என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் கனரக லாரி தலைக்குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி
- உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
- இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சென்னையிலிருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கனரக லாரி ஒன்று மாலை புறப்பட்டது. தென்காசி மாவட்டம் நன்னகரம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று நளளிரவு உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் நாராயணமூர்த்தி உடல் நசுங்கி உயிரழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த எடக்கல் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தை உடனடியாக வரவழைத்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறந்து ஒரு மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் விபத்து நடந்து, லாரி டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்