search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி"

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அரியலூரில் பிளேடு கண்ணாடி துகள்களை விழுங்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது
    • திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர், சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சத்தியாவின் மகன் வல்லவராஜ்(வயது 25). இவரும், இவரது சகோதரர் தர்மராஜ்(23) மற்றும் நண்பர் குமார் ஆகியோர் அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் பூஜை செய்வதாகவும், செய்வினை எடுப்பதாகவும் கூறி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விஜயகுமார் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லவராஜ், தர்மராஜ், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தர்மராஜ், குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்நிலையில் வல்லவராஜை வழக்கு விசாரணைக்காக அரியலூர் குற்றவியல் கோர்ட்டில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஆக்சா பிளேடு பாகங்கள் மற்றும் கண்ணாடி துகள்களை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றில் இரும்பு துண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராமநாதபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி. வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கிய ரூ.900 மதிப்புள்ள தைராய்டு மற்றும் சர்க்கரை இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.

    இலவச மருத்துவ பரிசோதனை முகாமிற்கு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்வர் அலி வரவேற்றார்.

    பி.வி.எம். அறக்கட்டளை சேர்மன் அப்துல் ரசாக் அறிமுக உரை நிகழ்த்தினார். முகாமை முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பி.வி எம். அறக்கட்டளை தலைவர் மற்றும் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன்னாள் தலைவர் பக்கீர் முகமது, பொதுச்செயலாளர் ஹமீது, திட்ட இயக்குனர் சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவர் அல்தாப் உசேன் முன்னிலை வகித்தனர். செய்யது முகம்மது அறக்கட்டளை சேர்மன் சுல்தான் தொகுத்து வழங்கினார். இதில் ராமநாதபுரத்தில் முதன் முறையாக கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் கண்ணாடி தேவை என டாக்டர் பரிந்துரை செய்தவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

    சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் மற்றும் தைராய்டு சர்க்கரை பரிசோதனை செய்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன், டாக்டர் புரோஸ்கான், பொட்டகவயல் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹக்கீம், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகராட்சி தி.மு.க.கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காளி, ராமநாதன், எஸ்.டி.பி.ஐ, மாவட்ட பொருளாளர் நஜிமுதீன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி சீனி இப்ராஹிம், பா.ம.க, மாவட்ட செயலாளர் ஹக்கீம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ அணி தலைவர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முகமது கனி நன்றி கூறினார்.

    ×