search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீநிவாச சாகர் அணையில் ஏற முயன்ற போது தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூரில் ஸ்ரீநிவாச சாகர் அணை உள்ளது. இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. 

    கோடைகாலம்  என்பதால் ஸ்ரீநிவாச சாகர் அணையில் குளிப்பதற்காக மக்களின் அதிகமாக குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், 20 வயதான வாலிபர் ஒருவர் அணையின் சுவர் மீது ஏறி சாகசத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை அங்குள்ள பலரும் வீடியோ எடுத்துள்ளனர். 

    அணையில் 25 அடி உயரம் வரை ஏறிய வாலிபர் அதற்கு மேல் ஏற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் வலைபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    காயமடைந்த வாலிபர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையும் மீறி  அணையின் சுவரில் ஏற முயன்றதால் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அஹமது கான், தலித் தலைவருக்கு இனிப்பை ஊட்டிவிட்டு, அவர் வாயில் இருந்து இனிப்பை எடுத்து உண்பது போன்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். இவர் அம்பேத்கர்  ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். 

    அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை ஊட்டி விட்டார். பதிலுக்கு தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி ஜமீர் அஹமது கான் சாப்பிட்டார். 

    இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாக கூறிய அவர், சிலர் பயங்கரவாதத்தை வைத்து சமுதாயத்தினருக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார்.


    ×