என் மலர்
நீங்கள் தேடியது "farmer suicide"
- கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினார்.
கர்நாடகாவில் கடந்த 16 மாதங்களில் மட்டும் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 825 பேர் பயிர் விளைச்சல் தொடர்பான காரணங்களாலும், 138 பேர் பிற காரணங்களாலும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்ட 807 விவசாயிகளின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு ஏற்கனவே இழப்பீடு வழங்கியுள்ளது. இன்னும் 18 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இங்கு மட்டும் 128 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக, மைசூரில் 73, தார்வாட் மாவட்டத்தில் 72 மற்றும் பெலகாவியில் 71 பேர் இதே காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
"காங்கிரஸ் அரசின் புறக்கணிப்பு விவசாயிகளிடையே பீதியை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.
ஆனால் பாஜகவின் கூற்றுகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், விவசாய பயிர்கள் அழிவதும், பூச்சிக்கொல்லிகள் பற்றாக்குறையும்தான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
- மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை கேட்பார்களா?
மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் மாணிக்ராவ் கோக்டே.
எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவார் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் மராத்தியில், "ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பாஜகவை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், எண்ணற்ற விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளபோதும், மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், வேளாண் அமைச்சருக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை இந்த தவறான அமைச்சர்களும், அரசாங்கமும் எப்போதாவது கேட்பார்களா. ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள், மாகாராஜாவே" என்று தெரிவித்தார்
- 2024 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
- குறைந்த மகசூல், கடன் மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தற்கொலைகள் மகாராஷ்டிராவின் விதர்பாவில் நடந்துள்ளன.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளிவிவரங்கள் குறித்த கேள்விக்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் மகரந்த் பாட்டீல் அளித்த பதில் மூலம் இந்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.
இந்த தற்கொலை வழக்குகளில், 373 குடும்பங்கள் நிதி இழப்பீடு பெற தகுதியுடையவை. ஆனால் அரசாங்கம் அவர்களில் 200 குடும்பங்களை தகுதியற்றவர்கள் என்று அறிவித்தது. 194 வழக்குகளில் விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.
தகுதியுள்ள 327 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகளில் இழப்பீடு வழங்குவதை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து கோட்ட ஆணையர்களும் விரைவில் நிலுவைத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரினர்.
முன்னதாக 2024 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், இது 2023 இல் 2,851 ஆக இருந்தது.
2001 முதல் மகாராஷ்டிராவில் 39,825 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. விவசாயிகளின் தற்கொலைகளில், 22,193 பேர் மாநிலத்தின் விவசாய நெருக்கடியுடன் தொடர்புடையவர்கள். குறைந்த மகசூல், கடன் மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விதர்பாவைத் தவிர, யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
- நாகை திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி.
- வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45) விவசாயி.
இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கலியமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
- உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அணைப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர்.
அவரை விட்டு பிரிந்து ராசம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பழனி அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளனர். பழனி அவருடைய மனைவி மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழனிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
- திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.
மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
- கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் அருகே உள்ள ஆர்.பி புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55) விவசாயி. இவர் தற்போது தனது மனைவி பொன்னி மற்றும் மகள்கள் நித்தியபிர சாதனி (13), ஆனந்தபிர சாதனி (10) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பா ளையத்தை சேர்ந்த செல்வ ராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மகளுக்கு விடு முறை என்பதால் பொன்னி தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டினத்திற்கு சென்றிருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் மனைவிக்கு போன் செய்து விவசாய நிலத்தில் வேலை இருப்பதால் உடனே புறப்பட்டு ஊருக்கு வரு மாறு கூறியுள்ளார். அப்போது மனைவி பொன்னி சில தினங்களுக்கு பிறகு வருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாதேஸ்வரன் அவரது குடிசை வீட்டிற்கு வெளியே நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடி யாக ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு மாதேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வேலக வுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார்
- குடும்ப தகராறில் விபரீதம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35). இவர் விவசாயம் செய்து வந்தார்.
இவரது மனைவி காயத்ரி. நேற்று காலையில் அன்பரசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் காயத்ரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து அவளூர் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி.
- மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
நெல்லை:
அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. இவர் நெஞ்சு வலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து மாரியப்பன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






