என் மலர்
நீங்கள் தேடியது "farmers suicide"
- 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
- அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 58 மாதங்களில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்தது ஓரளவிற்கு உண்மைதான் என நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ்-பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் என்.சி.பி. எம்.எல்.சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அமராவதி டிவிசனில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த வருடம் மரத்வாடா டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும், அமராவதி டிவிசனில் 1,069 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 707 பேர் உதவி பெற தகுதியுடையவர்கள், 433 பேர் உதவி பெற்றவர்கள்.
பீட் பகுதியில் 167 பேர் உதவி பெற தகுதியானர்கள். 108 பேர் உதவி பெற்றவர்கள்.
அமராவதி டிவிசனில் 441 பேர் உதவி பெற தகுதியானவர்கள். 332 உதவிகள் பெற்றவர்கள்.
ஜால்னா மாவட்டத்தில் மந்தா தாலுகாவில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை 13 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ளது என அமை்சசர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகிறது. இதில் அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த 6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டதே அவரது முக்கிய சாதனை ஆகும்.
இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?. இன்று (அதாவதுநேற்று) கூட மண்டியா மற்றும் கலபுரகியில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு முதல்-மந்திரி குமாரசாமியே காரணம் ஆகும்.
தனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது ஆகும் என்று குமாரசாமியே ஏற்கனவே கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா?.

பிரச்சினைகள் வரும்போது, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று குமாரசாமி பேசுகிறார். இது மக்களையும், ஜனநாயகத்தையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.
குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார். ஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசுகிறார். இதன் மூலம் அவர் பெண் இனத்தை அவமதித்துவிட்டார்.
இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa #Kumaraswamy
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடமையை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும், பொறுப்பில் உள்ளவரே இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் பீகாரில் மத்திய மந்திரியின் பேச்சுக்கு, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியே கண்டனம் தெரிவித்துள்ளர்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவரோ, பிரதமரோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #BJP #FarmersSuicide






