என் மலர்
நீங்கள் தேடியது "plane"
- சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது.
- அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.
சேலம்:
இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது. அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கென சென்னையில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஓடுதள உராய்வு சோதனை கார் சேலம் விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விஜயவாடா, ைஹதராபாத், திருப்பதி, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் விமான நிலையங்களில் இருந்து 17 ஊழியர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் விமான நிலையத்தில் ஓமலூர் தாசில்தார் வள்ளி முனியப்பன் தலைமையில் விமான நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், பறவைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குப்பை, இறைச்சி கழிவை விமான நிலையத்தை சுற்றி கொட்டப்படாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.
- தமாரா கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.
- தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆம்ஸ்டர்டாம் :
ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தமாரா என்கிற கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரை நெருங்கி கொண்டிருந்தபோது தமாராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியானோ என்கிற பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார். அதேபோல் விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 டாக்டர்கள் மற்றும் ஒரு நர்சும் உதவிக்கு சென்றனர்.
தனக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா பரிதவித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமானதையே அறியாமல் குழந்தை பெற்றெடுத்ததை எண்ணி தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார்.
தமாரா குழந்தை பெற்றெடுத்த விஷயம் அறிந்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பிரசவத்தின்போது தனக்கு பெரிதும் உதவிய சக பயணியான மாக்சிமிலியானோவின் பெயரை தனது குழந்தைக்கு தமாரா சூட்டினார்.
- விமான நிலைய ஊழியர்கள் அந்த விமானத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
- அரண்மனையை போல் அனைத்து சொகுசு வசதிகளும் அந்த விமானத்தில் உள்ளன.
பெங்களூரு :
உலகின் மிகப்பெரிய வணிக ரீதியிலான பயணிகள் விமானம் இ.கே.562 வகையை சேர்ந்தது. இது எமிரெட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ380 ஆகும். இது இரண்டு அடுக்கு வசதியை கொண்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. அரண்மனையை போல் அனைத்து சொகுசு வசதிகளும் அந்த விமானத்தில் உள்ளன. அந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெங்களூருவுக்கு வருகிற 30-ந் தேதி முதல் அந்த விமான போக்குவரத்தை தொடங்க முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே, அந்த விமானத்தின் சேவை 14-ந் தேதி (நேற்று) முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அந்த மிகப்பெரிய விமானம் துபாய்-பெங்களூரு இடையே போக்குவரத்தை தொடங்கியுள்ளது. அந்த விமானம் முதல் முறையாக நேற்று துபாயில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த விமானத்தை கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பென்னா, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாக இயக்குனர் ஹரி மரார் மற்றும் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த விமானத்தில் 224 பயணிகள் பயணம் செய்து பெங்களூரு வந்தனர்.
விமான நிலைய ஊழியர்கள் அந்த விமானத்தை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விமான போக்குவரத்து மூலம் பெரிய ரக விமானங்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் மீண்டும் மாலை 6.40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு துபாயை சென்றடைந்தது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 4 விமான நிலையங்களில் மட்டுமே ஏர்பஸ் ஏ380 ரக விமானங்களை கையாளும் திறன் உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் 3-வதாக தென்இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவுக்கு அந்த பெரிய விமானம் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விமானத்தில் எகானமி, பிசினஸ் மற்றும் முதல் வகுப்பு வசதி உள்ளது. எகானமி வகுப்பில் இருக்கைகள் அகலமாகவும், கால்கள் வைக்க விசாலமான வசதியும் உள்ளது.
பிசினஸ் வகுப்பில் இருக்கைகள் தட்டையாக இருக்கிறது. முதல் வகுப்பில் தனி அறைகள், குளியல் அறைகள் போன்ற வசதிகள் உள்ளன. அந்த விமானம் தினமும் துபாயில் இருந்து 21.25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9.25) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
மீண்டும் அதே நாள் அதிகாலையில் 4.30 மணிக்கு அந்த விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 7.10 மணிக்கு துபாய் சென்றடையும்.
- இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
- அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார்.
இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த வாரம் அவர் அதே பள்ளி மாணவர்களுடன், பெற்றோரையும் கோவை முதல் சென்னை வரை 110 பேரை விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.
