    2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
    • மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றார் . அதன்பின்னர் நேற்று இரவு லதா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த14 பவுன் நகை திருடு போனதால் லதா அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் மர்ம நபர்கள் எப்படி வீட்டுக்குள் வந்தார்கள் என பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5.50 லட்சமாகும். தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
    • முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையிலிருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கனரக லாரி ஒன்று மாலை புறப்பட்டது. தென்காசி மாவட்டம் நன்னகரம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று நளளிரவு உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் நாராயணமூர்த்தி உடல் நசுங்கி உயிரழந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த எடக்கல் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தை உடனடியாக வரவழைத்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறந்து ஒரு மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் விபத்து நடந்து, லாரி டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார்.
    • தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப் பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது62) விவ சாயி. இவர் தனது விவசாய நிலம் அருகில் உள்ள ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் அவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்குள் இறங்கி கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர்
    • வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை நல்லாம்பட்டி ரைஸ் மில் புதூரை சேர்ந்தவர் மெய்ஞான–மூர்த்தி (21). கூலித் தொழிலாளி. இவர் ராசாம்பாளை யத்தில் ஒரு டையிங் மில்லில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று மாலை மில்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்தது. மெய்ஞானமூர்த்தி, ஈரோடு மாணிக்கம் பாளையம், சக்தி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்(26) ஆகியோர் குழிக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மெய்ஞானமூர்த்தி பரிதாப மாக இறந்தார். சதீஷ்க்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சன்னியாசி பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 35) மனைவி சத்தியவாணி (24) சம்பவத்தன்று முருகன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன் கரண்டியால் தனது மனைவி சத்தியவாணியை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் சத்தியவாணி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மனைவி சத்தியவாணி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது
    • திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை..

    கடலூா:

    சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த, பிரபலமான சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது. இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்             இக்கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக சோமன் மண்டபத்தில் உள்ள ரிஷி கோபுரத்தில் சிறிய அளவிலாக சிலைகள் அதிகளவில் உள்ளன.

    இந்நிலையில் ரிஷி கோபுரத்தில் இருந்த திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை. இது தொடர்பாக இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பழனியப்பன் சிதம்பரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்க்டபெர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் தோட்டப்பாடி கிராமம் சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் சோதனை மேற்கொண்ட போது குழந்தைசாமி என்பவருடைய மகன் விஜயன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சின்னசேலம் குமரன் நகர் பிச்சப்பிள்ளை என்பவருடைய மகன் பெரியசாமி (வயது 50) என்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த 10 லிட்டர் தென்னை மரத்துக் கள்ளினைபறிமுதல் செய்தனர்.

    ×