என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்புப் பெட்டி"

    • 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
    • 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.

    241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், 'பிளாக் பாக்ஸ்' (கருப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப் பதிவு கருவி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்த இந்த சோகமான விபத்துக்கான உண்மையான காரணத்தை இந்தக் கருவி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விமானம் "மேடே" (MAYDAY) அழைப்பை விடுத்த பிறகு ஏற்பட்ட தகவல்தொடர்பு துண்டிப்பு மற்றும் பிற எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை இது வெளிப்படுத்தும்.

    பிளாக் பாக்ஸ் என்றால் என்ன?

    பிளாக் பாக்ஸ் என்பது விமானப் பயணத்தின்போது விமானம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும். இது 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெடிப்புகள், தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துக்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிளாக் பாக்ஸில் என்ன இருக்கும்?

    ஒரு பிளாக் பாக்ஸில் முக்கியமாக இரண்டு பதிவு கருவிகள் உள்ளன.

    காக்பிட் குரல் பதிவு கருவி (Cockpit Voice Recorder - CVR) - இது விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளைப் பதிவு செய்யும்.

    விமானத் தரவு பதிவு கருவி (Flight Data Recorder - FDR) - இது உயரம், வேகம், விமானப் பாதை, ஆட்டோபைலட் நிலை போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.

    விபத்துக்களை எவ்வாறு தாங்குகிறது?

    பிளாக் பாக்ஸ், எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருட்களால் ஆனது. 3,400 மடங்கு ஈர்ப்பு விசையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, துருப்பிடிக்காத எஃகு அல்லது டைட்டானியத்தால் ஆன 'கிராஷ் சர்வைவபிள் மெமரி யூனிட்' (Crash Survivable Memory Unit). இதில் உள்ளது.

    இது அதிக வெப்பம் மற்றும் குளிர் போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்து தப்ப உதவுகிறது. மேலும், விபத்தின் தாக்கம் பொதுவாக குறைவாக இருக்கும் விமானத்தின் வால் பகுதியின் கடைசியில் இந்த கருவிகள் வைக்கப்படுகின்றன.

    விசாரணைக்கு எப்படி உதவுகிறது?

    விமான விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மறுகட்டமைப்பு செய்யவும் இந்த இரண்டு கருவிகளும் உதவுகின்றன. விபத்துக்குப் பிறகு பிளாக் பாக்ஸ்களிலிருந்து தரவுகளை ஆய்வு செய்ய பொதுவாக 10-15 நாட்கள் ஆகும். 

    இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

    விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


    விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும்.

    கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது.  #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    ×