சென்னையில் மெட்ரோ ரெயில், எலக்ட்ரிக் ரெயில் உள்ளிட்டவற்றிலும் அவர்களை அழைத்து மகிழ்ச்சிப்படுத்தினார். விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை பார்த்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களுக்கு எவ்வளவோ கனவுகள் உண்டு. இதில் எங்கள் பள்ளிகளுக்கு வரும் சில தன்னார்வலர்கள் எங்களுக்கு புத்தாடை நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வந்தனர். ஆனால் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் எங்களுக்கு அனுபவ ரீதியாக எது தேவையோ அதை செய்து வருகிறார். இதில் நாங்கள் விமானத்தில் சென்று வந்தது புது அனுபவமாக இருந்ததாக கூறினர்.
இதுகுறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்று அரசியல் தலைவர்களாகவும், பெரிய பதவிகளிலும் உள்ளனர். இன்றைய சூழலில் பெற்றோர்களிடையே தனியார் கல்வி பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமையாக உள்ளனர். ஆனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சிறிதளவு ஊக்குவித்தால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமைகள் இன்னும் அதிகரிக்கும் என்றார்.
அடுத்த கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை மீண்டும் வெள்ளியங்காடு, காரமடை அரசு பள்ளிகளில் சிறந்து முறையில் படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- அதீத சப்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்தது.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வானில் காதை பிளக்கும் பெரும் சப்தம் கேட்டது.அப்போது ,வீடுகளில் உள்ள ஜன்னல், பாத்திரங்கள் அதிர்ந்தன. இந்த அதீத சப்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் பொது மக்கள் பீதியில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் இந்த சத்தம் கேட்டதா என கேட்டுக்கொண்டனர்.
மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வானில் ராணுவ விமானங்கள் பறக்கும் போதும் போர் விமானப் பயிற்ச்சியின் போது உருவாகும் வெள்ளைக்கோடு போன்ற படங்களை பகிர்ந்து,இது விபத்தாக இருக்கலாம் என தகவல்களை பரவின. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து முன்னாள் படைவீரர் ஒருவர் கூறுகையில்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து அவ்வப்போது பயிற்ச்சிக்காக போர் விமானங்கள் ,ஹெலிகாப்டர்கள் வான் பரப்பில் பயிற்சியில் ஈடுபடுவது உண்டு.சமீப காலமாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜாஸ்,மிக் மற்றும் ரபேல் ரக போர் விமானங்களில் விமானப்படையினர் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சி 17 க்ளோப் மாஸ்டர்,சி 130 ஜே சூப்பர் ஹெர்குலீஸ் ஆகிய ராணுவ ட்ரான்ஸ் போர்ட் விமானங்களையும் பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர். சூலூர் விமானப்படை ஓடு தளத்தில் இருந்து கிளம்பும் இந்த விமானங்கள் திருப்பூர் மாவட்டத்தின் வான் பரப்பில் பறந்த படி உட்சபட்ச வேகத்தில் செல்வது, ரேடாரில் சிக்காமல் தாழ்வாக பறந்து செல்வது,எதிரி நாட்டு வான் பரப்பில் மிக உயரமாக ஊடுருவி உளவு சேகரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் அதி வேகத்தில் செல்ல சோனிக் பூம் எனப்படும் முறையை கையாண்டு ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணிக்க எரிபொருளை வெளியிட்டு எரிக்கும் போது கிடைக்கும் அதிக அழுத்தம் காரணமாக உச்சபட்ச வேகத்துடன் போர் விமானம் முன்னோக்கி பாயும்.அப்போது எரிபொருள் மொத்தமாக எரியும்போது வெடிசப்தம் எழும். வானில் இப்படி நிகழும் போது பரவலாக பல கிலோ மீட்டருக்கு இந்த சப்தம் கேட்கும்.மேலும் லேசான அதிர்வுகளும் ஏற்படும்.
அதிக ஈரப்பதம் மேகங்களில் இருக்கும் போது, இவ்வாறு சோனிக் பூம் ஏற்படுத்தி வேகமாக செல்லும் போது மிக மிக அதீத சப்தம் காதை பிளக்கும் வகையில் இருக்கும். இது போன்ற ஒரு சத்தமே காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் கேட்டிருக்கும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
ஆனால் வெடிசப்தம் கேட்டது முதல் சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகள் கிளம்பி வரும் நிலையில்,இந்த வெடிசத்தம் குறித்து அதிகாரிகள் முறையாக விசாரித்து கூற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை எனவும்,விபத்து என பரவிய தகவல் புரளி எனவும் தெரியவந்தது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் திறக்க முடியவில்லை. எனவே பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். #Canada #UnitedAirlines

