என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் தற்கொலை"
- கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினார்.
கர்நாடகாவில் கடந்த 16 மாதங்களில் மட்டும் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 825 பேர் பயிர் விளைச்சல் தொடர்பான காரணங்களாலும், 138 பேர் பிற காரணங்களாலும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்ட 807 விவசாயிகளின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு ஏற்கனவே இழப்பீடு வழங்கியுள்ளது. இன்னும் 18 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இங்கு மட்டும் 128 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக, மைசூரில் 73, தார்வாட் மாவட்டத்தில் 72 மற்றும் பெலகாவியில் 71 பேர் இதே காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
"காங்கிரஸ் அரசின் புறக்கணிப்பு விவசாயிகளிடையே பீதியை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.
ஆனால் பாஜகவின் கூற்றுகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், விவசாய பயிர்கள் அழிவதும், பூச்சிக்கொல்லிகள் பற்றாக்குறையும்தான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
- மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை கேட்பார்களா?
மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் மாணிக்ராவ் கோக்டே.
எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவார் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் மராத்தியில், "ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பாஜகவை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், எண்ணற்ற விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளபோதும், மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், வேளாண் அமைச்சருக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை இந்த தவறான அமைச்சர்களும், அரசாங்கமும் எப்போதாவது கேட்பார்களா. ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள், மாகாராஜாவே" என்று தெரிவித்தார்
- நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
- தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
புதுடெல்லி:
நாட்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளின் புள்ளி விவர பட்டியலும் இணைக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆயிரத்து 552 பேர் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் 6 ஆயிரத்து 95 பேர் தற்கொலை செய்துள்ளனர். தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 171 பேர் உயிரை மாய்த்துள்ளனர்.
இந்த தற்கொலைகளுக்கான தனிப்பட்ட காரணங்கள் எதுவும் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை அறிக்கையில் கூறப்படவில்லை எனவும் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
- கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
இந்த பேச்சை சுட்டிக் காட்டி தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா?
தெலுங்கானாவில் கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தென்மேற்கு பருவமழை 20.7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது
- வழக்கமாக சராசரியாக 57.4 சதவீத மழை பெய்ய வேண்டும்
மகாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் இந்த வருடம் இதுவரை 685 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பீட் மாவட்டத்தில் மட்டும் 185 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மாவட்டம் மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை மந்திரியாக இருக்கும் தனஞ்செய் முண்டே மாவட்டமாகும்.
மத்திய மகாராஷ்டிராவின் வறண்ட மண்டலமான மரத்வாடாவில் அவுரங்காபாத், ஜல்னா, பீட், பர்பானி, நன்டெட், ஓஸ்மனாபாத், ஹிங்கோலி, லதுர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் 294 பேர் பருவமழை மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
மரத்வாடா மண்டலத்தில் தற்போது 20.7 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. செப்டம்பர் 11-ந்தேதி வரை 45.54 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 57.4 சதவீத மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போது குறைவாக பெய்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் முண்டே, கடந்த ஜூலை மாதம் ஏக்நாத் தலைமையிலான மந்திரிசபையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஸ்மானாபாத்தில் 113 விவசாயிகள், நன்டெட்டில் 110 விவசாயிகள், அவுரங்காபாத்தில் 95 விவசாயிகள், பர்பானியில் 58 விவசாயிகள், லுதுர் மாவட்டத்தில் 51 விவசாயிகள், ஜல்னாவில் 50 விவசாயிகள், ஹிங்கோலியில் 22 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
- கடந்த ஓராண்டில் மாநிலத்தில் பதிவான மொத்த தற்கொலைகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் குத்தகை விவசாயிகள்.
- பல சலுகைகளை மறுத்துள்ளது விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரிது ஸ்வராஜ்ய வேதிகா என்ற அமைப்பு விவசாயிகள் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் 223 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளது.
அதிர்ச்சியளிக்கும் வகையில், வேதிகா வெளியிட்ட பட்டியலின்படி, கடந்த 12 மாதங்களில் சித்திப்பேட்டை மாவட்டத்தில் 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறையை உயர்த்துவோம் என்று பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
பயிர்க் காப்பீட்டை மறுத்ததோடு, குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் அரசு தவறிவிட்டது.
கடந்த ஓராண்டில் மாநிலத்தில் பதிவான மொத்த தற்கொலைகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் குத்தகை விவசாயிகள்.
100 சதவீத விவசாயிகளின் கடன் தள்ளுபடியை அமல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது. மேலும் பல சலுகைகளை மறுத்துள்ளது விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
- 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
- அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 58 மாதங்களில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்தது ஓரளவிற்கு உண்மைதான் என நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ்-பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் என்.சி.பி. எம்.எல்.சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அமராவதி டிவிசனில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த வருடம் மரத்வாடா டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும், அமராவதி டிவிசனில் 1,069 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 707 பேர் உதவி பெற தகுதியுடையவர்கள், 433 பேர் உதவி பெற்றவர்கள்.
பீட் பகுதியில் 167 பேர் உதவி பெற தகுதியானர்கள். 108 பேர் உதவி பெற்றவர்கள்.
அமராவதி டிவிசனில் 441 பேர் உதவி பெற தகுதியானவர்கள். 332 உதவிகள் பெற்றவர்கள்.
ஜால்னா மாவட்டத்தில் மந்தா தாலுகாவில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை 13 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ளது என அமை்சசர் தெரிவித்துள்ளார்.






