என் மலர்
நீங்கள் தேடியது "farmer suicide"
- போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.
மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
- திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பழனி அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளனர். பழனி அவருடைய மனைவி மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழனிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
- உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அணைப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர்.
அவரை விட்டு பிரிந்து ராசம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாகை திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி.
- வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45) விவசாயி.
இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கலியமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
- விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
- விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் திருநாவலூர் அருகே கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திரும ணம் ஆகி மனைவி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
இதனை அடுத்து நேற்று கிழக்கு மருதூர் அருகே சிவா பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா கரன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சிவ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருநாவலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரவநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 64). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இது குறித்து சுப்பிரமணியின் மகன் நாகராஜ் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற–னர்.
- விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள வழிசோதனை பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). விவசாயி. இவர் கடந்த 24-ந் தேதி மதியம் வாகன விபத்தில் காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் சங்கரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உள்ள வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் மனைவி மஞ்சுளா இருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் சங்கர் திடீரென எழுந்து கழிவறைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறினார். உடனே மஞ்சுளா இப்போது செல்லவேண்டாம். டாக்டர் வந்தபின்பு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த சங்கர் அவரது மனைவியை தள்ளிவிட்டு திடீரென கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். பின்னர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மஞ்சுளா கூச்சல்போட்டார். உடனே வார்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சங்கர் லுங்கியால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிபோதையில் வந்த கணவனை மனைவி திட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வசனாங்குப்பம் சேர்ந்தவர் வீராசாமி (வயது 58).விவசாயி. சம்பவத்ன்று குடித்துவிட்டு வீராசாமி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவரது மனைவி சுமதி குடிபோதையில் வந்த கணவர் வீராசாமியை திடீரென்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீராசாமி விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம்.
- அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 40) விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று அதே பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை அருள் செல்வம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் செல்வம் தனது வீட்டின் முன்னாள் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவி சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அருள் செல்வம் மனைவி மஞ்சமாதா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.