search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers suicide"

    6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்ததே குமாரசாமியின் சாதனை என்றும், விவசாயிகளின் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #Kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா  ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகிறது. இதில் அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த 6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டதே அவரது முக்கிய சாதனை ஆகும்.

    இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?. இன்று (அதாவதுநேற்று) கூட மண்டியா மற்றும் கலபுரகியில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு முதல்-மந்திரி குமாரசாமியே காரணம் ஆகும்.

    தனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது ஆகும் என்று குமாரசாமியே ஏற்கனவே கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா?.

    குமாரசாமி தனது 6 மாத ஆட்சி காலத்தில் பாதி நாட்களை கோவிலுக்கு சென்றும், மீதமுள்ள நாட்களை சொகுசு ஓட்டலிலும் கழித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தான் அவர் செய்த சாதனை. ஆட்சி அதிகாரம், அவரது தலைக்கு ஏறிவிட்டது. அதனால் அவர் அடிக்கடி ஆணவ போக்குடன் பேசுகிறார்.



    பிரச்சினைகள் வரும்போது, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று குமாரசாமி பேசுகிறார். இது மக்களையும், ஜனநாயகத்தையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.

    குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார். ஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

    செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசுகிறார். இதன் மூலம் அவர் பெண் இனத்தை அவமதித்துவிட்டார்.

    இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa #Kumaraswamy
    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முகுஸ்வாஸ்னிக் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடமையை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும், பொறுப்பில் உள்ளவரே இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக உயர் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய மத்திய நிதியை குறைத்துள்ளது.


    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தற்போது வேளாண்மையில் இறக்குமதி அதிகமாகி, ஏற்றுமதி குறைந்துள்ளது. ஒரு சில மத்திய மந்திரிகளின் சர்ச்சை பேச்சுகளால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் பீகாரில் மத்திய மந்திரியின் பேச்சுக்கு, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியே கண்டனம் தெரிவித்துள்ளர்.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவரோ, பிரதமரோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #BJP  #FarmersSuicide
    ×