search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையத்தில் விவசாயி தற்கொலை
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையத்தில் விவசாயி தற்கொலை

    • சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அணைப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர்.

    அவரை விட்டு பிரிந்து ராசம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று க.புதுப்பட்டி கோசேந்திர ஓடை பகுதியில் அரளிவிதைகளை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×