search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer suicide"

    • செந்தில் மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
    • செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவசாயியான செந்தில் இசலி பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான சில ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பயிர்களின் நீர் பாசனத்திற்காக தனது நிலத்தில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்து மோட்டார் பம்பு செட்டும் அமைத்திருந்தார். இதனால் அவர் கடுமையான கடன் சுமைக்கு ஆளானார். அடிக்கடி மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காகவும் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.

    விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது தனக்கு சொந்தமான வயலில் பயிர்களுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய செந்தில் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் செந்திலிடம் கேட்டபோது தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக செந்திலை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மீண்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமையால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இசலி, சுற்று பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார்.
    • தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மந்தினி மண்டலம், வெள்ளிப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (30). தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசோக் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் 5 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்.

    குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார். தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.

    விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற அசோக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.

    பயிரிட முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் அசோக் கடனில் தவித்து வந்தார்.

    தெலுங்கானா அரசும் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனால் அசோக் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கினார்.

    கந்து வட்டிக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் அசோக் அவரது மனைவி சங்கீதா இருவரும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 2 குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.

    • கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மொடப்பள்ளி தோட்டத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர்.

    கிருஷ்ணகுமார் உட ல்நிலை பாதிக்கப்பட்டு மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று உடல் வலி தாங்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதையடுத்து தேன்மொழி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜீவபாரதி (22) அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி.
    • மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. இவர் நெஞ்சு வலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து மாரியப்பன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார்
    • குடும்ப தகராறில் விபரீதம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35). இவர் விவசாயம் செய்து வந்தார்.

    இவரது மனைவி காயத்ரி. நேற்று காலையில் அன்பரசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் காயத்ரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து அவளூர் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
    • கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள ஆர்.பி புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55) விவசாயி. இவர் தற்போது தனது மனைவி பொன்னி மற்றும் மகள்கள் நித்தியபிர சாதனி (13), ஆனந்தபிர சாதனி (10) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பா ளையத்தை சேர்ந்த செல்வ ராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மகளுக்கு விடு முறை என்பதால் பொன்னி தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டினத்திற்கு சென்றிருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் மனைவிக்கு போன் செய்து விவசாய நிலத்தில் வேலை இருப்பதால் உடனே புறப்பட்டு ஊருக்கு வரு மாறு கூறியுள்ளார். அப்போது மனைவி பொன்னி சில தினங்களுக்கு பிறகு வருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாதேஸ்வரன் அவரது குடிசை வீட்டிற்கு வெளியே நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

    பின்னர் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடி யாக ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு மாதேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வேலக வுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.

    மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பழனி அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளனர். பழனி அவருடைய மனைவி மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழனிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அணைப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர்.

    அவரை விட்டு பிரிந்து ராசம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாகை திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி.
    • வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45) விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கலியமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளார்.

    அப்போது அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    ×