search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence minister"

    • கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும்.
    • ஓய்வு பெறும் இளம் ராணுவ வீரர்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்.

    மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்காக, http://www.affdf.gov.in/என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர்  தெரிவித்துள்ளதாவது:

    சுதந்திரம் முதல், போர்களில் வெற்றி பெறுவது, எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதிலும் நமது வீரர்கள் ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் உடல் ஊனமுற்றனர். எனவே நமது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பது நமது தலையாய கடமை. எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களால் தான், அச்சமின்றி நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக உறங்க முடிகிறது.

    நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொள்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அது அனைவரின் கடமை. தேச பாதுகாப்பு வலுவாக இல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் தொழில்துறைகளும், வர்த்தகமும் வளர முடியாது. என்று தெரிவித்தார். ராணுவ வீரர்களின் நலனுக்காக பெரும் நிறுவனங்கள் வழங்கி வரும் நன்கொடையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதில் சுமார் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு தனியார் துறையினர் வேலை வழங்க வேணடும். ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    • கம்போடியா பிரதமரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின் பேரில், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.

    23ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும் கம்போடியா பிரதமரையும் ராஜ்நாத்சிங் சந்திக்கிறார். ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை.
    • ஆறு வருட காலக் கெடுவின் கீழ் கொள்முதல் செய்யப்படும்.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

    டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து 3வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

    டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களின்படி, 2500 பொருட்கள் ஏற்கனவே உள்ளூர்மயமாக்கப் பட்டுள்ளன.

    458 பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உள்ளூர் மயமாக்கப்படும். அவற்றிலும் இதுவரை 167 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ==

    • பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.
    • புதிய வகை ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

    பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்திய கடற்படை, பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரால் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆயுதங்கள் குறித்த கண்காட்சியையும் திறந்து வைத்த அவர், நவீன ஆயுதங்களை பார்வையிட்டார். 


    பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இனி வரும் நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களே தேவை. பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.ட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்கால சவால்களை ராணுவ வீரர்கள் எதிர்கொள்வதற்கு வலிமையான மற்றும் தற்சார்பு அடிப்படையிலான புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்.

    இதற்காக ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் உள்நாட்டுத் திறன் ஆகியவற்றின் மீதான நமது நிலைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுத உற்பத்தி வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமாகிறது.

    உலகில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு மூலம் அத்துறை வலுப்பெறும். இதை உணர்ந்து மத்திய அரசு இத்துறையில் தனியார் துறை பங்கேற்பதற்கான பல்வேறு தடைகள் நீக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே.
    • நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது.

    ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. அனைத்து வகையான எதிர்காலப் போர்களிலும் போராட ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், உபகரணங்களைத் தயாரிக்கும் தற்சார்பு சூழலை உருவாக்க தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது. புதிய இந்தியா, தீய நோக்கம் கொண்ட எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

    வலிமையான, வளமான, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிகரமான இந்தியாவை உருவாக்குவதே, உயர்ந்த தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

    1965 மற்றும் 1971 நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அது இந்தியா மீது மறைமுக யுத்தத்தை மேற்கொண்டது.

    ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும், நமது துணிச்சலான வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம்.
    • செயற்கை நுண்ணறிவை அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றம் தொழில்நுட்பங்களை வெளியிட்டார்

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மனித குல முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார். இந்த பூமியில் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினம் மனிதன் என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் அவர் கூறினார்.

    மனித மூளை படைப்பாற்றல் கொண்டது, அறிவாற்றலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது, அறிவாற்றலை உண்டாக்கும் நுண்ணறிவை தூண்டக்கூடியது என்பது வியப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்றாலும், எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே, செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    செயற்கை நுண்ணறிவை மனிதகுல முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் பணிகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினரிடம் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கிறார். அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். #SriLankabombings #Christchurchattacks #RuwanWijewardene
    கொழும்பு:

    நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் 3 தேவாலயங்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. மேலும் 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 இந்தியர்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர்.



    இந்நிலையில், இந்த கோரச் சம்பவம் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்த அந்நாட்டின் ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனே ‘நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார். #SriLankabombings #Christchurchattacks #RuwanWijewardene 
    பெங்களூருவில் நேற்று 12-வது சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். #NirmalaSitharaman
    பெங்களூரு:

    12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்க விழா நேற்று பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடந்தது. இதில் ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் 600 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்காட்சியில் போர் விமானங்கள் மட்டுமின்றி ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், பயணிகள் விமான நிறுவனம் ஆகியவையும் கலந்து கொண்டுள்ளன. இதன்மூலம் உலக அளவில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.



    இந்த கண்காட்சி 100 கோடி வேலைவாய்ப்புகளின் ஓடுதளமாக உள்ளது. இந்தியாவில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ‘மேக் இன் இந்தியா’, அதாவது இந்தியாவில் தயாரிப்போம் என்பதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம். உற்பத்தி துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது.

    ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தில் உற்பத்தி துறையின் மூலம் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

    கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை ராணுவத்திற்கென 150 தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 126 உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 950 கோடி ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்.

    இந்தியாவில் சந்தை வாய்ப்பு நன்றாக உள்ளது. ராணுவத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு விதிகளை தளர்த்தி உள்ளோம். இதன்மூலம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

    பெங்களூரு-ஓசூர்-சென்னை இடையே ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் ஒரு விமான வழித்தடம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவையில் விமான தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

    விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி, விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, முப்படை தளபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் விமான சாகசங்கள் தொடங்கின. முதலில் தனுஷ், சாரங், சாரஸ் ஹெலிகாப்டர்கள், சுகோய், தேஜஸ் மற்றும் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின. அதைத் தொடர்ந்து இந்திய ராணுவப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் குறிப்பாக சாரங் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதுவதுபோல் வந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.

    இதுமட்டுமின்றி அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எப்-16 என்ற வகையைச் சேர்ந்த போர் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டது. எல்.யூ.எச்., எல்.சி.எச். ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. ரபேல் போர் விமானங்கள் வானத்தில் தாறுமாறாக சுழன்று சாகசம் நிகழ்த்தின.

    இந்த கண்காட்சியில் ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல், உக்ரைன் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 விமான உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று அரங்குகளை அமைத்துள்ளன.

    வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
    தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் 20-ந் தேதி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். #NirmalaSitharaman #DefenceCorridor
    புதுடெல்லி:

    தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் 20-ந் தேதி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.

    விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும். இதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்குகிறது. அதேபோல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் அன்றே தொடங்கப்படும் என்று ராணுவ கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.
    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக வாஷிங்டன் வந்துள்ளார். அமெரிக்க ராணுவ மந்திரியுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்தடைந்தார்.



    வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யும் நிர்மலா, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் என் மாட்டிஸ்-ஐ சந்தித்துப் பேசுகிறார்.

    அமெரிக்காவாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    சமீபத்தில் மரணம் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(94) உடலுக்கு மலர் வளையம் வைத்து இந்தியாவின் சார்பில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்திய ராணுவத்தில் அதி நவீன பீரங்கிகள் சேர்க்கப்பட்டன. #DefenceMinister #NirmalaSitharaman #MajorArtilleryGun
    மும்பை:

    இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதி நவீன பீரங்கிகளை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் 145 எம்777 ரக பீரங்கிகளை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.



    இதேபோல் இந்தியாவின் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்திடம் ரூ.4,366 கோடிக்கு கே9 வஜ்ரா என்னும் நவீன ரக பீரங்கியும் வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் ராணுவத்தில் தற்போதுள்ள பழைய பீரங்கி வாகனங்களை அகற்றும் வகையில் ‘கம்போசிட் கன் டோவிங் வெகிகிள்’ என்னும் நவீன பீரங்கி வாகனமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த 3 வித நவீன பீரங்கிகளும் இந்திய ராணுவத்தில் நேற்று முறைப்படி சேர்க்கப்பட்டது.

    இதற்கான விழா மராட்டிய மாநிலம் தியோலாலி நகரில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் நடந்தது. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு முறைப்படி மூன்று வித பீரங்கிகளையும் ராணுவத்தில் சேர்த்தார். நிகழ்ச்சியில் ராணுவ ராஜாங்க மந்திரி சுபாஷ் பாம்ரே மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் கூறும்போது, “அடுத்த 2 ஆண்டுகளில் 100 கே9 ரக பீரங்கிகளும், 145 எம்777 ரக பீரங்கிகளும் முழுமையாக நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விடும்” என்றார்.

    எம்777 ரக பீரங்கிகள் தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய ராணுவங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களிலும் இந்த பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டது.

    இலகுவான எடை கொண்ட இந்த ரக பீரங்கிகளை உயரமான இடத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் சென்று 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×