search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight accident"

    • மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது.
    • விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.

    மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு அரங்கேறி இருக்கிறது.

    நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.

     

    விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

    இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் ஆகும். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த விமானம் வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்குள்ள வயல்வெளி பகுதியில் விழுந்தது.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிசினோ கிராமத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்குள்ள வயல்வெளி பகுதியில் விழுந்தது.

    அங்கிருந்த வீடு மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 5 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

    விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


    விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும்.

    கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது.  #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    இந்தோனேசியாவில் லயன் ஏர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேரும் உயிரிழந்த நிலையில் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கின. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது.

    விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் அடங்குவர்.

    விபத்து உறுதி செய்யப்பட்டதும் விமானம் விழுந்த பகுதிக்கு மீட்பு படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்கள் மிதந்த படி இருந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா பகுதியில் கரை ஒதுங்கியது.

    பயணிகள் கைப்பைகள், துணிமணிகள், மொபைல் போன்கள், ஐ.டி. கார்டுகள் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற பையும் கரை ஒதுங்கிய பொருட்களில் அடங்கும்.

    விமானம் கடலுக்குள் 98 முதல் 115 அடி (30-35 மீட்டர்) ஆழத்தில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கடலுக்குள் மூழ்கி கிடக்கும் விமானம் மற்றும் பயணிகள் உடல்களை தேடும் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற 30 நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    ரோபோவும் (எந்திர மனிதன்) கடலுக்குள் இறக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நேற்று காலை 11 மணி வரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

    அதன் பின்னர் விபத்தில் இறந்த 9 உடல்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.


    இதற்கிடையே, விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஜகார்த்தா சோகார்னோ-கத்தா விமான நிலையத்தில் சோகத்துடன் கூடியுள்ளனர். அவர்கள் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

    விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தன. அவற்றை நேற்று முன்தினம் இரவு என்ஜினீயர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் தென்பகாரில் இருந்து ஜகார்த்தாவுக்கு விமானம் பயணிகளை ஏற்றிச் சென்றது.

    நேற்று காலை ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு நகருக்கு புறப்பட்டு சென்ற போது விபத்துக்குள்ளாகி விட்டது என ‘லயன் ஏர்’ தலைமை செயல் அதிகாரி எட்வர்ட் சிரெய்ட் தெரிவித்தார்.

    விபத்தில் பலியான இந்திய விமானி பவ்வி சுனேஜா கடந்த 2 ஆண்டுகளாக மனைவியுடன் ஜகார்த்தாவில் தங்கியிருந்தார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் டெல்லியில் வசிக்கின்றனர்.

    சுனேஜா விமானி வேலையை மிகவும் நேசித்தார். அந்த பணி செய்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார் என அவரது உறவினர் கபிஷ் காந்தி தெரிவித்தார். #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    இந்தோனேசியாவில் 188 பேருடன் சென்று விபத்தில் சிக்கிய விமானத்தை பவ்யே சுனேஜா(31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
    ஜகர்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
     
    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் சென்றனர்.

    அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

    மாயமான அந்த விமானத்தை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது.  விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.


    இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் குறைவு என அஞ்சப்படும் நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா(31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. இவர் 6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் மிக்கவராவார்.

    இதேபோல், அவரது அருகில் துணை விமானியாக அமர்ந்திருந்த ஹர்வினோ என்பவரும் 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் கொண்டவர் என்று இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
    இந்தோனேசியாவில் லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 188 பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.

    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் இருந்தனர்.

    அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 பைலட்டுகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் அதாவது 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையுடனான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் ஜகார்தா விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமான பைலட்டுடன் தொடர்பு கொள்ள பல்வேறு வகைகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.


    மாயமான அந்த விமானத்தை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்று இந்தோனேசியா மீட்புக்குழு செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதிப்படுத்தினார்.

    இதையடுத்து விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுப்பிடித்தனர். அந்த விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா எனும் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகுதிக்கு கூடுதல் படகுகள் விரைந்துள்ளன.

    விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. அதன் பிறகு லயன் ஏர் பேசஞ்சர்ஸ் நிறுவனம் அந்த விமானத்தில் 188 பேர் இருந்த தகவலை வெளியிட்டது. 188 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    பலியானவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாராவது பயணிகள் உயிருடன் தத்தளிக்கிறார்களா? என்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    188 பேர் உயிரை காவு வாங்கியுள்ள அந்த விமானம் “போயிங் 737 மேக்ஸ் 8” எனும் வகையைச் சேர்ந்ததாகும். 6.20 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 7.20 மணிக்கு தரை இறங்க வேண்டும். ஆனால் 13 நிமிடத்தில் கடலுக்குள் பாய்ந்து விட்டது.

    விமானம் கடலில் விழுந்ததற்கு என்ன காரணம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    விமானத்துக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் உள்ள தகவல் தொடர்பு பதிவின்படி அந்த விமானம் விபத்துக்குள்ளான போது சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த உயரத்தில் இருந்து அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்து விழுந்துள்ளது.


    விழுந்த வேகத்தில் விமானம் துண்டு, துண்டாக உடைந்து சிதறி விட்டதாக கூறப்படுகிறது. கடலில் விழுவதற்கு முன்பு அந்த விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    விபத்துக்குள்ளான போயிங் மேக்ஸ் ரக விமானம் உலக அளவில் அதிகம் விற்பனையாகி இருக்கும் பயணிகள் விமானமாகும். கடந்த ஆண்டுதான் போயிங் மேக்ஸ் விமானங்களில் அதிநவீன விமானங்கள் விற்பனைக்கு வந்தன. அதில் முதல் விமானத்தை லயன் ஏர் நிறுவனம்தான் வாங்கி இருந்தது.

    போயிங் மேக்ஸ் ரக விமானம் எரிபொருள் சிக்கனம் கொண்டது. இந்த ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.

    இந்தோனேசியாவில் கடந்த 2014-ம் ஆண்டு ஏர் ஆசியா விமானம் 162 பயணிகளுடன் கடலில் விழுந்து மாயமானது. அந்த விபத்தின் மர்மம் இன்னும் முழுமையாக தீரவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மிகப்பெரிய விமான விபத்தை இந்தோனேசியா சந்தித்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    திருச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. #TrichyAirport #AirIndia
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து உயரே எழுந்தபோது திடீரென தாழ்வாக பறந்து ஓடு தளத்தின் அருகில் இருந்த சிக்னல் ஆண்டனா, இரும்பு கம்பிகளை உடைத்துக் கொண்டும் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலைக்கும், விமான நிலையத்திற்கும் இடையே கட்டப்பட்டுள்ள 12 அடி உயர காம்பவுண்ட் தடுப்புச்சுவரில் மோதி உடைத்துக் கொண்டும் பறந்து சென்றது.

    விமானம் மோதியதில் 5 சிக்னல் ஆண்டனா, ஓடுதளம் மின்விளக்குகள், ஓடுதளத்திற்கும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இணைப்பாக இருந்த கட்டுப்பாட்டு கருவி ஆகியவையும் சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள பாகம் உடைந்தது. விமான சக்கரங்கள் வானில் விமானம் பறக்கும் போது எரியும் சிக்னல் விளக்குகளும் சேதம் அடைந்தது.

    அதிர்ஷ்டவசமாக விமானம் பெரிய விபத்தில் சிக்காமல் துபாயில் தரையிறக்காமல் மும்பையில் தரையிறக்கப்பட்டு 130 பயணிகளும் அவர்களுடன் பயணித்த பைலட் கணேஷ் பாபு, கோ-பைலட் அனுராக் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் உள்பட 136 பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

    இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேதம் அடைந்த விமானத்துடன் 130 பயணிகளுடன் 5 மணி நேரம் வானில் பறந்த நிகழ்ச்சி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது பயணிகளின் உயிரோடு விளையாடியது போல் உள்ளதாக விமான பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்திற்கு காரணம் என்ன? என கண்டுபிடிக்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், வான்வழி போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்லி மற்றும் சென்னையில் இருந்து விசாரணை நடத்த அதிகாரிகள் இன்று திருச்சி விரைந்தனர்.

