என் மலர்

    நீங்கள் தேடியது "drunk"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொலைந்த செல்போனை கண்டுபிடித்து தரும்படி ரோட்டில் உருண்டு புரண்டார்
    • கோவில்பாளையம் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் போலீசார் பணியில் இருந்தனர்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அவர் அங்கு பணியில் இருந்த போலீசா ரிடம் தனது செல்போனை யாரோ பறித்து சென்று விட்டதாக கூறினார்.போலீசார் நீ தற்போது குடி போதையில் இருக்கிறாய். போதை தெளிந்ததும் வா என கூறி வெளியே அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டில் படுத்து தனது செல்போனை மீட்டு தரும்படி ரகலையில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்தார்.
    • பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவில் வாலிபர் ஒருவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்தார். போலீசார் அந்த காரை தடுத்தி நிறுத்தினர். ஆனால் வாலிபரோ காரை நிறுத்தாமல் ஓட்டினார். அப்போது சாலை தடுப்புகளில் மோதிய கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை மடக்கி பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் வாலிபர் காரை நிறுத்தவில்லை. வேகமாக ஓட்டினார். அப்போது நிலை தடுமாறிய கார் போக்குவரத்து போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் போலீஸ் வாகனத்தின் பின் பகுதி சேதம் அடைந்தது. வாலிபரின் காரும் சேதமானது.

    காரை வேகமாக ஓட்டிய வாலிபர் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்துள்ளார். இதனால் வாலிபரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக வாலிபர் நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்த வாலிபரை போலீசார் வெளியில் வர சொன்னார்கள். அப்போது அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தது தெரியாமல் என்னை அடித்தது யார்? என கேட்டு போலீசுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    போலீசார் அவரிடம் விபத்தில் சிக்கியதை எடுத்துக்கூறுவதற்குள் படாத பாடுபட்டனர். இதையடுத்து வாலிபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டனர். அவரது பெயர் ரியாஸ் அகமது என்பதும் ராயப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போதையில் கார் ஓட்டிய குற்றத்துக்காக ரியாஸ் அகமதுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும், உரிய ஆவணங்களை காட்டாததற்காக ரூ. 500-ம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத குற்றத்துக்காக ரூ. 1,500ம் என தனிதனியாக அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.

    அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.

    இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.

    இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
    • சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.

    மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.

    அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.

    இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

    இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.

    இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
    • அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணராஜ் எலி மருந்து சாப்பிட்டு மயங்கினார்.

    அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
    • இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் கீழ விடயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.

    பின்னர் நடந்து வந்தபோது இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேலப்பழங்கூரை சேர்ந்த வர் நாராயணன். இவரது மனைவி அய்யம்மாள் (40). இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அய்ய ம்மாள் மற்றும் பிள்ளை களை ஆபாச வார்த்தை களால் திட்டியதோடு கூரை வீட்டுக்கும் தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணி (43)/ இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சுதாகர், ரமணியிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாய்தகராறு அடிதடி சண்டையாக மாறியது. ரமணி மீது சந்தேக மோகத்தால் சுதாகர் மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து ரமணியை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு ரமணிக்கு மோசமான நிலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரமணி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவர் சுதாகரை கைது செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன மருதூர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), கூலித் தொழிலாளி.
    • காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜா வாய்க்காலிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை ஆனங்கூர் பகுதியில் உள்ள ராஜா வாய்க்கால் அருகில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாய்க்கால் பாலத்தின் அருகே சென்ற போது தவறி ராஜா வாய்க்கால் தண்ணீரில் முருகன் விழுந்துள்ளார்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜா வாய்க்காலிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முருகன், ராஜா வாய்க்கால் தண்ணீரில் விழுந்ததை பார்த்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜா வாய்க்காலில் நெடுகிலும் பல்வேறு பகுதி களில் தேடிப்பார்த்தும் அவரது உடல் கிடைக்கவில்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
    • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    4 மாணவிகள்

    இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பரபரப்பு தகவல்

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

    விஷம் குடித்தனர்

    இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

    விடுதி ஊழியர்களிடம் விசாரணை

    மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo