என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் பவார்"

    • அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
    • திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

    அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.

    இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.

    திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

    • அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்தார்.
    • கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்?

    மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.

    நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.

    இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.

     உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் ராவத் கூறுகையில், "பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.

    மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், "அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  

    • மேல்சபை எம்.பி.யாக சுனேத்ரா பவார் உள்ளார்.
    • அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.

    மராட்டிய மாநில துணை முதல்வராக இருந்த வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜ.க-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுக் கொண்டார்.

    மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெறுகிறார்.

    62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார்.

    இதை தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார்.

    சுனேத்ரா பவார் துணை முதல்வராக நீடிக்கவேண்டும் என்றால் தற்போது அவர் வகித்து வரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித் பவரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும். அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார். 

    • தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த அஜித் பவார் விமான விபத்தில் காலமானார்.
    • அவரது கட்சியை வழி நடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார் நேற்று முன்தினம் விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது மனைவி அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, பிளவுப்படுத்தி பின்னர் அதை தனதாக்கிக் கொண்டவர் அஜித் பவார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு சரத் பவார் கட்சியையும், தனது கட்சியையும் ஒன்றிணைக்க அஜித் பவார் முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்த அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவ சேனா (UBT) கட்சி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் தலைமைத்துவம் குறித்து பேசுவது மனிதாபிமானமற்ற செயல். இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்கள் மனிதாபிமானற்றவர்கள். அது எம்.எல்.ஏ.-வாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் சரி. அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தனது கணவரை இழந்துள்ளார். அவரது கண்கள் இன்னும் கலங்கி கொண்டிருக்கின்றன.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    சுனேத்ரா பாராமதி தொகுதியில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அஜித் பவார் பாராமதி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
    • சுமித் கபூரின் கையில் இருந்த பிரேஸ்லெட் மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    பாராமதிக்கு அவர் சென்றுகொண்டிருந்த 'லியர் ஜெட் 45' விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதை அருகே விழுந்து வெடித்துச் சிதறியது.

    இதில் அஜித் பவார், அவரின் பாதுகாவலர், விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி மற்றும் துணை பெண் விமானி, பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்த விமானி சுமித் கபூரின் மரணம் குறித்த ஒரு சோகமான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    உண்மையில், விபத்துக்குள்ளான அந்த 'லியர் ஜெட் 45' விமானத்தை அன்று கேப்டன் சுமித் கபூர் ஓட்ட வேண்டியதே கிடையாது.

    அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.

    விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியும் அந்த விமானி வராததால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சுமித் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    ஹாங்காங்கில் இருந்து சில நாட்களுக்கு முன்பே இந்தியா திரும்பியிருந்த அவர், நிறுவனத்தின் உத்தரவை ஏற்று அஜித் பவாரை பாராமதிக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார்.

    விபத்து நடந்த இடத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து போயிருந்தன. சுமித் கபூரின் கையில் இருந்த பிரேஸ்லெட் மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

    வானிலை மோசமாக இருந்ததால் விமானியின் கணிப்பு தவறாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டாலும், சுமித்தின் நண்பர்கள் அதை மறுக்கின்றனர்.

    அவருக்குப் பல ஆயிரம் மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருப்பதால், அவர் தவறு செய்ய வாய்ப்பில்லை என்றும், ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    சுமித் கபூரின் மகன் மற்றும் மருமகனும் விமானிகளாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
    • அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

    அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    • தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இந்நிலையில் விமானம் கீழே விழுந்துவெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

    சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

    • அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
    • மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

    அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.

    இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.

    • மகாராஷ்டிரா அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
    • அரசு முழு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5  பேர் உயிரிழந்தனர்.

    அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    • விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
    • அஜித் பவார் மரணத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

    இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த 3 பேரும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களிடைம் பேசிய மம்தா பானர்ஜி, "பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன? அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்"

    • மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
    • அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரி அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான அஜித் பவார், ஒரு துயரமான விபத்தில் காலமானார். இது மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

    பரந்த நிர்வாக அனுபவம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கு பெயர் பெற்ற அஜித் பவாரின் அகால மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது.

    அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார். 

    • விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
    • பொது வாழ்வில் பவாரின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட வேண்டும்.

    மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

    இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அஜித் பவார் மரணத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று காலை பாராமதியில் நடந்த விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும், இந்த இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். பொது வாழ்வில் பவாரின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மன வலிமையைப் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×