    நள்ளிரவு 1.19 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 1.20 மணிக்கு விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புறப்பட்டுள்ளது. விமானம் மோதிய போது இரும்பு கம்பிகள் உடைந்ததையும், காம்பவுண்ட் சுவர் உடைந்ததையும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அடுத்து 20 நிமிடத்திற்குள் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் நடுவானில் பெங்களூர் அருகே சென்று கொண்டிருந்த விமான பைலட் கணேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி விமானம் மோதியது குறித்து தெரிவித்துள்ளனர்.

    அப்போது கணேஷ்பாபு மோதிய நிகழ்வு தனக்கு தெரியவில்லை என்றும் ஆனாலும் விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விமான காக்பிட் அறையில் உள்ள கருவிகள் காட்டுவதாகவும் எனவே விமானத்தை தொடர்ந்து தான் இயக்குவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    விமானம் மோதியதில் உடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.

    இந்த உரையாடல் விபத்து நடந்த 20 நிமிடத்திற்குள் நடந்ததா? அல்லது விமானம் பல மணி நேரம் பறந்த பிறகே விபத்து குறித்து பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விமானம் மோதிய போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் விமான பணியாளர்களிடம் கேட்ட போது அது சாதாரணமானது தான் என தெரிவித்துள்ளனர்.

    இந்த உரையாடல் விவகாரங்கள் பைலட் அறையில் உள்ள கருவிகளில் பதிவாகியிருக்கும். அதை விசாரணைக்குழு ஆய்வு செய்யவுள்ளது.

    விமானம் விபத்தில் சிக்கியது குறித்து தெரியாத பைலட்டும், விமான ஊழியர்களும், விமானத்தை தொடர்ந்து பறக்க செய்து பயணிகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது ஏன்? என்ற விசாரணையையும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    திருச்சி விமான நிலையத்தில் 8,169 அடி நீளமுள்ள ஓடுதளத்தில் குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு விமானம் வானில் ஏற வேண்டும். ஆனால் பைலட் அதிக தூரம் ஓடுதளத்தில் சென்று டேக் ஆப் செய்ததால் புதுக்கோட்டை சாலை அருகே உள்ள சிக்னல் ஆண்டனா மற்றும் காம்பவுண்ட் சுவர் மீது மோதியதாக ஒரு காரணம் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் சென்னையை சேர்ந்த பைலட் கணேஷ்பாபு தனது பணிக்காலத்தில் இதுவரை 3,600 மணி நேரம் பயணித்த அனுபவம் உள்ளவர். விபத்து நடந்த விமானத்தில் அதிக அளவில் சரக்குகள் ஏற்றப்பட்டதால் எடை அதிகரித்து விமானம் வானில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டு விபத்து நடந்ததாகவும் ஒரு காரணம் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து விமான பதிவேடு விபரத்தை கைப்பற்றி விசாரணை நடைபெறவுள்ளது. பைலட், பணியாளர்கள், பயணிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், விமானம் காம்பவுண்ட் சுவரில் மோதிய போது கற்கள் தெறித்ததில் அந்த வழியாக காரில் சென்ற போது காயம் அடைந்த திருவாரூர் மணிமாலா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    விமானத்தின் அடிப்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் நடுவானில் விபத்து ஏற்பட்டிருந்தால் தங்கள் கதி என்னவாகியிருக்குமோ? என அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உறவினர்களிடமும், பேஸ்புக் மூலம் தங்கள் உணர்வை பீதியுடன் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை என தெரிவித்துள்ளனர். #TrichyAirport #AirIndia
    திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் ஐஎல்எஸ் ஆண்டனா மீது மோதியதற்கு பைலட்டின் தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. #AirIndia
    திருச்சி:

    திருச்சியில் இருந்து துபாய்க்கு நேற்றிரவு 1.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 130 பயணிகள், பைலட் மற்றும் பணியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 136 பேர் இருந்தனர்.

    விமானம் ஓடு தளத்தில் சிறிது தூரம் சென்று மேலே எழும்பி பறக்க தொடங்கும்போது மிகவும் தாழ்வாக பறந்தது. அப்போது ஓடுதளத்தின் அருகில் இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா (விமானத்தை தரையிறக்க வழிகாட்டும் கருவி) மீது பயங்கரமாக மோதியது. இதனால் விமானம் குலுங்கி நிலை தடுமாறியது.

    என்றாலும் விமானி விமானத்தை உயரே கிளப்ப முயன்றார். அப்போது அந்த விமானம் எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீதும் பயங்கரமாக மோதியது. 

    பயங்கர சத்தத்துடன் மோதியதால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 

    அதேபோல் விமானம் மோதியதில் 50 அடி நீளத்திற்கு விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்து விழுந்தன. விமான நிலைய பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த முள்வேலிகளும் அறுந்து விழுந்தன.

    விமான நிலையத்தின் அலுவலக ஊழியர்கள் துபாய் விமானம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதை கண்காணிப்பு கேமிராவில் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்த 130 பயணிகளும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அலறினார்கள்.

    ஆனாலும் பைலட் விமானத்தை நிறுத்தவில்லை. தரை இறக்காமல் தொடர்ந்து விமானத்தை மேலே இயக்கினார்.

    திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு டவர்கள் விமானம் மோதியதில் உடைந்து கிடக்கும் காட்சி.

    டவர்கள் மற்றும் சுவரில் மோதியதால் விமானத்தின் முன்பகுதி, டயர் பகுதி ஆகியவை சேதம் அடைந்தன. இந்த சேதத்துடன் விமானம் வானில் பறக்க தொடங்கியது.

    விமானம் குலுங்கியதாலும் விபத்து நடந்ததுபோன்ற சத்தம் கேட்டதாலும் பயணிகள் விமான பணியாளர்களிடம் என்ன நடக்கிறது, ஏன் விமானத்தை நிறுத்தவில்லை, எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கூச்சலிட்டனர். ஆனாலும் விமான பணியாளர்களும், பைலட்டும் பயணிகளை சமாதானப்படுத்தினர்.

    விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை, பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என்றும் அவர்களிடம் பைலட் உறுதி கூறினார்.

    இதற்கிடையே துபாய்க்கு புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும் நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு துபாய் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    விமானம் பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது பைலட் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால் துபாய் விமான நிலையம் அனுமதி மறுத்துவிட்டது. விமானத்தின் டயர்கள் சேதம் அடைந்திருந்ததால் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என்பதால் துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

    இதை அறிந்த பயணிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் பத்திரமாக தரையிறங்குமா? உயிர் தப்புவோமா? என்று பீதி அடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே தவிப்பும், பதைபதைப்புமாக இருந்தனர்.

    அவர்களை விமான பணிப்பெண்கள் தொடர்ந்து சமாதானப்படுத்தி வந்தனர். விமானம் மும்பையில் தரை இறங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், எனவே யாரும் பயப்பட தேவையில்லை, எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர்கள் பயணிகளுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

    விமானம் வானில் 3 மணி நேரம் பயணித்த நிலையில் துபாயில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானிலேயே வட்டமடித்து பின்னர் மும்பை நோக்கி பறந்தது. இன்று காலை 6.10 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

    அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் அனைவரும் துபாய் செல்வதற்கு அங்கு தயாராக மற்றொரு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 130 பயணிகளும் அந்த விமானத்தில் ஏறி துபாய் புறப்பட்டு சென்றனர்.

    இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் ஓடு தளத்தில் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது பைலட்டின் கவனக்குறைவா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    விபத்து நடந்த பகுதிகளை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்த காட்சி.

    விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். விபத்தில் விமான நிலைய ஓடுதளத்தை ஒட்டியுள்ள ஐஎல்எஸ் ஆண்டனா மட்டுமின்றி விளக்குகளும் உடைந்து நொறுங்கியதோடு, ஓடுதளமும் சேதம் அடைந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று காலை விமான நிலையத்திற்கு வந்து பார்த்தார். மேலும் விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் ப.குமார் எம்.பி., திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஆகியோரும் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் கூறுகையில், திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுதளத்தை விட்டு மேலே எழும்பும்போது ஏன் குறைந்த உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்தது என பைலட்டிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். #AirIndia  
    ×